news

News March 20, 2025

ரூ.10,000க்கு தரமான லேப்டாப் சாத்தியமா? தங்கமணி கேள்வி

image

ரூ.10,000க்கு எப்படி தரமான மடிக்கணினி வழங்க முடியும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார். 20 லட்சம் லேப்டாப் வாங்க ரூ.2,000 கோடி தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பிய அவர், தரமான மடிக்கணினியை வெறும் ரூ.10,000 எப்படி வழங்க முடியும் என வினவினார். இதற்கான நிதியை தமிழக அரசு உயர்த்தும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

News March 20, 2025

குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க பிளீஸ்…

image

பிறந்து ஒரு வயதான குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுப்பதில் மிக கவனம் தேவை. பெரியவர்கள் போல் அவர்களுக்கு ஜீரண சக்தி இருக்காது என்பதால் நட்ஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல் பாக்கெட் பால், தேன், கடினமான காய்கறிகள், திராட்சை, கடல் சார்ந்த உணவுகள் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. மிட்டாய்களை கொடுக்கவே கூடாது. கடைகளில் வாங்கும் பிஸ்கட் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்.

News March 20, 2025

IPL-ல் அந்த தடை நீங்கியது – பவுலர்களுக்கு குட் நியூஸ்!

image

பந்தில் எச்சிலை தேய்ப்பது மூலம் பவுலர்கள் எளிதாக ஸ்விங் செய்ய முடியும். கொரோனா காலத்தில், நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இதற்கு ஐசிசி தடை விதித்தது. தற்போதுவரை சர்வதேச போட்டிகளில் இத்தடை தொடரும் நிலையில், IPL-ல் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பந்தில் எச்சில் தேய்ப்பதற்கு இருந்த தடையை ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ நீக்கியுள்ளது. சர்வதேசப் போட்டிகளுக்கும் தடை நீங்குமா? உங்கள் கருத்து என்ன?

News March 20, 2025

மரணம்தான் அவர்கள் முன் உள்ள ஒரே வழி: ப.சி., வேதனை

image

நேற்று முன்தினம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 436 பேரில், 183 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் என ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம், அமைதிக்கு இந்த படுகொலைகள் தீர்வாகுமா என வினவியுள்ள அவர், ஹமாஸ்- இஸ்ரேல் இடையிலான போரில், காசா மக்கள்தான் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். அம்மக்களுக்கு இருக்கும் ஒரே வழி மரணிப்பதுதான் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

News March 20, 2025

யூடியூப் பார்த்து எவரெஸ்ட் சிகரம் ஏறிய சிங்கப்பெண்!

image

உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் ஏறுவது மலையேற்ற வீரர்களின் கனவு. நன்கு பயிற்சி பெற்றவர்களுக்கே எவரெஸ்டில் ஏறுவது கடினமான ஒன்று. ஆனால், கேரளாவைச் சேர்ந்த வசந்தி(59), யூடியூப் வீடியோக்களை மட்டுமே பார்த்து எவரெஸ்டின் Base Camp-க்கு சென்று அசத்தியுள்ளார். கணவரை இழந்து தையல் தொழில் செய்துவரும் இவர், அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார். சாதனை படைத்த வசந்தி நிஜமாகவே சிங்கப் பெண்தான்!

News March 20, 2025

தடையை தகர்த்த ஷகிப் அல் ஹசன்

image

சந்தேகத்திற்குரிய வகையில் பந்து வீசுவதாக கூறி, வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் பந்து வீச ஐசிசி தடை விதித்திருந்தது. இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனாலும் துவண்டு போகாத ஷகிப், பல கட்ட முயற்சிக்கு பின் பந்துவீச்சை சரி செய்தார். அதன் தொடர்ச்சியாக 3ஆவது முறை சோதனையில் விதிமுறைக்கு உட்பட்டு பந்து வீசினார். இதனால் அவர் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

News March 20, 2025

இனி அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்

image

மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள தமிழக அரசு, தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் இன்று பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், 2025ஆம் ஆண்டு முதல் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கக் கூடிய மாணவர்கள், எந்த பள்ளிக்கூடத்தில் (சிபிஎஸ்இ, இன்டர்நேஷனல்) பயின்றாலும் தமிழை கட்டாயம் படிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

News March 20, 2025

“மார்பகங்களை தொட்டாலும் ரேப் முயற்சி இல்லை”

image

பாலத்துக்கு அடியில் சிறுமியை(11) இழுத்துச் சென்ற 2 இளைஞர்கள், அவளின் மார்பகத்தில் கைவைத்து, பைஜாமா நாடாவையும் அறுத்துள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் போக்சோ ரேப் வழக்கு போடப்பட்டது. இதை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், மார்பகத்தை தொடுவதும், கீழாடை நாடாவை அறுப்பதும் ரேப்புக்கு தயாராவதாக இருக்கலாம். ஆனால் ரேப் செய்ததாகாது என்றும், வழக்குப்பிரிவை மாற்ற உத்தரவிட்டும் தீர்ப்பளித்துள்ளது. உங்க கருத்து?

News March 20, 2025

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? அன்புமணி

image

பிஹார், தெலங்கானாவை பின்பற்றி தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 2008ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு எனவும், சமூக நீதியை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

News March 20, 2025

ஆண்குறியை பிளேடால் அறுத்து… கொடூரம்

image

உ.பி.யில் நடந்துள்ள ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜான்பூர் அருகே வீட்டுக்கு வெளியே ஒன்றரை வயது ஆண்குழந்தை விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த பக்கத்துவீட்டுப் பெண், பிளேடால் குழந்தையின் ஆணுறுப்பை வெட்டிவிட்டு தப்பிவிட்டார். ஆபத்தான நிலையில், தற்போது குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. முன்விரோதம் காரணமாக அந்த பெண் அப்படி செய்ததாக கூறப்படுகிறது.

error: Content is protected !!