India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 ஐபிஎல் தொடருக்காக, CSK வீரர்கள் (நியூசிலாந்து) ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், டேரில் மிட்செல் ஆகியோர் சென்னை வந்தடைந்தனர். டேவன் கான்வே, காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார். மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், சென்னை அணி பெங்களூருவை எதிர்கொள்கிறது. இதற்காக தீவிர பயிற்சியில் இறங்கியுள்ள சென்னை அணி, முதல் போட்டியில் வெற்றி பெறுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிமுக ரூ.6.05 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதுதொடர்பாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களில்,” தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிமுக ரூ.6.05 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.5 கோடி அளித்துள்ளது. சமாஜ்வாதி ரூ.14.05 கோடி, அகாலிதளம் ரூ.7.26 கோடி நன்கொடை பெற்றுள்ளன” எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பாமக எம்.எல்.ஏ அருள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன்மூலம், அதிமுக – பாமக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறுவது உறுதியாகியிருக்கிறது. அதேநேரம், பாமக பாஜகவுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பாமக நாளை வெளியிடும் என்று தெரிகிறது.
கலிபோர்னியாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில், இந்திய வீரர் புதிய சாதனையை படைத்துள்ளார். ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், இந்தியாவின் குல்வீர் சிங் 27.41.81 நிமிடங்களில் இலக்கை அடைந்து 2ஆம் இடம் பிடித்தார். இதன் மூலம் 2008ஆம் ஆண்டு பதிவான இந்தியாவின் சுரேந்திர சிங் (28:02.89) சாதனையை முறியடித்தார். இருப்பினும், 41 வினாடிகள் தாமதமானதால் ஒலிம்பிக் போட்டி வாய்ப்பை தவறவிட்டார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் 2வது அதிகபட்சமாக திரிணாமுல் காங்கிரஸ் ரூ.1,397 கோடி நன்கொடை பெற்றுள்ளது. அதற்கடுத்து, காங்கிரஸ் கட்சி 3வது அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,334 கோடி நன்கொடை பெற்றுள்ளது. 4ஆவது அதிகபட்சமாக சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ரூ.1,332 கோடி பெற்றுள்ளது. பிஜேடி ரூ.944 கோடியும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ.442 கோடியும், டிடிபி ரூ.181 கோடியும் பெற்றுள்ளன.
இந்தி பிக்பாஸ் OTT 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் எல்விஷ் யாதவ் நொய்டா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபரான இவர், பாம்பு விஷத்தை அனுமதியின்றி விற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்விஷ் சில மியூசிக் வீடியோக்களிலும் நடித்து வட இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்துள்ளார். இந்நிலையில், இவரது கைது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் அரசியலில் இருந்து விலகியதாக நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 1989-ல் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய பாக்யராஜ், சில ஆண்டுகளில் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்தார். இதற்கு தொழில் பாதிக்கப்பட்டதும், கட்சி ஆரம்பித்த பிறகு படம் சரியாக ஓடாத காரணத்தாலும், அரசியலில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் முடிந்து விரைவில் கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. இந்த நாட்களில் பலரும் சுற்றுலா செல்ல விரும்புவது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குதான். அதில், பரம்பிகுளம், டாப்ஸ்லிப் பகுதிகளுக்கு இதுவரைக்கும் போகாதவங்க நிச்சயம் முயற்சி பண்ணிப் பாருங்க. கேரள வனத்துறையைச் சேர்ந்த பரம்பிகுளம் புலிகள் காப்பகத்துல ட்ரெக்கிங், சஃபாரி போன்ற சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக ரூ.656 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள விவரங்களில், திமுக ரூ.656.5 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றிருப்பதாகவும், இதில், லாட்டரி கிங் சான்டியாகோ மார்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ.509 கோடியும் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.8,250 கோடி நன்கொடை பெற்றுள்ளது. உச்சநீதிமன்றத்திடம் இருந்து பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பாஜக 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரை ரூ.2,190 கோடியும், 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை ரூ.6,060 கோடியும் நன்கொடை பெற்றதாகவும், இது தேர்தல் பத்திர நிதியில் 50% என்றும் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.