India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வழக்கமாக சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், விடுமுறை அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர், தனியார் என அனைத்துப் பள்ளிகளும் (மார்ச் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை அட்டவணை) அடிப்படையில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பிறமொழிப் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும், மேகதாது அணை கட்ட விடாமல் தடுக்கும் தமிழக அரசுக்கு கண்டனம், சாம்பாஜி சிலையை அகற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கர்நாடகா – தமிழக எல்லையில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. தமிழக எல்லையான ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
வரும் 24, 25ஆம் தேதிகளில் நடைபெறவிருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால், திங்கள்கிழமை வழக்கம்போல் வங்கிகள் செயல்படும்.
சட்டப்பேரவையில் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துக் கொள்ளும் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, தன்னை கசந்து கொண்டே திமுக கூட்டணியில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று வேல்முருகன் பேசியிருந்தார். இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து அவரே முடிவு செய்யலாம் என வெளிப்படையாக சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
அரசு போக்குவரத்து கழக மாநகர பஸ்களில் மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள், வயதான தமிழறிஞர்களுக்கு இலவசமாக பயணம் மேற்கொள்ள அரசு பாஸ் அளித்துள்ளது. இந்த பாஸின் செல்லுபடியாகும் காலம் வருகிற 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இலவச பஸ் பாஸ் செல்லுபடியாகும் அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல, நாளை முதல் மார்ச் 25 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
18வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் KKR-RCB மோதுகின்றன. இன்றையப் போட்டியில் விராட் கோலி 38 ரன்கள் அடித்தால் அரிய சாதனை ஒன்றை படைப்பார். அதன்படி, 38 ரன்கள் எடுத்தால் KKRக்கு எதிராக 1,000 ரன்கள் எடுத்த வீரராவார். இதன்மூலம் IPL தொடரில் 4 அணிகளுக்கு எதிராக 1,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார். முன்னதாக CSK, DC, PBKS அணிகளுக்கு எதிராக அவர் 1,000 ரன்கள் குவித்துள்ளார்.
*ஆரஞ்சு தோலை பொடியாக்கி முகத்தில் தடவி வரலாம்.
*தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.
*கற்றாழையில் உள்ள சில பண்புகள் முகப்பருக்களை அகற்ற உதவும்.
*எலுமிச்சை சாறு – வைட்டமின் சி அதிகம் உள்ளதால் முகப்பருக்களை தடுக்கும்.
*ஆமணக்கு எண்ணெய் – ரிசினோலிக் அமிலம் உள்ளதால் நல்ல பலன் கிடைக்கும்.
திமுக கூட்டணியில் சேர தேமுதிக காய் நகர்த்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் சமீப கால பேச்சுகளும் அதனை உறுதிப்படுத்துவது போல் உள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள், ராஜ்யசபா சீட்டு கேட்டு மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் அதிமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பே இதற்கு காரணமாம். உங்கள் கருத்து என்ன?
ஐபிஎல் திருவிழா இன்று மாலை கோலாகலமாகத் தொடங்குகிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30க்கு தொடங்கும் முதல் போட்டியில், கொல்கத்தா-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 18ஆவது ஐபிஎல் சீசனில் CSK, RCB, KKR, MI, GT, DC, PBKS, LSG, SRH, RR அணிகள் பங்கேற்கின்றன. இன்று முதல் மே 18ஆம் தேதி வரை லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. IPL அப்டேட்டுகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS APPஐ டவுன்லோடு பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.