news

News March 22, 2025

இலங்கை செல்லும் பிரதமர் மோடி!

image

அரசுமுறை பயணமாக வரும் 5ஆம் தேதி PM மோடி இலங்கை செல்லவுள்ளார். அப்போது, திரிகோணமலையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பாக இருநாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது வரும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

News March 22, 2025

கீப்பிங்கில் முதலிடம்: ‘தல’ தோனிக்கு விசில் போடுங்க!

image

ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சென்னை அணியின் தல தோனி தான் முதலிடம் பிடித்திருக்கிறார். 264 போட்டிகளில் கீப்பராக செயல்பட்டு 42 ‘ஸ்டெம்பிங்’, 148 ‘கேட்ச்’ பிடித்து 190 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். வயசானாலும் கீப்பிங்கில் கலக்கி வரும் தல தோனிக்கு விசில் போடுங்க!

News March 22, 2025

வாயால் பதவியை இழந்த பெண் அமைச்சர்!

image

ஐஸ்லாந்தில் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த ஆஸ்தில்டர் லோவா (58) செய்தியாளர்கள் சந்திப்பில் சிறுவயது அனுபவங்களை மனம் திறந்து பேசி, சிக்கலில் மாட்டிக் கொண்டார். 22 வயதில் 15 வயது மாணவர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டு குழந்தை பெற்றதாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அவருக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. இதனால், தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

News March 22, 2025

கொளுத்தும் வெயில்: இந்த அறிகுறிகள் இருக்கா?

image

பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சூடான வறட்சியான சிவந்த சருமம், குமட்டல்& வாந்தி, தலைவலி, சோர்வு, கால் பிடிப்பு, மூச்சுத்திணறல், நெஞ்சு படபடப்பு, தலைசுற்றல், மயக்கம், பதற்றம் போன்றவை வெப்பம் சார்ந்த உடல் பாதிப்புகளுக்கான அறிகுறிகள். இதிலிருந்து தப்பிக்க, அதிகளவில் தண்ணீர், மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும், குளிர்ந்த நீரில் குளிக்கவும்.

News March 22, 2025

உலக தண்ணீர் தினத்தை போற்றுவோம்!

image

நீரின்றி அமையாது உலகு. உயிர்கள் தோன்ற நீர் அவசியம். பரிணாம வளர்ச்சிகளும் நீரில் இருந்தே தோன்றியதாக கூறுகிறது அறிவியல். இன்று உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கும் வேளையில் நீரைப் போற்றுவோம். கோடைக்காலத்தில் மட்டுமல்ல; மழைக்காலத்திலும் நீரை சேமிக்கும் பழக்கத்தை இளம் தலைமுறையினருக்கு கடத்துவோம். நீர்நிலைகள் மாசடையாமல் பாதுகாக்க கற்றுத் தருவோம்! மண் வளத்தையும்; மனித வாழ்வையும் பாதுகாப்போம்!

News March 22, 2025

நதிநீர் இணைப்பு சாத்தியமா? அமைச்சர் பதில்

image

மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உருவானால் மட்டுமே, நதிநீர் இணைப்பு சாத்தியமாகும் என மத்திய அமைச்சர் பாட்டீல் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், நதிநீர் இணைப்பு தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, மத்திய அரசு முயன்று வருவதாக கூறினார். இணைப்புக்காக 30 நதிகள் அடையாளம் காணப்பட்டு, 11 நதிகளுக்கான திட்ட அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார்.

News March 22, 2025

‘ஸ்டேட்டஸ்’ஸில் தெறிக்கும் புதிய மாவட்டம்

image

கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி 2வது பெரிய நகரமாக உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்குவதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டு, அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், பொள்ளாச்சி மாவட்டமாக்க வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற, பொதுமக்களும் சமூக வலைதளங்களில் ‘ஸ்டேட்டஸ்’ வைக்கின்றனர்.

News March 22, 2025

ஐபிஎல் போட்டி இன்று நடக்குமா?

image

நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் RCB-ம், KKR-ம் மோதும் முதல் போட்டி இரவு 7.30-க்கு தொடங்கும் நிலையில், அங்கு மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. மேலும், கொல்கத்தாவில் மிக கனமழைக்கான அலர்ட்டையும் வானிலை மையம் விடுத்திருப்பதால், இன்று போட்டி நடைபெறுமா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

News March 22, 2025

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

image

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று (மார்ச் 22) உயர்ந்துள்ளது. நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100.80க்கு விற்பனையான நிலையில், இன்று 0.13 காசுகள் உயர்ந்து ₹100.93க்கு விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலையும் ஒரு லிட்டருக்கு 0.13 காசுகள் உயர்ந்து ₹92.52க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால், வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். உங்கள் ஊரில் பெட்ரோல் விலை என்ன?

News March 22, 2025

அனைத்து போலீசாருக்கும் பறந்த எச்சரிக்கை!

image

ஐஜிக்கள் மற்றும் டிஐஜிக்களுடன் டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகளின் பட்டியலை உடனடியாக தாக்கல் செய்யுமாறு சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். அதேபோல, ரவுடிகள் குறித்து உளவு போலீசார் தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.க்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் பாயும் எனவும் அவர் எச்சரித்தார்.

error: Content is protected !!