India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருமணத்தை பதிவு செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் www.tnreginet.gov.in இணையதளத்தில் பதிவாளர் அலுவலகத்தில் அப்பாயின்ட்மென்ட் முன்பதிவு செய்ய வேண்டும். முகவரி, வயது ஆவணம், செல் எண், சாட்சிகள் விவரம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து, நமது திருமணம் நடைபெற்ற பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தை தேர்ந்தெடுத்து, அங்கு செல்லும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
தொடர்ந்து பணத்தை கட்டி, REFERENCE எண் பெற வேண்டும். பிறகு தேர்வு செய்த நேரத்தில் 2 சாட்சிகள், திருமண அழைப்பிதழ், வயது சான்று உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் பதிவாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். திருமண தம்பதிகள் மட்டும் அனைத்து ஒரிஜினல் சான்றுகளும் வைத்திருப்பது அவசியம். இவை அனைத்தும் சரியாக இருந்தால், உடனே அன்றைய தினத்தில் திருமண பதிவு சான்று அளிக்கப்படும். இல்லையெனில் சில நாட்கள் ஆகும்.
அனைவரும் அஞ்சி நடுங்கும் படியான ஒரு சம்பவம் உ.பி. காசியாபாத்தில் நடந்துள்ளது. கணவரை இழந்த ஆர்த்தி என்ற பெண், குழந்தைகளுடன் மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். மருமகள் என்றும் பாராமல் அவருக்கு மாமனாரே பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆத்திரமடைந்த ஆர்த்தி, மாமனாரை நிர்வாணமாக்கி கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார். ஆர்த்தியை போலீஸ் கைது செய்துள்ளது.
கொல்கத்தா அணியின் பந்துவீச்சை பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோலி, சால்ட் ஆகியோர் வெளுத்து வாங்கினர். பவர்பிளே முழுவதும் பந்துகள் எல்லைக் கோட்டை நோக்கிப் பறந்தன. அதிரடியாக விளையாடிய சால்ட், அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். பவர்பிளேயில் மட்டும் பெங்களூரு அணி 80 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
IPL 2025ஆம் போட்டித் தொடர் இன்று தொடங்குகிறது. இப்போட்டித் தொடரில் 5 வயதான வீரர்கள் களமிறங்கவுள்ளனர். அவர்கள் யார்-யார் என பார்க்கலாம். 1) தோனி (வயது 43), சிஎஸ்கே அணி 2) டூ பிளசிஸ் (வயது 40) – டெல்லி கேபிடல்ஸ் 3) ரவிச்சந்திரன் அஸ்வின் (38)- சிஎஸ்கே 4) ரோஹித் ஷர்மா (37) – மும்பை இந்தியன்ஸ் அணி 5) மொயின் அலி (37) – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
வீட்டில் பணம் தங்காததற்கு, நாம் கடைப்பிடிக்கும் சில பழக்கங்களும் காரணம் என்கிறது வாஸ்து. 1)வீட்டில் பிளாஸ்டிக் டப்பாவில் உப்பு வைக்கக் கூடாது; கண்ணாடி ஜாடியில்தான் வைக்க வேண்டும். 2)கடவுளுக்கு உணவு படைக்கும்முன் அதை ருசிக்கக் கூடாது 3)மாலையில் (சூரிய அஸ்தமனம் முன்) விளக்கேற்ற கூடாது. 4)இரவு முழுவதும் எச்சில் தட்டுகள் கழுவப்படாமல் இருக்கக் கூடாது. 5)பால், தயிரை இரவில் திறந்து வைக்கக் கூடாது.
கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே மின்சார தட்டுப்பாடு ஏற்படும் நிலை வரும். ஆனால், தமிழ்நாட்டில் போதுமான மின்சாரம் கையிருப்பு இருப்பதாகவும், 2030 வரை மின்சாரத் தட்டுப்பாடு பிரச்னை இருக்காது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். எங்கேயாவது ஒரு சில இடங்களில் பழுது உள்ளிட்ட காரணங்களால் மின்தடை ஏற்பட்டால், அதுவும் உடனடியாக சரிசெய்யப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
நைஜர் நாட்டின் ‘கொகரவ்’ பகுதியில் மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். ரம்ஜான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது, இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ISIS குழு ஒன்றே காரணம் என தெரிவித்துள்ள அரசு, 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் தற்போது ISIS குழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
அரசு சொத்தை சேதப்படுத்தினால் என்ன தண்டனை அளிக்கப்படும் என BNS சட்டத்தின் 324 (3), (4), (5) ஆவது பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சொத்தை சேதப்படுத்தினால் ஓராண்டு வரை சிறை (அ) அபராதம் (அ) 2 தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும். ரூ.1 லட்சத்துக்கும் குறைவான சொத்தை சேதப்படுத்தினால் 2 ஆண்டு வரை சிறை, ரூ.1 லட்சம் சொத்தை சேதப்படுத்தினால் 5 ஆண்டு வரை சிறை எனக் கூறப்பட்டுள்ளது.
மாமியார் வீட்டில் பல பெண்கள் கொடுமைகளை அனுபவித்து வருவதை நாம் பார்த்திருப்போம். குஜராத்தில் அப்படி இன்னல்களை சந்தித்த 21 வயது இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், நாள் முழுவதும் நைட் கவுன் மட்டுமே அணிய வேண்டும் என கணவரின் குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும், தூங்குவதற்கு முன்பு கணவர் கால் அமுக்கி விடச் சொல்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.