India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தொகுதி மறுவரை தொடர்பான கூட்டம் தமிழகத்தை வஞ்சிக்கும் கூட்டம் என தமிழிசை விமர்சித்துள்ளார். முல்லை பெரியாறு, காவிரி பிரச்னைகளில் பினராயி, DK சிவகுமார் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மற்ற மாநிலங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப MP எண்ணிக்கை இல்லை எனவும் மற்றும் தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் பொதுஇடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. அப்படி Virginiaவில் நடத்த சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த தந்தையும் மகளும் பலியாகினர். கடையின் உரிமையாளரிடம் மதுபானம் கேட்டு பிரச்னை செய்த நபர் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் மீதும் குண்டு பாய்ந்தது. குஜராத்தை சேர்ந்த பிரதீப் பட்டேல் 6 வருடத்திற்கு முன் US-க்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.
“Artist Artest” என்று அழைக்கப்படும் தொழில்முறை மல்யுத்த வீரரான கிரஹாம் கிரீன் அகால மரணமடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் ஒஹையோவில் Xtreme Valley Wrestling போட்டியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் அவர் உயிர் பிரிந்தது. அண்மையில் குத்துச்சண்டை லெஜெண்ட் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமான நிலையில், இது ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட நாள், தியாகிகள் தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, 3 பேரின் உயர்ந்த தியாகத்தை நாடு இன்று நினைவுகூர்வதாக குறிப்பிட்டுள்ளார். விடுதலை, நீதிக்கான அவர்களின் அச்சம் இல்லாத முயற்சி, அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
FIBA Men’s Asia Cup தகுதிச் சுற்றில் இந்திய அணி பஹ்ரைனை எதிர்கொண்டது. 15 ஆண்டுகளாக பஹ்ரைனிடம் தோல்வியை மட்டும் சந்தித்த இந்தியா, நேற்று வரலாற்றை மாற்றியது. முதல் பாதியில் 39-38 என்று முன்னிலை பெற்ற இந்தியா, 2ஆம் பாதியில் மேலும் அதிரடி காட்டியது. இறுதியில் 81-77 என த்ரிலிங்கான வெற்றி பெற்றது. இதன் மூலம் FIBA Men’s Asia Cupக்கு இந்திய முன்னேறியது.
Credit Card பயன்படுத்துவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். எனினும், பணத்தை திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் கார்டுகளை Close செய்கின்றனர். இது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள். கார்டை Close செய்வது நிதி நிலைமை சரியில்லை என்பதை குறிப்பதால், CIBIL ஸ்கோர் குறைய வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். கார்டை Close செய்யும் நிலை வந்தால், மற்றொரு கார்டை வாங்கிய பின், Close பண்ணுமாறு அறிவுறுத்துகின்றனர்.
காசாவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலால் அப்பாவிகள் பலரும் கொல்லப்பட்டு வருகின்றனர். கான் யூனிஸ்,ரஃபா உட்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் தற்போதும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் மூத்த தலைவர் சலாஹ் அல் பர்தாவில் கொல்லப்பட்டார். கான் யூனிசில் உள்ள முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சலாஹ்வின் மனைவியும் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரத்தில் 4 நாள்கள் தொடர் விடுமுறை வரவுள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிறு), மார்ச் 31 திங்களன்று (ரம்ஜான்), ஏப்.1 (செவ்வாய்) வங்கிக் கணக்கு முடிவுக்காக வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை நாளாகும். விடுமுறையை வரவேற்று இப்போதே பலரும் சோஷியல் மீடியாவில் மீம்ஸ்களை ஷேர் செய்ய தொடங்கியுள்ளனர். லீவுல உங்கள் பிளான் என்ன?
கஷ்டப்பட்டு விளைவித்த பொருட்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பதை பார்த்திருப்போம். அதற்கு மாறாக தெலங்கானா விவசாயி ஒருவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. கொரோனா காலத்தில் விவசாயி சுமன்பாய், உலகிலேயே விலையுயர்ந்த 10 மியாசாகி வகை மாமரக் கன்றுகளை நட்டுள்ளார். தற்போது, அவை காய்க்கத் தொடங்கியுள்ளன. மியாசாகி மாம்பழம் ஒன்று ரூ.10,000 வரை விலை போகிறதாம். சுமன்பாய் காட்டில் பண மழைதான்!
ஏப்.10-ல் வெளியாகும் குட் பேட் அக்லி படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகிவரும் நிலையில், அஜித் கூலாக இத்தாலியில் கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்றுள்ள அவர், கார் ரேஸ் குறித்து மனம் திறந்துள்ளார். ஒரு அணியின் வீரராக, உரிமையாளராக இருப்பது கௌரவம் என தெரிவித்த அஜித், இன்னும் பல ஆண்டுகள் கார் ரேஸில் ஈடுபட விரும்புவதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.