India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை PSG மருத்துவக் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆரோக்கியம் சார்ந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. கிராமங்களில் 400 மாணவர்கள் உட்படுத்தப்பட்டதில், 16% பேருக்கு பெரியவர்களுக்கு வரக்கூடிய டைப்-2 நீரிழிவு பாதிப்பு வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாம். நகர்புறங்களில் பீஸ்ஸா, பர்கர் உள்ளிட்ட துரித உணவு கலாசாரத்தை அதிகம் கொண்டுள்ள மாணவர்கள் மத்தியில் பாதிப்பு மேலும் அதிகரிகரிக்கக்கூடுமாம்.
10-15 வயதுள்ள 100 மாணவர்களில் 6-7 பேர் தூக்கமின்மை பிரச்னைக்கு மருந்து உட்கொள்வது PSG கல்லூரியின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை போக்க, *குழந்தைகள் செல்போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். *அனைத்து வகை பள்ளிகளிலும் தினமும் 1 மணி நேரம் கட்டாயம் விளையாட்டு. *சாக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து துரித உணவுகளை தவிர்க்க, குழந்தைகளுக்கு வழிகாட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
GST வரியில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்தியப் பங்குச்சந்தைகள் உயர்வை கண்டுள்ளன. காலையில் சுமார் 1,000 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கிய Sensex 676 புள்ளிகள் உயர்ந்து 81,273 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல், Nifty 245 புள்ளிகள் உயர்ந்து 24,876 புள்ளிகளாக நீடிக்கிறது. Maruti Suzuki, Bajaj Auto உள்ளிட்ட நிறுவனங்களில் பங்குகள் கடும் உயர்வை கண்டுள்ளன.
எல்லை பாதுகாப்பு படையில் (BSF) உள்ள பெயிண்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கான கான்ஸ்டபிள் (Tradesman) பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: 3,588. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு/ ITI. வயது வரம்பு: 18 – 25. சம்பளம்: ₹21,700 – ₹69,100. எழுத்து, உடல் திறன் உள்ளிட்ட தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆக.23. விண்ணப்பிக்க இங்கே <
★ஆகஸ்ட் 20-ம் தேதி அனுஷ்காவின் ‘காட்டி’ படத்திலிருந்து ‘தசோரா’ பாடல் ரிலீசாகவுள்ளது.
★அட்லீ- அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
★அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘பாம்ப்’ படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ளது.
★‘ஆவேசம்’ பட இயக்குநர் ஜீது மாதவன் இயக்கும் படத்தில் சூர்யா போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.
துணை ஜனாதிபதி வேட்பாளர் பரிசீலனையில் இதுவரை யாரும் இல்லை என ‘INDIA’ கூட்டணி தெரிவித்துள்ளது. NDA கூட்டணியில், CP ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ‘INDIA’ கூட்டணி தீவிரம் காட்டியுள்ளது. இதனிடையே, திமுக MP திருச்சி சிவா பரிசீலனையில் உள்ளதாக NDTV செய்தி வெளியிட்டது. அதனை மறுத்துள்ள ‘INDIA’ கூட்டணி, வேட்பாளருக்கான ஆலோசனை தொடர்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
‘நீங்கள் இதை படிக்கிறீர்கள் என்றால், நான் இறந்துவிட்டேன் என அர்த்தம். எனது மரணம் என் சொந்த முடிவு. ஓராண்டாக திட்டமிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன்.’ நொய்டாவில் தற்கொலை செய்த மாணவர் சிவம் டே(24) எழுதிய வரிகள் இவை. மாணவன் 2 ஆண்டுகளாக கல்லூரிக்கு வரவில்லை எனவும், அதனை கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு சூடுபிடித்துள்ளது. அணி தேர்வு மும்முரமாக நடைபெற்று வரும் சூழலில், 15 பேர் கொண்ட அணியில், இன்னும் ஒரு வீரரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியாமல் தேர்வு குழு திணறி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த இடத்திற்கான பரிசீலனையில் ஸ்ரேயஸ் ஐயர், ரிங்கு சிங், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உள்ளனராம். நீங்க சொல்லுங்க இவர்களில் யாரை டீமில் சேர்க்கலாம்?
தனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக சம்யுக்தா மேனன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தினமும் குடிப்பதில்லை, மன அழுத்தம் (அ) பதட்டம் ஏற்படும்போது மட்டுமே குடிப்பதாகவும் காரணம் கூறியுள்ளார். தனுஷின் ‘வாத்தி’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான அவர், விஜய் சேதுபதியுடன் ஒரு படம், Benz படங்களில் நடித்து வருகிறார்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெண்கள் ₹25 லட்சம் வரை தொழில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, BC, MBC, சீர் மரபினர்(DNC) உள்ளிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கடன் வழங்கப்பட உள்ளது. ₹1.25 லட்சம் வரை வட்டி விகிதம் 7%, ₹1.25 லட்சம் முதல் ₹15 லட்சம் வரை வட்டி விகிதம் 8% எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 3 முதல் 5 ஆண்டுகளாகும். SHARE IT.
Sorry, no posts matched your criteria.