India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேப்பாக்கம் மைதானத்தில் முதல்முறையாக CSK அணியை வீழ்த்தி சோக வரலாற்றுக்கு SRH முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2024-ம் ஆண்டுவரை சேப்பாக்கத்தில் 5 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் SRH அணி தோல்வியையே தழுவி இருந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு SRH அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி CSK அபார வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் CSK-வை வீழ்த்தி அந்த வரலாற்றை SRH மாற்றி இருக்கிறது.
சிந்து நதி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பேசியது சர்ச்சையாகியுள்ளது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலாவல் பூட்டோ, ‘சிந்து நதி நம்முடையது. நமக்கான நீர் இந்த நதியில் பாயும். இல்லையென்றால், அவர்களின் (இந்தியர்கள்) ரத்தம் பாயும்’ எனத் தெரிவித்துள்ளார்.
▶ 1897 – தமிழ்தாய் வாழ்த்து பாடல் கொடுத்த பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் நினைவு நாள். ▶ 1970 – நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள். ▶ 1973 – நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பிறந்த நாள். ▶ 1989 – வங்கதேசத்தில் சூறாவளிக் காற்றால் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு. ▶ 1994 – ஜப்பானில் சீன விமானம் விபத்துக்குள்ளானதில் 264 பேர் உயிரிழப்பு.
ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்த CSK-க்கு இந்த ஆண்டு சோதனை காலம்தான். சேப்பாக்கம் மைதானத்திலேயே மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது அந்த அணி. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே சேப்பாக்கத்தில் தொடர்ந்து 4 போட்டிகளில் CSK தோற்றதில்லை. ஆனால், இந்த ஆண்டு RCB, DC, KKR, SRH என 4 அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் என்னெல்லாம் பார்க்கப் போறோமோ?
பிரேசில் நாட்டில் 11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எறும்பின் புதைபடிமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Hell Ant எனப்படும் இந்த வகை எறும்பு, ஹைடோமைர்மெசினே துணைக் குடும்பத்தைச் சேர்ந்ததாம். சுண்ணாம்பு கல்லில் இருந்து இந்த புதைபடிமம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எறும்புகளின் பரிணாம வளர்ச்சியை கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
▶ வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை மயக்கி தோல்வியே இல்லை என்ற எண்ணத்தை தூண்டும். ▶ வெற்றியைக் கொண்டாடுவது சிறப்பானது. ஆனால் தோல்வியின் படிப்பினைகளைக் கவனிப்பதும் அவசியம். ▶ உலகில் உள்ள எவருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்… அப்படிச் செய்தால், உங்களை நீங்களே அவமதித்துக் கொள்கிறீர்கள் என அர்த்தம். ▶ பிரச்னைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வையும் தேடுகிறேன்.
நடிகை சமந்தா குறித்து இயக்குநர் சுதா கொங்கரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தான் சமந்தாவின் மிகப் பெரிய ரசிகை என்றும், 5 ஆண்டுகளாக அவருடன் டச்சில் இருப்பதாகவும் சுதா தெரிவித்துள்ளார். மேலும், சமந்தா அழுதால், தானும் அழுவேன் என தெரிவித்த அவர், சமந்தாவின் போராடும் குணம் தனக்கு பலம் தருவதாக குறிப்பிட்டார். ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் மிகவும் பிடிக்கும் என்றும் சுதா வேடிக்கையாக கூறியுள்ளார்.
பாக். உடனான போர் பதற்ற சூழலில், ஹைப்பர் சோனிக் ஏவுகணை சோதனையில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. Scramjet Engine-ஐ DRDO வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ஒலியைவிட 5 மடங்கு வேகம், அதாவது மணிக்கு 6,100 கி.மீ.க்கும் அதிகமாக பயணித்து, இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை இந்த இஞ்சினுக்கு உண்டு. இதன்மூலம், அடுத்த தலைமுறை ஏவுகணை உருவாக்கத்தில் இந்தியா முன்னேறியுள்ளது.
சர்வதேச டி20-ல் இருந்து கோலி வெகு சீக்கிரமாகவே ஓய்வு அறிவித்துவிட்டதாக ரெய்னா தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனிலும், கடந்த CT தொடரிலும் அவர் விளையாடிய விதத்தை பார்க்கும் போது, அவரால் 2026 வரையிலும் டி20-ல் விளையாடியிருக்க முடியும் எனவும், அவரது ஃபிட்னஸ் இன்னும் Peak-ல் தான் இருப்பதாகவும் ரெய்னா கூறியுள்ளார். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: இன்னாசெய்யாமை ▶குறள் எண்: 318 ▶குறள்: தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். ▶பொருள்: பிறர் தரும் துன்பத்தால் தனக்கேற்படும் துன்பத்தை உணர்ந்தவன் அந்தத் துன்பத்தைப் பிற உயிர்களுக்குத் தரவும் கூடாதல்லவா?.
Sorry, no posts matched your criteria.