India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கணவர் தாடியுடன் இருந்தது பிடிக்காமல் அவரின் சகோதரருடன் மனைவி ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டை சேர்ந்த முகமது சாகீர், அர்சியை 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்தார். அவர் தாடி வளர்த்தது அர்சிக்கு பிடிக்கவில்லை. இதனால் தாடியில்லாமல் இருந்த சாகீரின் தம்பி சபீருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இனி அவருடனே வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். சாகீர் புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.
கணவர் தாடியுடன் இருந்தது பிடிக்காமல் அவரின் சகோதரருடன் மனைவி ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டை சேர்ந்த முகமது சாகீர், அர்சியை 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்தார். அவர் தாடி வளர்த்தது அர்சிக்கு பிடிக்கவில்லை. இதனால் தாடியில்லாமல் இருந்த சாகீரின் தம்பி சபீருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இனி அவருடனே வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். சாகீர் புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.
படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
விவாகரத்துக்குப் பின் மனவருத்தத்தில் இருந்த ஷிகர் தவானுக்கு தற்போது மீண்டும் காதல் பூ பூத்துள்ளது. அபுதாபியில் வசிக்கும் ஐயர்லாந்து பெண்ணான சோபி ஷயினுடன் தவான் டேட்டிங் செய்வதாக கூறப்பட்டது. ஆனால் அது டேட்டிங்கை தாண்டிய உறவு என்பதை சோபி இன்ஸ்டகிராமில் போட்ட போட்டோ காட்டிக்கொடுத்துவிட்டது. இருவரும் நெருக்கமாக இருக்கும் போட்டோவை பகிர்ந்து மை லவ் என பதிவிட்டுள்ளார்.
உலகின் வயதானவர் என அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரேசிலை சேர்ந்த செவிலியர் இனா கனபெரா லூகா (116) காலமானார். 1908-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ம் தேதி அவர் பிறந்தார். அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அவர் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லூகா மறைவையடுத்து, உலகின் வயதான நபராக இங்கிலாந்தின் சர்ரே பகுதியை சேர்ந்த இதல் கடர்ஹாம் (115) அங்கீகாரம் பெற்றுள்ளார்.
மீன்பிடி தடைகாலம் இருப்பதால், முட்டையை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதனால் முட்டை தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து முட்டை கொள்முதல் விலை கடந்த 6 நாள்களில் 60 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று 10 காசுகள் உயர்த்தி, ரூ.4.60ஆக நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள் நிர்ணயித்துள்ளனர். எனவே சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 முட்டை ரூ.5.50 – ரூ.6 வரை விற்கப்படுகிறது. உங்கள் ஊரில் 1 முட்டை விலை என்ன?
இப்போது மட்டுமல்ல, 1993-லேயே, இந்தியாவை பார்த்து பாகிஸ்தான் பயந்ததாக, அமெரிக்க உளவுத்துறை (CIA) ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது. அதன்படி, ‘1993-ல் இருநாடுகளுக்கு இடையே போர் மூள 20% வாய்ப்பு இருந்தது. பயங்கரவாத தாக்குதல், மோதலை தூண்டுவது, மத வெறுப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்கள். அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறியது தான், காஷ்மீரில் வெறுப்பை வளர்க்க காரணம்’.
கடந்த போட்டியில் 35 பந்துகளில் சதம் அடித்து அசத்திய வைபவ் சூர்யவன்ஷி மும்பைக்கு எதிரான போட்டியில் சொதப்பினார். தீபக் சாகர் வீசிய 4-வது பந்தில் கேட்ச் கொடுத்து வைபவ் டக் அவுட்டானர். கடந்த போட்டியில் 200 ரன்களுக்கு அதிகமான டார்கெட்டை 15 ஓவர்களில் ராஜஸ்தான் சேஸ் செய்ததால் இந்த போட்டியிலும் அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்கம் அதற்கு மாறாக அமைந்துள்ளது.
அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை வெளியிட முடியாது என்று தமிழக தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் நீர்த்தேக்க திட்ட உதவி பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியனின் சொத்து, கடன், வருமான வரி விவரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சீனிவாசன் என்பவர் கோரி இருந்தார். இதற்கு பொதுநலன் இல்லாமல் தனிப்பட்ட விவரங்களை வெளியிட முடியாது எனக் கூறி அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.