India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமூக வலைதளங்கள், மொபைல் போன்களில் ஆய்வு செய்ததன் மூலம் கணக்கில் வராத ₹250 கோடியை கண்டறிய முடிந்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எனவே டிஜிட்டல் தரவுகளை ஆராய்வது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், வரி செலுத்துவோரின் இமெயில், சமூக வலைதளங்களை ஆராய அதிகாரிகளுக்கு உரிமை வழங்கும் புதிய வருமான வரி மசோதாவிற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அவர் இப்படி பேசியிருக்கிறார்.
தங்கம் விலை நாள்தோறும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகில் அதிக தங்கத்தை கைவசம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் 8,133 டன்னுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. ஜெர்மனி(3,362), இத்தாலி(2,451), பிரான்ஸ்(2,436), ரஷ்யா(2,295) உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இதில், இந்தியா(687) 9வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா முதலிடம் வர என்ன செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்?
சவுக்கு சங்கர் வழக்கில் கைதான 5 பேருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டை கடந்த மார்ச் 24ஆம் தேதி ஒரு கும்பல் சூறையாடியது. டைனிங் டேபிள், படுக்கை அறைகளில் சாக்கடை நீரை ஊற்றினர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று மாலை 2 பெண்கள் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு, மத சுதந்திரம் மீறப்படுகிறது எனும் USA ஆணையத்தின் (USCIRF) குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இது முழுக்க முழுக்க ஒரு தரப்பு சார்புடைய, அரசியல் உள்நோக்கமுடைய குற்றச்சாட்டு எனவும், தனித்தனி நிகழ்வுகளை தவறாக சித்தரித்து, இந்தியாவின் துடிப்பான பன்முக கலாச்சாரத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி என்றும் கண்டித்துள்ளது.
பொதுவாக டார்க் சாக்லேட் சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும், டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காத சாக்லேட்டை சாப்பிடலாம். இது அவர்கள் உடலில் உள்ள பீட்டா செல்களைத் தூண்டி, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. சர்க்கரை நோயாளிகள் எப்போதும் இனிப்பு சுவை குறைவாக இருக்கும் சாக்லேட்டுகளை கையில் வைத்திருப்பது நல்லது.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் கதாநாயகர்களின் பட்டியலில் பிரதீப் ரங்கநாதன் முதலிடத்தில் இருக்கிறார். ‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து LIK படத்தில் நடித்துவரும் அவர், மேலும் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். சுதா கொங்கராவின் உதவி இயக்குநர்களில் ஒருவரான கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார்.
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த மசோதாவை கைவிடக் கோரும் தீர்மானத்தை இன்று பேரவையில் முதல்வர் கொண்டு வரவுள்ளார். இந்த மசோதாவுக்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரைக் கொண்ட உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்த ஓட்டத்தில் தேவைக்கு அதிகமான மெக்னீசியம், பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து இதய ஆரோக்யத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிக நார்ச்சத்து கொண்ட காய்கறிகளை பச்சையாக காலையில் சாப்பிடுவது வயிறு சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்று அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். இபிஎஸ் மற்றும் அமித்ஷா சந்திப்புக்கு இணைப்பு பாலமாக ஜி.கே.வாசன் செயல்பட்டதாகவும் தகவல் வெளியானது.
அஜித் நடிப்பில் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் குட் பேட் அக்லி படத்தை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், அந்த படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்கும் என அதன் தயாரிப்பாளர் ரவி சங்கர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களின் முதல் நாள் வசூலை இந்த படம் முறியடிக்கும் என விநியோகஸ்தர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முறியடிக்குமா? கமெண்ட் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.