news

News March 16, 2024

அமலாக்கத்துறை 7 நாள்கள் விசாரிக்க அனுமதி

image

தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதாவை, மார்ச் 23 வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று மாலை ED அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் தனது உடல்நிலையை பரிசீலிக்க வேண்டும் என கவிதா தரப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

News March 16, 2024

தேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள்

image

தேர்தல்களில் வாக்களிக்க தேவைப்படும் ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், ஆதார், வங்கி/தபால் நிலைய பாஸ்புக், டிரைவிங் லைசென்ஸ், பான்கார்டு, இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசு ஊழியர்களின் அடையாள அட்டை, எம்பி/எம்எல்ஏ/எம்எல்சிக்களின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை கொண்டு வாக்களிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News March 16, 2024

தமிழகத்தில் பொது விடுமுறை

image

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று பொது விடுமுறை அளிக்கப்படும். தமிழகத்தில் ஏப்ரல் 19 (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விடுமுறையை கணக்கிட்டு முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.

News March 16, 2024

வேட்புமனு தாக்கல் தொடங்க 4 நாள்களே உள்ளன

image

மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் தொடங்க இன்னும் 4 நாள்களே உள்ளன. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. அதன்படி வருகிற 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கலுக்கு 27ஆம் தேதி கடைசி நாள். மனு மீது 28ஆம் தேதி பரிசீலனை நடைபெறுகிறது. மனுவை திரும்ப பெற 30ஆம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 19ல் தேர்தலும், ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

News March 16, 2024

தேர்தல் நடைபெறும் மொத்த காலம்

image

நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்குகிறது. அதாவது, அன்றுமுதல் தேர்தல் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்குகின்றன. அன்று தொங்கி ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணும் நாள் வரை தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது, 85 நாட்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்த 85 நாட்களும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Way2Newsஉடன் இணைந்திருங்கள்.

News March 16, 2024

பொன்முடி தொகுதியில் இடைத்தேர்தல்? விளக்கம்

image

அமைச்சர் பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் தேர்தல் ஆணையம், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத் தேர்தல் என்று தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாக தெரிவித்திருக்கிறது. அதனை நீக்கிவிட்டு புதிய அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

News March 16, 2024

C Vigil செயலி மூலம் புகார் அளிக்கலாம்

image

தேர்தல் விதிமீறல்கள் குறித்து C Vigil செயலி மூலம் புகார் அளித்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அளித்துள்ள பேட்டியில், “27 செயலிகள், இணையதளங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. C Vigil மூலம் பொதுமக்கள் புகார் அளித்தால், 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். KYC செயலி மூலம் வாக்குப்பதிவை அறிந்து கொள்ளலாம்” என்றார்.

News March 16, 2024

26 தொகுதிகளில் இடைத்தேர்தல்

image

நாடு முழுவதும் 26 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இமாச்சலில் 6 தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதியும், குஜராத்தில் 5 தொகுதிகளுக்கு மே 7ம் தேதியும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. உ.பியில் 4 தொகுதிகளுக்கும், மே.வங்கத்தில் 2 தொகுதிகளுக்கும், பீகார், தெலுங்கானா, தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களில் தலா 1 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 16, 2024

45 நாட்கள் இடைவெளி எதற்கு?

image

தமிழ்நாட்டில் வாக்குப் பதிவுக்கும் (ஏப்ரல் 19) வாக்கு எண்ணிக்கைக்கும் (ஜூன் 4) இடையே 45 நாட்கள் இடைவெளி இருக்கின்றன. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதால் முடிவுகளை தெரிந்துகொள்ள 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

News March 16, 2024

தேர்தல் நடத்தை விதிகள் அமலானது

image

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலின், நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. இதேபோல, மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களிலும் உள்ள படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், பொதுவெளியில் உள்ள தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டு வருகிறது.

error: Content is protected !!