India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட T20 தொடரின் 2-வது போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை அருமையாக தொடங்கியது. நியூசிலாந்து அணியும் வலுவான நிலையில் இருப்பதால், இந்த போட்டி இந்தியாவுக்கு கடினமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ODI தொடர் போல் இல்லாமல், இதை நிச்சயம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

NDA கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் பங்கேற்க PM மோடி, பிற்பகல் 2:15 மணிக்கு சென்னை வருகிறார். கூட்டத்தில், மோடி NDA கூட்டணி கட்சி தலைவர்களை அறிமுகம் செய்து, பிரசாரத்தை துவக்கி வைக்க உள்ளார். திமுகவுக்கு எதிராக அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் பல கட்சிகள் இணைந்துள்ளன. இந்நிலையில் மோடியின் வருகை, கூட்டணிக்கு மேலும் பலம் சேர்க்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

NDA கூட்டணியில் அடுத்ததாக தென்னாட்டு மக்கள் கட்சி இணைந்துள்ளது. நேற்றிரவு, தென்னாட்டு மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் S.கணேஷ் தேவர் EPS-ஐ நேரில் சந்தித்து, அதிமுகவிற்கான தங்களது ஆதரவை உறுதி செய்தார். இந்நிகழ்வின்போது ராமநாதபுரம் அதிமுக மா.செ முனியசாமி உடனிருந்தார். மோடி தமிழகம் வருவதற்குள் NDA கூட்டணியை வலிமைப்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் முன் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து, அவர்களது கோரிக்கைகளை அரசு தரப்பு கேட்பது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு 2 கட்டங்களாக நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்பதற்காக வரும் 27-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு கூட்டியுள்ளது. நாடாளுமன்றத்தின் பிரதான கமிட்டி அறையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

கறிக்கோழி வளர்ப்பு கூலியை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கறிக்கோழி வளர்ப்பு குறித்து ஆய்வு செய்திட மாவட்ட அளவில் தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, பண்ணை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி, கோழி வளர்ப்பில் உள்ள பிரச்னை குறித்து ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

▶ஜனவரி 23, தை 9 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 PM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:30 AM ▶திதி: பஞ்சமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

*எண்ணெய் பசை முடி உள்ளவர்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்தலாம். *வறண்ட மற்றும் சுருள் முடி உள்ளவர்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்தினால் முடி உலர்ந்து, சேதமடைய வாய்ப்புள்ளது. *அவர்கள் வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துவது நல்லது. *அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினால் முடியின் இயற்கையான எண்ணெயை நீக்கி, வறட்சி, உடைதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். *தினமும் ஷாம்பு பயன்படுத்துவது அனைவருக்கும் நல்லதல்ல.

900-க்கும் இந்தியர்களை UAE விடுதலை செய்ய உள்ளது. இதற்காக கைது செய்யப்பட்டோரின் பட்டியலை அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 2-ல் UAE தேசிய தின கொண்டாட்டத்தின்போது, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து பல கைதிகள் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இது இரு நாடுகளின் நல்லுறவை பிரதிபலிக்கிறது.

உலகின் பழமையான குகை ஓவியத்தை இந்தோனேசியாவின் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடித்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்ட ஆய்வில், ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர். இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

வாய் துர்நாற்றம் பெரும்பாலும் வாய் & பல் பராமரிப்பு இல்லாதது, செரிமான கோளாறு, கல்லீரல், சிறுநீரக உள்ளிட்டவைகளால் ஏற்படுகிறதாம். இதற்கு: *நன்றாக பல் துலக்க வேண்டும். *நாக்கை வழித்தெடுத்து சுத்தம் செய்ய வேண்டும். *வாயை கொப்பளித்தல் அவசியம். * வாயில் உமிழ்நீர் அதிகமாக சுரக்க புளிப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். *மாதுளை விதையை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடவும்.
Sorry, no posts matched your criteria.