India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐ.பி.எல்.2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் இதற்கான விடை நமக்கு கிடைத்துவிடும்.
முட்டையில் 13 வகையான வைட்டமின்கள், தாதுக்கள், ஒமேகா-3 போன்றவை நிறைந்துள்ளது. அதனால் எந்த சந்தேகமும் இல்லாமல் தினசரி காலை 2 முட்டையை சாப்பிடுவது நல்லது. முட்டையின் மஞ்சள் கரு நல்ல கண்பார்வையை தரும். மூளை செயல்பாட்டை மேம்படுத்துவது, உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது, குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுவது என பல்வேறு நன்மைகளை தரும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.
பொதுவாக ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தால் சிலருக்கு தற்கொலை எண்ணம் தோன்றும். எனவே ஆரம்ப நிலையிலேயே இதை கண்டறிந்து மருத்துவரிடம் சென்றால் அவரை குணப்படுத்தி விடலாம். மன அழுத்த அறிகுறிகள் இவைதான்.
➤எரிச்சல் உணர்வு
➤அதிக தூக்கமின்மை
➤எதிலும் ஆர்வமின்மை
➤சோர்வு, உடல் எடை மாற்றங்கள்
➤அமைதியின்மை, அதிகம் பேசுதல்,
➤உடல் வலி, பசியிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கதுவா மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பயங்கரவாதிகள் 5 பேர் ஊடுருவியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 5 போலீசாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
▶கண்டனத்தைத் தாங்கிக்கொள்ளும் திடமனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது ▶எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள் ▶ஒன்றே குலம், ஒருவனே தேவன் ▶ விதியை நம்பி, மதியை பறிகொடுத்து பகுத்தறிவற்ற மனிதர்களாக வாழ்வது மிக மிக கேடு ▶உலகின் பிளவு குடும்பத்தில் ஆரம்பிக்கிறது.
ஜாதகத்தில் சந்திரன் நிலை கெட்டிருந்தாலும், காம சிந்தனைகளால் மதி திசைமாறி நடப்பதாலும் வஞ்சித தோஷம் ஏற்படுகிறது. அதை போக்க வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, சிவப்பு நிற வஸ்திரம் அனைத்து 48 தீபங்களை ஏற்றி அம்மனை வழிபட்டு 11 ஏழைப் பெண்களுக்கு உணவிட்டு, சேலை தானம் அளித்தால் வஞ்சித தோஷம் விலகும் என ஐதீகம்.
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பல்கேரியாவின் கிரிகோர் டிமித்ரோவ் அரையிறுதிக்கு போட்டிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில், அவர் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ உடன் மோதினார். இதில், டிமித்ரோவ் 6-7 (6-8), 6-4, 7-6 (7-3) என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
193 – உரோமப் பேரரசர் பெர்ட்டினாக்ஸ் பிரடோரியன் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
1970 – துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,086 பேர் உயிரிழந்தனர்.
1910 – கடல் விமானத்தில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி பெற்றார்.
2005 – இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
வார இறுதியில் மது குடிப்பது என்பது இன்று பலரது பொழுதுபோக்காக மாறிவிட்டது. இப்படி, வார இறுதியில் குடிக்கும் பழக்கமும் பல தீமைகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது வார நாட்களில் குடிக்கும் பழக்கம் இல்லாததால், வார இறுதியில் குடிப்பது சராசரியானது என்ற நினைப்பில் அதிகளவு மதுவை நுகர்கிறார்களாம். இதனால், மன உளைச்சல், அலுவலக பொறுப்பை நிர்வகிப்பதில் சிரமம் என பல பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.
▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: ஒப்புரவறிதல்
▶குறள் எண்: 219
▶குறள்:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
▶பொருள்: ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல், செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற தன்மையாகும்.
Sorry, no posts matched your criteria.