India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களின் உயிரைப் பணயம் வைக்கும் சூதாட்ட நிறுவனத்திடம் இருந்து திமுக பணம் வாங்கியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். FUTURE GAMINGS நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் திமுகவுக்கு ₹509 கோடி வழங்கியுள்ளது. இதனை X தளத்தில் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் உழைப்பை சுரண்டி உயிரைக் குடிக்கும் பாவப்பணத்தை பெற்றுள்ள திமுவுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
இழந்த காதலி, காதலனை திருமணத்துக்குப் பிறகு பார்த்தால் நீங்கள் பேச நினைப்பது என்ன? என தனது X பக்கத்தில் நடிகர் பார்த்திபன் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள இயக்குநர் சேரன், “உன்னோட வாழ்க்கை நல்லா இருக்குன்னு நம்புறேன். உன்னோட நினைவுகள் எனக்குள்ள பத்தரமா இருக்கு.. உன் குரல் மட்டும் எங்கேயோ கேட்காம போச்சு.. அப்பப்போ பேசு.. அது போதும்.. லவ் யூ” எனப் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பத்திர விவரங்களை தாமாக முன்வந்து அளித்திருக்கின்றன. தேர்தல் பத்திரம் மூலம் திமுக 656 கோடியும், அதிமுக 6 கோடியும் நன்கொடையாக பெற்றதை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அவை யார் யாரிடம் இருந்து பெறப்பட்டவை என்ற விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன. பாஜக யாரிடம் இருந்து பணம் பெற்றது என்ற தகவல்களை வெளியிடவில்லை.
SBI தனது வாடிக்கையாளர்களுக்கு Savings Plus என்ற புதிய கணக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம், சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும் பணத்திற்கு அதிக வட்டி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் உங்களது கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் வைத்திருந்தால் வங்கி தானாகவே அதனை Fixed Depoistக்கு மாற்றிவிடும். அதன்மூலம் அதிக வட்டி கிடைக்கும்.
இந்தியா வளர்ச்சியடைய 400 தொகுதிகளில் பாஜக வெல்ல வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அங்கு பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கு 400 இடங்கள், வளர்ந்த ஆந்திராவுக்கு 400 இடங்கள் என மொத்த நாடும் கூறுவதாக தெரிவித்தார். ஆந்திராவில் பாஜக கூட்டணியில் TDP, பவண் கல்யாண் கட்சிகள் உள்ளன.
கேரளாவில் நடைபெற்ற சர்வதேச பாராகிளைடிங் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றது. இடுக்கி மாவட்டத்தில் மார்ச் 14ஆம் தேதி தொடங்கிய போட்டி, இந்திய பாராகிளைடிங் சங்கத்தின் தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படுகிறது. இதில், இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்பட பல நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை நிரூபித்தனர். இந்தப் போட்டிகளை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதல் விவகாரம் காரணமாக பெற்ற மகளையே கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மகளை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு காணாமல் போனதாக பெற்றோர் நாடகமாடி இருக்கின்றனர். மாணவி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தாய், தந்தை, உடந்தையாக இருந்த பெரியம்மா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 ஐபிஎல் தொடர், வரும் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் பயிற்சியை தொடங்கிவிட்ட நிலையில், வெளிநாட்டு வீரர்களும் ஒவ்வொருவராக இந்தியா வந்து கொண்டிருக்கின்றனர். சென்னை, பெங்களூரு, மும்பை, குஜராத், கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் தாங்கள் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களை X பக்கத்தில் பதிவிட்டுள்ளதால், ஐபிஎல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கூட்டணி அமைப்பதில் அதிமுக திணறி வருவது, அக்கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா இருந்தவரை, கூட்டணி அமைத்து முதல் ஆளாக பிரச்சாரத்தை தொடங்குவார். ஆனால் தற்போது இபிஎஸ் தரப்புக்கும், தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கும் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கு 3 நாளே உள்ளதால், இது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய், கேரளாவில் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டிருக்கிறார். அவர் நடிக்கும் GOAT படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. அதேநேரம் கேரளாவில் உள்ள ரசிகர்களுடன் சந்திப்பினை நடத்த விஜய் திட்டமிட்டிருக்கிறார். இதற்குமுன் 2010ஆம் ஆண்டு விஜய் கேரள ரசிகர்களை சந்தித்தார். தேர்தல் நேரத்தில் அவர் மீண்டும் ரசிகர்களை சந்திக்கவிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Sorry, no posts matched your criteria.