India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார். திமுகவுக்கு எதிராக பிரச்னைகள் கிளம்பும்போது, அதை திசைதிருப்புவதே அண்ணாமலையின் வேலை என அவர் கூறினார். மேலும், நமது தலைவர் (விஜய்) புலியை போல அமைதியாக இருக்க, திடீரென ஒரு ஆடு வந்து ஆட்டம் போடுவதாகவும், நமது தலைவரை விமர்சிக்கும் பெயரில், மறைமுகமாக ஒரு பெண்ணை கேவலமாக பேசுகிறது அந்த ஆடு எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் <<15911227>>தந்தை<<>>மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இச்செய்தியைக் கேட்டவுடன் வருத்தமடைந்ததாக x தளத்தில் பதிவிட்டுள்ள அவர், குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘டிராகன் பால்’ சீரிஸ் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ஜப்பானிய குரல் நடிகை யோகோ கவனாமி(67) காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று காலமானார். ‘டிராகன் பால்’ படத்தில் ரான்ஃபான் கேரக்டரில் குரல் நடிப்பை வழங்கி பிரபலமான இவர் God Mars, Armored Trooper Votoms, Transformers: The Headmasters உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் டாப் 100 சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலை ‘இண்டியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் இன்று வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் அமித் ஷா, ஜெய்சங்கர், மோகன் பாகவத் உள்ளனர். இப்பட்டியலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 23வது இடம் கிடைத்துள்ளது. ஆந்திரா CM சந்திரபாபு நாயுடு 14வது இடத்தை பிடித்துள்ளார். ரோஹித் ஷர்மா 48வது இடத்தில் உள்ளார்.
உடல் உறுப்புகளில் தெரியும் அறிகுறிகளை வைத்தே என்ன நோய் என்பதை கண்டறிய முடியும். கண்களில் வீக்கம்: சிறுநீரக பிரச்னையாக இருக்கலாம் நகங்களில் குழி: சோரியாஸிஸ் பிரச்னை இருக்கலாம் *முகம் வீங்கினால்: நீரிழப்பு பிரச்னையாக இருக்கலாம் *பாதங்களில் வெடிப்பு: தைராய்டு ஹார்மோன் பிரச்னையின் அறிகுறி *சிவந்த உள்ளங்கை: கல்லீரல் பிரசனைகளை குறிக்கிறது *வெளுத்த நகங்கள்: ரத்த சோகையாக இருக்கலாம். SHARE IT.
மத்திய அரசு ஊழியர்களுக்கான <<15913593>>அகவிலைப்படி<<>>யை (DA) 2% மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அந்த வகையில், ரூ.50,000 அடிப்படை சம்பளம் பெறும் ஒரு ஊழியருக்கு ரூ.1,000 வரை DA அதிகரிக்கும். அதேபோல், ரூ.70,000 சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ.1,400-ம், ரூ.1 லட்சம் பெறுபவர்களுக்கு ரூ.2,000-ம் அதிகமாக கிடைக்கும். இந்த DA உயர்வால் நாடு முழுவதும் 1.2 கோடி மத்திய அரசு ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் பயனடைவார்கள்.
☛சராசரியாக வயது வந்தவரின் கை முஷ்டி அளவுக்கு இதயம் இருக்கும். ☛நாள் ஒன்றுக்கு இதயம் 100,000 முறை துடிக்கிறது. ☛சராசரி எடை 250 – 350 கிராம் ☛கருத்தரித்த 4 வாரங்களில் இதயத்துடிப்பு துவங்கிவிடும். ☛உடலுக்கு வெளியேவும் இதயம் துடிக்கும். ☛முதல் இதய அறுவை சிகிச்சை அமெரிக்காவில் 1983ல் நடந்தது. ☛திங்கள்கிழமைகளில் அதிக மாரடைப்பு நிகழ்கின்றன.
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம், மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மேலும் 2% உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அகவிலைப்படி 53-ல் இருந்து 55% ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தும்.
தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கூறிய வார்த்தை ட்ரோல் கன்டென்டாக மாறி இருக்கிறது. ‘For men may come and men may go, but I go on for ever’ என்ற ஆங்கிலக் கவிதையைக் கூறிய அவர், அது வில்லியம் ப்ளேக் எழுதியதாகக் குறிப்பிட்டார். ஆனால், அது ஆல்ப்ரெட் லார்ட் டென்னிசன் எழுதிய கவிதையாம். அவர் என்ன பண்ணுவாரு பாவம், எழுதிக் கொடுத்தவர் தப்பா கொடுத்துட்டாருப்பா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடு, உடைமைகளை இழந்தவர்களுக்கு PM மோடி ஆறுதல் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் தேவையான உதவிகளையும் இந்தியா செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாட்டு வெளியுறவு அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகளைத் தொடர்பில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.