news

News August 19, 2025

BREAKING: கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் அன்புமணி

image

அன்புமணியை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுக்க, ராமதாஸ் தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு தைலாபுரம் தோட்டத்தில் சற்றுநேரத்தில் கூடுகிறது. பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அன்புமணிக்கு, ராமதாஸ் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. 24 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டும் அவரது தரப்பில் எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், அவர் மீது நடவடிக்கை பாய உள்ளது.

News August 19, 2025

மனிதாபிமானம் மலர்ந்தால் உலகம் அன்பின் தோட்டமாகும்

image

இன்று உலக மனிதாபிமான தினம். துயரத்தில் இருப்பவருக்கு நம்பிக்கையாக, பசியால் வாடுபவருக்கு அன்னமாக, கண்ணீரில் மூழ்குபவருக்கு ஆறுதலாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். மனிதர்களின் இதயத்தில் கருணை இருந்தால் உலகம் அமைதி அடைந்து, அன்பு, சகோதரத்துவம் நிரம்பிய தாயகமாகிறது. அதனை நோக்கி முன்னேறுவது மனிதனின் ஆகச்சிறந்த பணியாகும். மனிதாபிமானத்துடன் நடந்துக் கொள்வது Best quality அல்ல, அது Basic quality.

News August 19, 2025

INDIA கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்?

image

INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் நேற்று தீவிர ஆலோசனை நடத்திய நிலையில், வேட்பாளரை தேர்வு செய்யும் இறுதி அதிகாரம் காங்., தலைவர் கார்கேவிற்கு வழங்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதியுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

News August 19, 2025

1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

தமிழ்நாட்டில் உள்ள 9 துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது, பாம்பன், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி உள்ளிட்ட அனைத்து துறைமுகங்களிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவான நிலையில், இன்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

News August 19, 2025

CM-ஐ சந்திக்கும் நயினார்.. ஏன் தெரியுமா?

image

துணை ஜனாதிபதி தேர்தலில் NDA கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு CM ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளை தாண்டி அனைவரும் ஆதரித்தோம் என வரலாற்றில் பேசப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News August 19, 2025

4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்

image

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. தேனி, நீலகிரி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல், வரும் 24-ம் தேதி வரையில் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

News August 19, 2025

SPORTS ROUNDUP: டைமண்ட் லீக் பைனலில் நீரஜ் சோப்ரா!

image

◆டைமண்ட் லீக் தொடரின் பைனலுக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா. ◆சின்சினாட்டி ஓபன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில், சின்னர்(இத்தாலி) காயத்தால் வெளியேற, கார்லோஸ் (ஸ்பெயின்) சாம்பியன் ஆனார்.
◆சின்சினாட்டி ஓபன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில், 7- 5, 6- 4 என்ற செட் கணக்கில் ஜாஸ்மின் பலோனியை(இத்தாலி) வீழ்த்தி இகா ஸ்வியாடெக்(போலந்து) சாம்பியன் ஆனார்.
◆சாண்டோஸ் அணி படுதோல்வியடைய மைதானத்திலேயே நெய்மர் கதறி அழுதார்.

News August 19, 2025

ராமநாதபுரம் மாவட்டத்தை 2ஆக பிரிக்கும் திமுக

image

உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் MLA காதர்பாட்சா <<17449428>>முத்துராமலிங்கம் <<>>மீது ஸ்டாலின் கோபமடைந்திருக்கிறார். சமீபத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் அவரை கடும் கோபத்துடன் ஸ்டாலின் வறுத்தெடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தை அமைப்பு ரீதியாக இரண்டாக பிரிக்கவும் திட்டமிட்டுள்ள திமுக தலைமை, இளம் ரத்தத்தை மாவட்டச் செயலாளராக்கவும் முடிவு எடுத்துள்ளதாம்.

News August 19, 2025

அமைச்சருக்கு 4 நாள்கள் கெடு

image

மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் அன்பில் மகேஷுக்கு டிட்டோ -ஜாக் ஆசிரியர்கள் அமைப்பு 4 நாள்கள் கெடு விதித்துள்ளது. இந்த 4 நாள்களுக்குள் உரிய அறிவிப்பை வெளியிடாவிட்டால் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. முன்னதாக, வரும் 22-ம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக தெரிவித்து இருந்தது.

News August 19, 2025

₹1000 கோடி வாடகை கொடுக்கும் ஆப்பிள்

image

ஐபோனை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் தனது புதிய அலுவலகத்துக்காக ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாடகைக்கு எடுத்துள்ளது. 13 மாடிகளை கொண்ட அந்த அப்பார்ட்மெண்டில் 9 தளங்களை வாடைக்கு எடுத்துள்ள நிறுவனம், டெபாசிட்டாக ₹31.57 கோடியும், மாத வாடகையாக ₹6.3 கோடியும் செலுத்த உள்ளது. 10 வருட லீஸுக்கு எடுத்துள்ள நிலையில், 10 வருடத்தில் வாடகையாக மட்டும் ₹1,000 கோடியை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

error: Content is protected !!