India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெட்ரோல் விலை கையை கடிக்கும் நிலையில், கீழ்காணும் வழிமுறையை இருசக்கர வாகன ஓட்டிகள் பின்பற்றினால் நல்ல மைலேஜ் கிடைக்கும். 1) பைக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸ் செய்ய வேண்டும் 2) ஸ்பீடோமீட்டரில் உள்ள எக்கனாமி என்று குறிப்பிடப்பட்டிருக்கும் வேகத்துக்குள் பைக்கை ஓட்டுங்கள் 3) டயர்களில் போதிய காற்று அழுத்தம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள் 4) இன்ஜின் ஆயிலை கால வரம்புக்குள் மாற்றுங்கள்
தொழிலாளர்களுக்கான தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், ”நாடு முழுவதும் குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ₹400 என்று நிர்ணயம் செய்யப்படும், தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை, மருந்துகள், சிகிச்சைகள் ஆகியவை வழங்கப்படும், பாஜக அரசின் தொழிலாளர் விரோத சட்டங்கள் நீக்கப்படும், தனியார் நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பு வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல்லில் கோலி ரன்குவிக்க வேண்டும், இல்லையெனில் டி20 உலக கோப்பை அணியில் இடம் கிடைப்பது கடினம் என்று தெ.ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஸ்டெயின் எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில், “கோலி சில போட்டிகளில் விளையாடாமல் இருந்ததால், ரன்குவிப்பில் சில வீரர்கள் முந்தி சென்று விட்டது போல தோன்றுகிறது. இதனால் ஐபிஎல் தொடரில் ரன்குவிக்கவில்லையெனில், கோலியின் இடத்துக்கு ஆபத்து ஏற்படும்” என்றார்.
தேர்தல்களில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தேர்தல்களில் பணப் பட்டுவாடா மற்றும் அதிகார பலத்தை தேர்தல் ஆணையம் அனுமதிக்காது. இதுகுறித்து வரும் புகார்கள் மீது விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
ISPL கிரிக்கெட் இறுதிப் போட்டியை அமிதாப் பச்சன் காண வந்தது அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சமீபத்தில் அவருக்கு காலில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தானே நகரில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று வீரர்களை அவர் ஊக்கப்படுத்தினார். இறுதிப் போட்டியில் மும்பை அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது. மும்பை அணியின் உரிமையாளர் அபிஷேக் பச்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
GATE 2024 தேர்வுகளுக்கான முடிவுகள் இணையத்தில் சற்றுமுன் வெளியானது. இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 3, 4, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் முதுகலை பட்டப் படிப்பு மற்றும் டாக்டரேட் படிப்புகளில் இணையலாம். <
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை அணுகும்படியும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாகும்.
ஆந்திரா சட்டசபைக்கு மே 13ல் தேர்தல் நடைபெறுகிறது. 175 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 25ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீது ஏப்ரல் 26ஆம் தேதி பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 29ஆம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ல் எண்ணப்படும்.
பொல்லார்டுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருப்பதாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது X பக்கத்தில், பொல்லார்டுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், சில பந்தங்கள் தனது சகோதரனை ஒருபோதும் மாற்றாது, வலுப்படுத்தவே செய்யும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன் குஜராத் அணி கேப்டனாக இருந்த பாண்டியா, நடப்பு தொடரில் மும்பை அணியை வழிநடத்த உள்ளார்.
அதிமுகவும் தேமுதிகவும் 3ஆம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வருகிறது. மார்ச் 1ஆம் தேதி அதிமுக நிர்வாகிகள் பிரேமலதாவின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். பின்னர் மார்ச் 6ஆம் தேதி அவர்களுக்குள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்திவரும் அவர்கள், விரைவில் கூட்டணியை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.
Sorry, no posts matched your criteria.