India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உ.பியில் சந்தியா பாண்டே என்ற பெண்ணுக்கு சிசேரியன் முடிந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் இருந்த கத்திரிக்கோல் அகற்றப்பட்டுள்ளது. கடந்த 2008ல் நடந்த சிசேரியன் போது, டாக்டர்களின் கவனக்குறைவால் கத்திரிக்கோல் வயிற்றில் வைத்து தைக்கப்பட்டுள்ளது. அந்தநாள் முதல் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், வேறு ஒரு பிரச்னைக்காக எக்ஸ்ரே எடுக்கச் சென்ற போது இது குறித்து தெரியவந்துள்ளது.
வரும் ஏப்.6ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருந்த KKR vs LSG அணிகளுக்கு இடையேயான போட்டி, ஏப்.8 மதியம் 3.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஏப்.6ஆம் தேதி ராமநவமி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் யாத்திரை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, போலீசாரால் மைதானத்திற்கும், வீரர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்க முடியாது என்பதால், போட்டி மாற்றப்பட்டுள்ளது.
2014ல் 70ஆக இருந்த இந்திய பில்லியனர்களின் எண்ணிக்கை, தற்போது 284ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ₹98 லட்சம் கோடியாக உள்ளது. ₹1 லட்சம் கோடி சரிவை சந்தித்த போதிலும், ₹8.6 லட்சம் கோடியுடன் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல் அதானியின் நிகர சொத்து மதிப்பு 13% அதிகரித்துள்ளது. ₹3.5 லட்சம் கோடியுடன், டாப் 10ல் இடம்பிடித்த முதல் பெண்மணியாக ரோஷினி நாடார் உள்ளார்.
*1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது. *1857 – கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள ராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே, பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். *1999 – உத்தரப் பிரதேசம், சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர். *2007 – கணிதத்தின் நோபல் பரிசு எனப்படும் நார்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.
CSK அணியை அவர்களது சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தி, தனது 17 வருட கனவை RCB நிறைவேற்றியுள்ளது. கடைசியாக கடந்த 2008ஆம் ஆண்டு சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் CSK அணி, RCB அணியுடன் தோற்றது. அதன் பிறகு நடந்த எந்த போட்டியிலும் RCB அணியால் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், 17 வருடம் கழித்து நேற்று நடந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் RCB வெற்றி பெற்றுள்ளது.
USA அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இப்தார் விருந்தை வழங்கினார். இதில் USA முஸ்லிம் சமூகத்தினர், அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிபர் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தினர் தனக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களித்தது நம்ப முடியாத அளவிற்கு இருந்ததாகவும், அதற்கு சிறப்பு நன்றியும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், மத்திய கிழக்கில் நீடித்த அமைதியை உருவாக்க தனது நிர்வாகம் உழைத்து வருவதாகவும் கூறினார்.
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 220 ▶குறள்: ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து. ▶பொருள்: இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.
‘L2: எம்புரான்’ படம் சங்கிகளின் அஜெண்டாவை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக கேரள காங். தெரிவித்துள்ளது. கேரளாவை பிளவுபடுத்துவதற்கும், கடல்வளம், துறைமுகங்களை கைப்பற்றுவதற்கு இதே அஜெண்டா பின்பற்றப்படுவதாகவும் கூறியுள்ளது. ‘L2: எம்புரான்’ படம் குஜராத் கலவரத்தையும், மத்திய அரசு CBI, ED போன்ற எஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாகவும் மறைமுகமாக விமர்சித்துள்ளது.
▶மார்ச் – 29 ▶பங்குனி – 15 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM – 07:30 AM ▶திதி: அமாவாசை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மகம் ▶நட்சத்திரம் : உத்திரட்டாதி இ 8.15
நமது புகைப்படங்களை சினிமா பாடல்களுடன் ஸ்டோரியில் பதிவிடும் வசதி இன்ஸ்டகிராமில் உள்ளது. தற்போது, அதே வசதி வாட்சப்பிலும் கொண்டுவரப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். பயனர்கள் தங்களுக்குத் தேவையான பாடல்களை தேர்வு செய்து, புகைப்படங்களுடன் ஸ்டேட்டஸில் வைத்துக் கொள்ளலாம். விரைவில் இந்த அப்டேட் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்புறம் என்ன ஸ்டேட்டஸ்ல ட்ரைன் விடுவோமா?
Sorry, no posts matched your criteria.