India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தி பிக்பாஸ் OTT 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் எல்விஷ் யாதவ் நொய்டா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபரான இவர், பாம்பு விஷத்தை அனுமதியின்றி விற்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்விஷ் சில மியூசிக் வீடியோக்களிலும் நடித்து வட இந்திய இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்துள்ளார். இந்நிலையில், இவரது கைது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதால் அரசியலில் இருந்து விலகியதாக நடிகர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். 1989-ல் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய பாக்யராஜ், சில ஆண்டுகளில் கட்சியை கலைத்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்தார். இதற்கு தொழில் பாதிக்கப்பட்டதும், கட்சி ஆரம்பித்த பிறகு படம் சரியாக ஓடாத காரணத்தாலும், அரசியலில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்வுகள் முடிந்து விரைவில் கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. இந்த நாட்களில் பலரும் சுற்றுலா செல்ல விரும்புவது மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்குதான். அதில், பரம்பிகுளம், டாப்ஸ்லிப் பகுதிகளுக்கு இதுவரைக்கும் போகாதவங்க நிச்சயம் முயற்சி பண்ணிப் பாருங்க. கேரள வனத்துறையைச் சேர்ந்த பரம்பிகுளம் புலிகள் காப்பகத்துல ட்ரெக்கிங், சஃபாரி போன்ற சாகச நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் திமுக ரூ.656 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள விவரங்களில், திமுக ரூ.656.5 கோடி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக பெற்றிருப்பதாகவும், இதில், லாட்டரி கிங் சான்டியாகோ மார்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ.509 கோடியும் அடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக ரூ.8,250 கோடி நன்கொடை பெற்றுள்ளது. உச்சநீதிமன்றத்திடம் இருந்து பெற்ற தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பாஜக 2018 மார்ச் முதல் 2019 ஏப்ரல் வரை ரூ.2,190 கோடியும், 2019 ஏப்ரல் முதல் 2024 ஜனவரி வரை ரூ.6,060 கோடியும் நன்கொடை பெற்றதாகவும், இது தேர்தல் பத்திர நிதியில் 50% என்றும் கூறப்பட்டுள்ளது.
அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் திருடியதாக திருச்சியை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத் ஜாம்நகரில் மார்ச் 1-3 வரை நடந்தது. அப்போது, சிலரின் கார் கண்ணாடியை உடைத்து ₹10 லட்சம், லேப்டாப் போன்றவை திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 5 பேரை டெல்லியில் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அருணாச்சல் மற்றும் சிக்கிமில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் மட்டும் ஜூன் 4ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ஆம் தேதியே எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஜூன் 2ஆம் தேதி நிறைவடைவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
▶ரோஹித் – 11 முறை – 243 போட்டிகள்
▶வேணுகோபால் ராவ் – 11 முறை – 65 போட்டிகள்
▶யூசுப் பதான் – 11 முறை – 174 போட்டிகள்
▶முரளி விஜய் – 12 முறை – 106 போட்டிகள்
▶தினேஷ் கார்த்திக் – 14 முறை – 242 போட்டிகள்
▶வில்லியர்ஸ் – 14 முறை – 184 போட்டிகள்
▶அம்பத்தி ராயுடு – 15 முறை – 204 போட்டிகள்
▶ரெய்னா – 15 முறை – 205 போட்டிகள்
▶காம்பீர் – 16 முறை – 154 போட்டிகள்
▶ஷிகர் தவான் – 16 முறை – 217 போட்டிகள்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வருமான வரித் துறை சார்பில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தனி நபரோ, கட்சியினரோ வாக்காளர்களுக்கு பணம் அல்லது பொருட்கள் விநியோகம் செய்தால் 1800 425 6669 என்ற எண்ணிலும், 94453 94453 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும், tn.electioncomplaints2024.income.gov.in என்ற மின்னஞ்சலிலும் புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவர்களின் விவரங்கள் காக்கப்படும்.
நடிகர் பிரித்விராஜ் உடனான பிரிவு குறித்து, அவரது காதலி ஷீத்தல் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “பலரும் என்னைத் தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். பிருத்வியும் நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நாங்கள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்தோம். எங்கள் உறவு நாங்கள் நினைத்தபடி இருக்கவில்லை. அதனால், இப்போது பிரிந்திருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.