news

News March 18, 2024

BIG BREAKING: ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை

image

ஆளுநர் பதவியை தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்யவுள்ளதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி, தென்சென்னை அல்லது நெல்லை ஆகிய தொகுதிகளில் ஒன்றில் தமிழிசை போட்டியிட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில், அவர் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

News March 18, 2024

பிரதமர் கூட்டத்தில் ஓபிஎஸ் – டிடிவி?

image

கோவையில் இன்று வாகனப் பேரணியில் ஈடுபடும் பிரதமர் மோடி, தொடர்ந்து சேலத்தில் நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், முதல்முறையாக ஓபிஎஸ், டிடிவி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருடனான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

News March 18, 2024

இந்தியாவின் முதல் தபால் நிலையம்

image

இந்தியாவில் பிரிட்டிஷ் காலத்தில் தொடங்கப்பட்ட தபால் நிலையம் ஒன்று தற்போது 250 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. 1774இல் மேற்கு வங்க மாகாண கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்கால் தொடங்கி வைக்கப்பட்ட முதல் தபால் நிலையம் இது. தற்போது 250ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தபால் நிலைய வளாகத்தில் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் ஆரம்பகாலத்தில் தபால் எப்படி எடுத்துச் செல்லப்பட்டது என்பதை விளக்கும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளது.

News March 18, 2024

குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பிரதமர் பேரணி

image

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இன்று கோவையில் வாகனப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கிறார். இதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து இன்று மாலை 5.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு 5.45 முதல் 6.45 மணி வரை காரில் சென்றபடி மக்களை சந்திக்கிறார். தொடர்ந்து, 1998ல் குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகே பேரணியை நிறைவு செய்கிறார்.

News March 18, 2024

டாஸ்மாக் கடை திறப்பு நேரம்: முக்கிய உத்தரவு

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மதுபானக் கடைகளில் 50%க்கும் மேல் இருப்பு இருக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை டாஸ்மாக் நிறுவனம் விதித்துள்ளது. மதுக்கடையின் சராசரி விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 30%க்கும் அதிகம் இருக்கக்கூடாது. இருப்பு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். மதுக்கடை, பார்கள் அரசு அனுமதித்த நேரமான மதியம் 12 – இரவு 10 மணி வரை மட்டும் இயங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

News March 18, 2024

“ஆளுநர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்”

image

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்காத ஆளுநரின் செயல் நீதிமன்ற அவமதிப்பாகும் என்று திமுக எம்.பி., வில்சன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சராக இருப்பவரின் தகுதி குறித்த முதல்வரின் மதிப்பீட்டை ஆளுநர் கேள்வியெழுப்ப முடியாது. மாநில அரசுக்கு இணையாக இன்னொரு அரசை நடத்த ஆளுநர் முயற்சி செய்கிறார். அரசமைப்புக்கோ, சட்டங்களுக்கோ மதிப்பளிக்காத ஆளுநர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

News March 18, 2024

‘குட் நைட்’ பட நடிகைக்கு திருமணம் முடிந்தது

image

‘குட் நைட்’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மீதா ரகுநாத்துக்கு, பெற்றோர் முன்னிலையில் திருமணம் முடிந்தது. தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து வந்த இவருக்கு, கடந்தாண்டு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், நேற்று இரு வீட்டார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவருக்கு, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

News March 18, 2024

சென்னை அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்

image

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் சென்னை அழைத்துவரப்பட்டார். டெல்லியில் மார்ச் 9ல் கைது செய்யப்பட்ட சாதிக்கை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 7 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் வாக்குமூலங்களை அவர் அளித்துள்ளார். அதன்பேரில், சென்னையில் இன்று 3 முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்று சாதிக்கிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

News March 18, 2024

ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

image

கடந்த வாரம் உச்சம் சென்ற ஆபரணத் தங்கத்தின் விலை மெல்லமெல்ல குறையத் தொடங்கியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.48,720க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,090க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து ரூ.80க்கும், கிலோ வெள்ளி ரூ.300 குறைந்து ரூ.80,000க்கும் விற்பனையாகிறது.

News March 18, 2024

ED விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகவில்லை

image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகப்போவதில்லை என தெரிவித்துள்ளார். டெல்லி ஜல் போர்டு முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அவருக்கு நேற்று சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் விசாரணைக்கு வரமாட்டார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பிறகு மீண்டும் ஏன் நோட்டீஸ் அனுப்பினார்கள்? ED சம்மன் சட்டவிரோதமானது என AAP தெரிவித்துள்ளது.

error: Content is protected !!