India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10, அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, ஜான் பாண்டியன், தேவநாதன் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை கூட்டணிக் கட்சிகளுக்கு 16 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. இன்னும் தமாகா, ஓபிஎஸ் அணி மீதமுள்ளது. அவர்களுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டாலும், பாஜக 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட வாய்ப்புள்ளது.
ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சிம்லா முத்துசோழன், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியலில் நெல்லை வேட்பாளராக சிம்லா முத்துசோழன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், திமுக முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியனின் மருமகள் ஆவார். 2016ஆம் ஆண்டு ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் ஜெ.வை எதிர்த்து போட்டியிட்ட முத்துசோழன், அண்மையில் அதிமுகவில் சேர்ந்தார்.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் 80%க்கு மேல் புதியவர்கள் இடம் பெற்றுள்ளனர். பொதுவாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே அதிமுக புது முகங்களை களமிறக்குவது உண்டு என்றாலும், இம்முறை இதற்கு வேறு காரணம் இருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணி சரியாக அமையாதது, தேர்தல் செலவு, பாஜகவின் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் சீனியர்கள் பலரும் விலகியே உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்.12ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து, ஏப்.13ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. தமிழகத்தில் ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தி முடிக்கப்படுகின்றன.
11. திருச்சி – கருப்பையா 12.பெரம்பலூா் – சந்திரமோகன் 13.மயிலாடுதுறை – பாபு 14.தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி 15.நெல்லை – சிம்லா முத்துச்சோழன் 16.குமரி – பசிலியான் நாசரேத் 17.புதுச்சேரி – தமிழ்வேந்தன் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.
விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை அதிமுக அறிவித்துள்ளது. விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ விஜயதாரணி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். மேலும் எம்எல்ஏ பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட அத்தொகுதிக்கு ஏப்ரல் 19ல் இடைத் தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுக வேட்பாளராக ராணி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக இரண்டாம் கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான 17 வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தமிழ்நாடு & புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக – திமுக 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதேபோல், விசிக, சிபிஎம் & சிபிஐ ஆகிய 3 கட்சிகளுடன் அதிமுக தலா 2 தொகுதிகளிலும், அதிமுக – காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், முஸ்லீம் லீக், மதிமுக & கொமதேக ஆகிய 3 கட்சிகளுடன் அதிமுக தலா 1தொகுதியிலும் நேரடியாக மோதவுள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் ஒரேயொரு பெண் வேட்பாளருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக நேற்று வெளியிட்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பெண் வேட்பாளர்கள் பெயர் இடம் பெறவில்லை. இன்று வெளியிடப்பட்ட 2ஆவது பட்டியலில், நெல்லையில் சிம்லா முத்துசோழனுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. திமுகவுடன் ஒப்பிடுகையில் இது 2 எண்ண்ணிக்கை குறைவாகும்.
1.ஸ்ரீபெரும்புதூா் – பிரேம்குமார் 2.வேலூா் – பசுபதி 3.தருமபுரி – அசோகன் 4.திருவண்ணாமலை – கலியபெருமாள் 5.கள்ளக்குறிச்சி – குமரகுரு 6.திருப்பூா் – அருணாச்சலம் 7.நீலகிரி – யோகேஷ் தமிழ்ச்செல்வன் 8.கோவை – சிங்கை ராமச்சந்திரன் 9.பொள்ளாச்சி – கார்த்திகேயன் 10.சிவகங்கை – சேவியர் தாமஸ் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் நேரடியாக போட்டியிட உள்ளனர்.
பிரபல நடிகரான கருணாஸ் 2016இல் முக்குலத்தோர் புலிப்படை என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து, அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவானார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா, தினகரன் என ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வந்த அவர், தற்போது மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் மூலம் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அவர் இணையலாம் என கருதப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.