India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்க கெஜ்ரிவாலுக்கு தடை விதிக்கக்கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 21ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுர்ஜித் சிங் யாதவ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிறையில் இருந்து உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது, தடைவிதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் விநியோகம் தாமதமாக வாய்ப்புள்ளதாக ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் பெரம்பூர், அண்ணா நகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் பகுதிகளில் பால் விநியோகம் தாமதம் ஆகலாம். இதனால், தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க வாடிக்கையாளர்கள் அதிகளவில் குவிந்துள்ளனர்.
சென்னையில் 10ஆம் வகுப்பு தமிழ்த் தேர்வை 17,663 மாணவர்கள் எழுதவில்லை என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று 10ஆம் வகுப்பு தமிழ் தேர்வு நடைபெற்றது. இதில் சென்னையில் 9.26 லட்சம் மாணவர்கள், பெயர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 17,663 பேர் தேர்வு எழுதவில்லை. இதற்கான காரணம் சரியாக தெரியாத நிலையில், அதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது.
ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியன்களான SRH & MI அணிகள் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் SRH 9 முறையும், MI 12 முறையும் வென்றுள்ளன. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் SRH & MI அணிகள் நேரடியாக மோதும் முதல் போட்டி ஐதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தங்கள் முதல் ஆட்டத்தில் தோல்வியை அடைந்ததால், இன்றைய ஆட்டத்தில் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய கடுமையாக போராடும்.
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் & மடத்தின் தலைவர் சுவாமி ஸ்மரானந்தா மகராஜ் (94) நேற்று சித்தியடைந்தார். இவர் சிறு வயது முதலே ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி, சுவாமி விவேகானந்தர் ஆகியோர் மீது கொண்டிருந்த அளவு கடந்த பக்தியின் காரணமாக, கொல்கத்தாவில் உள்ள பேலூர் தபோவனத்தில் தன்னை பிரம்மச்சாரியாக இணைத்துக் கொண்டார். எண்ணற்ற ஏழை எளிய மக்களுக்கு சேவை புரிந்து வந்த அவர், வயோதிகம் காரணமாக நேற்று சித்தியடைந்தார்.
சர்வதேச அளவிலான டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன் இடம் பிடித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான புதிய தரவரிசையில் 43 இடங்கள் முன்னேறி, தனது சிறந்த தரநிலையாக 60ஆவது இடத்தை தக்க வைத்துள்ளார். அண்மையில், லெபனானில் நடந்த ஃபீடர் சீரிஸ் போட்டியில் சத்யன் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் காரணமாக தரவரிசை பட்டியலில் அவர் ஏற்றம் கண்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜக வளர்ந்துவிட்டதாக பைத்தியக்காரர்கள்தான் சொல்வார்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காட்டமாக கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், “பிரதமர் மோடி இனிமையாக பேசுவார். ஆனால், தமிழகத்திற்கு எதுவும் செய்யமாட்டார். பாஜக வளர்ந்ததாக சமூக வலைதளங்களில் பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. பாஜக என்பது மாயமான், அதனை மக்கள் நம்பக்கூடாது” என்றார்.
✍எல்லோராலும் கேட்க முடியும்; ஆனால், உணர்திறன் மிக்கவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ✍நீ சூரிய ஒளியை ஏற்றுக்கொண்டால், வெப்பத்தை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ✍நீங்கள் புகழும்போது வெட்கப்படும், இகழும்போது மெளனமாகவும் இருப்பவனே மனிதர்களில் சிறந்தவன். ✍நேற்று என்பது இன்றைய நினைவு; நாளை என்பது இன்றைய கனவு. ✍பிரிந்து செல்லும் நேரம் வரை காதல் அதன் ஆழத்தை அறியாது.
பிரான்ஸ் நாட்டின் ஸ்டார்ட் பஸ்ட் நிறுவனம் & சென்னை ஐ.ஐ.டி. இடையே, ‘புத்தொழில் மேம்பாட்டு மையம்’ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நாட்டின் விமான போக்குவரத்து, விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் புத்தொழில் மேம்பாட்டு மையம் சென்னையில் நிறுவப்பட உள்ளது. இதற்கு பிரான்சின் ஸ்டார்ட் பஸ்ட் நிறுவனம் ரூ.900 கோடி நிதியுதவி அளிக்க உள்ளது.
நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான ‘லவ்வர்’ இன்று முதல் (மார்ச் 27) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் காதல் கதைக்களத்தில் உருவான இந்தப் படம், விமர்சன ரீதியில் மட்டுமில்லாது வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்த படம் வெளியாகவுள்ளது.
Sorry, no posts matched your criteria.