news

News March 27, 2024

ஸ்ருதிஹாசனுக்காகவே ஆல்பத்தில் நடித்தேன்

image

ஸ்ருதிஹாசனுக்காகவே இனிமேல் ஆல்பத்தில் தான் நடித்ததாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் இனிமேல் ஆல்பம் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், இனிமேல் ஆல்பத்தில் தான் நடிக்க 3 நாள்கள் படப்பிடிப்பு, ஸ்ருதிஹாசன், கமல்ஹாசனே காரணங்கள் என்று கூறினார்.

News March 27, 2024

வாட்ஸ்அப்பில் இனி வெளிநாடுகளுக்கு பணம்

image

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வசதியை இந்தியாவில் வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிகணக்கானார் பயன்படுத்தி வருகின்றனர். அந்நிறுவனம் தற்போது இந்தியாவுக்குள் பணம் அனுப்புதல் வசதியை அளித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வசதியை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

News March 27, 2024

BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு

image

கடந்த மூன்று நாட்களாக குறைந்த வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 உயர்ந்து ₹49,720க்கும், கிராமுக்கு ₹15 உயர்ந்து ₹6,215க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ரூ.80.20க்கும், கிலோ வெள்ளி ₹300 குறைந்து ₹80,200க்கும் விற்பனையாகிறது.

News March 27, 2024

‘நாற்காலியைக் காலி செய்’ : ப.சி கடும் தாக்கு

image

வேலையில்லாமைப் பிரச்னைக்கு அரசால் தீர்வு காண இயலாது என்று அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது பாஜக அரசின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது என்று ப.சி விமர்சித்துள்ளார். பாஜக அரசால் இயலாது என்றால் ‘நாற்காலியைக் காலி செய்’ என்று நாம் உரத்த குரலில் சொல்ல வேண்டும். வேலையில்லாமைப் பிரச்னைக்கு பல தீர்வுகள் உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

உச்சத்தில் பங்குச்சந்தை

image

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்து 72,832 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 107 புள்ளி உயர்ந்து 22,112 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. LIC உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.

News March 27, 2024

தோனி மீதான காதல் எதையும் தாண்டி புனிதமானது

image

குணா படத்தின் பாடலை மேற்கோள் காட்டி தோனியை கவிதை நடையில் ஹர்பஜன் சிங் புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக X-இல் பதிவிட்ட அவர், “தமிழ்நாட்டு மக்களை “மஞ்சள் மேல்” பாய்சாக மாற்றிய எங்கள் தல தோனியே. வெற்றி உன் மேல் கொண்ட காதல் எதையும் தாண்டி புனிதமானது. வெற்றி மகுடம் சூட காத்திருப்போர் மத்தியில் வெற்றிக்கு மகுடமாக எப்போதும் நீ சிங்கம்தான். இம்முறையும் கோப்பை சிஎஸ்கேவுக்கு தான்” எனத் தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

என்.ஐ.ஏக்கு புதிய தலைவர் நியமனம்

image

தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு புதிய டைரக்டர் ஜெனரலாக ஐபிஎஸ் அதிகாரி சதானந்த் வசந்த்தை மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது அதன் டைரக்டர் ஜெனரலாக இருக்கும் தின்கர் குப்தா, இம்மாதம் 31ஆம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். இதையடுத்து புதிய தலைவராக சதானந்த் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரை பதவி வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

News March 27, 2024

BREAKING: நாம் தமிழர் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி

image

நாதகவிற்கு வேறு சின்னம் வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கரும்பு விவசாயி சின்னம் பறிபோனதால், மாற்றுச் சின்னத்தை நாதக கோரியது. இதனையடுத்து அக்கட்சிக்கு “மைக்” சின்னம் ஒதுக்கப்பட்டது. அதற்கு பதில் வேறு சின்னம் ஒதுக்க வேண்டும் என நாதக கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், இனி “மைக்” சின்னத்தில் தான் போட்டியிட முடியும்.

News March 27, 2024

வாஷிங் மெஷினுக்குள் இருந்த ரூ.2.54 கோடி பறிமுதல்

image

வாஷிங் மெஷினுக்குள் இருந்த ரூ.2.54 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. கேப்ரிகார்னியன் ஷிப்பிங், லாஜிஸ்டிக்ஸ் நிறுவன வளாகம், அதன் இயக்குநர்களுக்கு சொந்தமான இடங்களில் E.D. சோதனை நடத்தியது. இதில் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது வாஷிங் மெஷினுக்குள் இருந்த கணக்கில் வராத ரூ.2.54 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 47 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

News March 27, 2024

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு ( காலை 10 மணி) 8 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. மழை பெய்தால், வெயில் தாக்கம் சற்று குறையும் என்பதால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

error: Content is protected !!