India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Fliying kiss கொடுத்து கிண்டலடித்த ரோஹித் ஷர்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மார்ச் 24ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில், SRH வீரர் மாயங் அகர்வாலை வீழ்த்திய மகிழ்ச்சியில் KKR வீரர் ஹர்ஷித் ராணா அவருக்கு Flying Kiss கொடுத்து கிண்டலடித்தார். இந்நிலையில், அதனை நினைவூட்டும் விதமாக நேற்று பயிற்சியின் போது ரோஹித் ஷர்மாவும் அதே போல் Flying Kiss கொடுத்து மாயங் அகர்வாலை கிண்டலடித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கியுள்ள ‘அரண்மனை 4’ திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 3 பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து, ஹாரர் + காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள 4ஆம் பாகத்தை, நடிகை குஷ்பூ தயாரித்துள்ளார். இதில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு கோவை சரளா, சிங்கம் புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
பாமக தேர்தல் அறிக்கையை ராமதாசு வெளியிட்டுள்ளார். அதில், மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசி இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறையை நீக்கவும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு பணிகளில் இடைநிலை பணிகளில் 50%, கடைநிலை பணிகளில் 100% தமிழர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்; 10 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் கவின் நடித்து வரும் ‘ஸ்டார்’ படத்தின் டப்பிங் பணிகள் முடிந்து, தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ‘பியார் பிரேமா காதல்’ பட இயக்குநர் இலன் இயக்கும் இந்தப் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில், படத்தின் மேக்கிங், ஆல்பம், காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ் பாடல் உள்ளிட்ட வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதியை மீறியதாக ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 161 மூட்டைகளில் இருந்த 24,150 சேலைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் அசோக்குமார் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்ப பெறுவதே இலக்கு என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்திய பகுதியாகும். அங்குள்ள இந்துக்கள், முஸ்லிம் சகோதரர்களும் இந்தியர்கள் தான். அந்த பகுதியை திரும்ப பெறுவதுதான் ஒவ்வொரு இந்தியர், ஒவ்வொரு காஷ்மீர் மக்களின் இலக்காகும்” என்று கூறினார்.
சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், குஜராத் அணிக்கு ₹12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிப்படி, ஒரு அணி 90 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களை வீசியிருக்க வேண்டும். ஆனால் நேற்றைய போட்டியில், குஜராத் அணி 90 நிமிடங்களுக்குள் 19 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் கேப்டனானார் ஷுப்மன் கில்.
அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 29 முதல் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பரப்புரையை தொடங்குகிறார். நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் 29ஆம் தேதி பரப்புரையை தொடங்கும் அவர், ஏப்ரல் 17இல் தனது மகன் போட்டியிடும் விருதுநகரில் பரப்புரையை நிறைவு செய்கிறார்கள். 19 நாட்களில் 39 தொகுதிகளிலும் அவர் பரப்புரை செய்கிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
சென்னை புறநகர் உள்ளிட்ட 2 முக்கிய சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் இந்த புதிய கட்டண உயர்வு அமல்படுத்தப்பட உள்ளது. பரனூர் சுங்கச் சாவடியில் ரூ.5-10 வரையிலும், ஆத்தூர் சுங்கச் சாவடியில் ரூ. 5-20 வரையிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை வரும் ஏப்ரல் 1 தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சின்னம் வழங்குவது தொடர்பாக இன்று காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், குறைந்தபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். ஆனால் மதிமுக ஒரு தொகுதியில் (திமுக கூட்டணி) போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.