news

News March 22, 2024

மத்திய சென்னையில் பிரேமலதா போட்டி?

image

அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு விருதுநகர், கடலூர், மத்திய சென்னை, திருவள்ளூர், தஞ்சை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மத்திய சென்னையில் தயாநிதி மாறனை எதிர்த்து தேமுதிக சார்பில் முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதியை களமிறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பிரேமலதாவுக்கே மக்கள் மத்தியில் அனுதாபம் கிடைக்கும் என்பதால், அவரே அங்கு போட்டியிடுமாறு அதிமுக மூத்த நிர்வாகிகள் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

News March 22, 2024

பொன்முடிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்

image

உச்சநீதிமன்ற கண்டனத்தையடுத்து பொன்முடியை அமைச்சராக பதவியேற்க அழைப்பு விடுத்திருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மதியம் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் நடைபெறவுள்ளது. இன்றைக்குள் பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்த நிலையில் பணிந்தார் ஆளுநர் ரவி.

News March 22, 2024

‘மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் மீண்டும் சலுகை’

image

2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில், நீட் தேர்வுக்கு பதிலாக மாற்றுத் தேர்வு முறை தேவை, உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும், குற்றவியல் வழக்கு சட்டங்களின் பெயர்கள் மாற்றத்தை கைவிட வலியுறுத்தப்படும், ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

News March 22, 2024

டி.எம். கிருஷ்ணாவுக்கு இசைக் கலைஞர்கள் எதிர்ப்பு

image

பிரபல இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்குவதற்கு இசைக் கலைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். சென்னை மியூசிக் அகாதெமிக்கு எதிர்ப்பாளர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “மனு தர்மம், அயோத்தி, ஸ்ரீராமர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அவரது கருத்துகளால் நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். இசையுலகின் அடிப்படை நம்பிக்கைகளை வேண்டுமென்றே அவர் உடைக்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

News March 22, 2024

‘மகளிர் உரிமைத் தொகை மாதம் ₹3,000’

image

2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில், 133 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகையாக ஏழை குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ₹3,000 வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சென்னையில் நடத்த வேண்டும், வழக்காடு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.

News March 22, 2024

கெஜ்ரிவால் மனு விசாரணை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்

image

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணை, 3 நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. மனு மீது விசாரணை நடத்த நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி சந்திரசூட் நியமித்தார். அதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, 3 நீதிபதிகள் அமர்வு மனுவை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

News March 22, 2024

இந்திய ரூபாய் மதிப்பு பயங்கர சரிவு

image

வர்த்தக நேர தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிவடைந்தது. இன்று காலை வர்த்தகத்தின்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.13ல் இருந்து ரூ.83.33ஆக சரிவடைந்தது. இறக்குமதியாளர்கள் அதிகளவு டாலரை வாங்குவது மற்றும் சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு உயர்வதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

News March 22, 2024

பாமக, விசிக, தமாகா தேர்தல் பத்திர நன்கொடை பெற்றனவா?

image

பாமக, விசிக, தமாகா உள்ளிட்ட தமிழக கட்சிகள் தேர்தல் பத்திர நன்கொடை பெற்றனவா, இல்லையா என்பது குறித்து சரியான தகவல் இல்லை. திமுக, அதிமுக குறித்து தகவல் வந்துள்ள நிலையில், மற்ற தமிழக கட்சிகள் குறித்து எதுவும் தெரியவில்லை. தேமுதிக தேர்தல் பத்திர நன்கொடை பெறவில்லை என பிரேமலதா அண்மையில் தெரிவித்திருந்தார். ஆனால் பாமக, விசிக, தமாகா குறித்து தகவல் இல்லாததுடன், அக்கட்சியினரும் கருத்து தெரிவிக்கவில்லை.

News March 22, 2024

தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் இபிஎஸ்

image

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மக்களவைத் தேர்தல் பணிகள், தேர்தல் பரப்புரை, நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.

News March 22, 2024

BIG BREAKING: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

image

2ஜி வழக்கு தொடர்பான CBIயின் மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க ஏற்றுக் கொண்டது டெல்லி உயர்நீதிமன்றம். 2ஜி அலைக்கற்றையை விற்பனை செய்ததில் அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறி அப்போதைய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் அனைவரும் நிரபராதிகள் என்று 2017ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விசாரிக்கப்படவுள்ளது.

error: Content is protected !!