India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 2024 மக்களவைத் தேர்தலானது, திமுக மற்றும் பாஜக இடையேயான மோதல் களமாக மாறியுள்ளது. வழக்கமாக திமுக, அதிமுக இடையே காரசார விவாதமும், மோதலும் நடைபெறும். ஆனால் இம்முறை திமுக அரசுக்கு எதிராக அதிமுக முன்வைக்க வேண்டிய குற்றச்சாட்டு, விமர்சனங்களை பாஜக முன்வைக்கிறது. இதற்கு திமுகவும் பதிலளித்து வருவதால், 2024 தேர்தல் களமானது, திமுக மற்றும் பாஜக மோதல் களமாக மாறியுள்ளது.
2027இல் தென்ஆப்பிரிக்காவில் நடக்கவுள்ள உலகக் கோப்பை தொடருக்கான இடங்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது. இதன்படி கிங்ஸ்மீட், ஜார்ஜ்ஸ் பார்க், பப்பலோ பார்க், போலண்ட் பார்க், வான்டரர்ஸ், செஞ்சூரியன் பார்க் உள்ளிட்ட 8 மைதானங்களில் போட்டி நடைபெறவுள்ளது. விமான நிலையம், ரசிகர்கள் தங்குவதற்கு ஓட்டல் உள்ளிட்ட வசதிகளை பரிசீலித்து இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சமீபகாலமாக திராவிடக் கட்சிகளை சேர்ந்த பலர், பாஜகவை நோக்கி செல்கின்றனர். அந்த வகையில், வைகோவின் மருமகன் கார்த்திகேயன் கோபாலசாமி, மதிமுகவின் முன்னாள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் புதுக்கோட்டை செல்வம் ஆகியோர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். மதிமுகவின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்து புதுக்கோட்டை செல்வம் சமீபத்தில் கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 6ஆவது சுற்றுப் போட்டியில், தமிழக கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். அஜர்பைஜானைச் சேர்ந்த நிஜாத் அபாசோவுக்கு எதிரான இப்போட்டியில், பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். சிறு தவறு கூட செய்யாமல் கவனமுடன் விளையாடிய அவர், 45ஆவது நகர்த்தலில் நிஜாத்தை வீழ்த்தினார். இதனால் 3.5 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 4ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. உள்மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் 37 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையும், கடலோரப் பகுதிகளில் 33 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரையும் வெயில் கொளுத்தும். சென்னையில் 35 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். இதனால், உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மதிய நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் வெளியே வருவதை தவிர்க்கவும்.
காங்கிரஸ் கட்சி 60 ஆண்டுகளில் செய்த பணிகளை 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான அரசு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கூட்டத்தில் பேசிய அவர், அரசியலமைப்பு சட்டத்தை 80 முறை காங்கிரஸ் உடைத்து உள்ளதாகவும், இதுபெரிய பாவம் என்றும் விமர்சித்தார். சாதி, மதம், மொழி அடிப்படையில் யாரும் உயர்வானவர் இல்லை, தகுதியே ஒருவரை உயர்வானராக்குகிறது என்றும் கட்கரி குறிப்பிட்டார்.
பிட் புல் உள்ளிட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு விதித்த தடையை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என அடையாளம் காணப்பட்ட 23 இன நாய்களுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், உரிய ஆலோசனைக்கு பிறகு, புதிதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கலாம் எனக் கூறி, தடையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பெங்களூரு-மும்பை இடையேயான 25ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள பெங்களூரு அணி, புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியிலாவது வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முன்னேறுமா? என பலரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தோல்வியில் இருந்து மீண்டுள்ள மும்பையுடன் மோதவுள்ளதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தானில் கடந்த 2014, 2019 தேர்தல்களைப் போல், இந்த முறை பாஜக க்ளீன் ஸ்வீப் அடிக்க முடியாது என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மோடி – அமித்ஷாவின் சோந்த ஊர் மற்றும் பாஜக கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் NDA : 21-23, INDIA: 3-5, ராஜஸ்தானில் NDA: 17 -19, INDIA: 6 -8 இடங்களில் வெற்றி பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதை அறிந்த பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.
தேர்தலில் வென்று இபிஎஸ் என்ன பிரதமராக போகிறாரா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். கொடநாடு வழக்கில் தன்னை கைது செய்யக் கூடாது என்பதற்காக திமுகவுடன் இபிஎஸ் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார் என்று குற்றம் சாட்டிய அவர், எத்தனை குட்டிக்கரணம் அடித்தாலும் அதிமுக வெற்றிபெறாது என்றார். மேலும், என் பெயரை கூட சரியாக கூற வராத அவர், என்னை பச்சோந்தி என்று கூறுவது வெட்கக்கேடானது என்றும் விமர்சித்தார்.
Sorry, no posts matched your criteria.