news

News March 25, 2024

1982இல் அறிமுகப்படுத்தப்பட்ட EVM

image

*EVM முதன் முதலில் 1982இல் கேரள தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. * 1998 முதல் நாடு முழுவதும் EVM பயன்படுத்தப்பட்டது. நோட்டாவுக்கு வாக்களிக்கும் முறை 2014இல் நடைமுறைக்கு வந்தது. *64 வேட்பாளர்கள் வரை தேர்தலில் போட்டியிட்டால் EVM இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தலாம். அதற்கு மேல் இருந்தால் EVM பயன்படுத்த முடியாது.*1989 தேர்தலில் இருந்து வாக்களிக்கும் வயது 21இல் இருந்து 18 ஆக குறைக்கப்பட்டது.

News March 25, 2024

அடுத்தடுத்து 3 பேர் உயிரிழப்பு..

image

கடந்த இரண்டு நாட்களில் கோவை வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த மருத்துவர் சுப்பாராவ் (57), சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35), தேனியை சேர்ந்த பாண்டியன் (40) உயிரிழந்தனர். உடல் பரிசோதனை செய்யாமல் ரீல்ஸ் மோகத்தில் அதிகளவு இளைஞர்கள் மலையேற வருவதாகவும், மலை உச்சிக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

News March 25, 2024

தபால் ஓட்டுக்கு இன்று கடைசி நாள்

image

மக்களவைத் தேர்தலில் 85 வயதுக்கும் மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்க வகை செய்யும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தபால் மூலம் வாக்களிக்க 12டி படிவத்தை தேர்தல் ஆணையம் கடந்த 20ஆம் தேதி முதல் விநியோகித்தது. இதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.

News March 25, 2024

நிலநடுக்கத்திற்கு 5 பேர் பலி, 1,000 வீடுகள் தரைமட்டம்

image

பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 5 பேர் பலியாகினர். அந்நாட்டின் வடக்கு பகுதியில் நேற்று 6.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1,000 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலியான நிலையில், ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். இதனால் பலி எண்ணிகை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

News March 25, 2024

BREAKING: சென்னையில் மூட்டை மூட்டையாக சிக்கியது

image

சென்னையில் லாரியில் மூட்டை, மூட்டையாக கொண்டுவரப்பட்ட பாஜக கொடி, தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வில்லிவாக்கத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில், உரிய ஆவணங்களின்றி 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டுவரப்பட்ட பாஜக கொடி, தொப்பிகளை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 25, 2024

சுயேச்சைகளுக்கு 188 சின்னங்கள்

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகள், சுயேச்சைகளுக்காக பிஸ்கட், ரொட்டி, செங்கல் உள்ளிட்ட 188 சின்னங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் ஆட்டோ ரிக்சா, நடைவண்டி, பலூன், வளையல்கள், கிரிக்கெட் மட்டை, பிஸ்கட், ரொட்டி, கரும்பலகை, வாளி, கேக், புகைப்பட கருவி, தரை விரிப்பு, கேரம் பலகை, மிதிவண்டி காற்றடிக்கும் குழாய், நடை வண்டி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

News March 25, 2024

பேரூர் ஆதீனத்திடம் ஆசி பெற்ற அண்ணாமலை

image

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதீனமாக உள்ள பேரூருக்கு சென்ற அண்ணாமலைக்கு, மலர் கிரீடம் அணிவித்து ஆதீனம் ஆசி வழங்கினார். 2021இல் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல் மருதாசல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். ஆனால், அந்த தேர்தலில் கமல் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

News March 25, 2024

மக்களவைத் தேர்தலில் கார்கே மருமகன் போட்டி

image

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தனது மருமகன் ராதாகிருஷ்ண தொட்டமணிக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். குல்பர்கா தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்ற கார்கே, கடந்த 2019 தேர்தலில் தோல்வியடைந்தார். இதனால், இந்தத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்டியிடவில்லை. இந்நிலையில் கார்கேவின் மருமகனை வேட்பாளராக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

News March 25, 2024

இந்தியா, ஆஸி டெஸ்ட் தொடரில் மிகப் பெரிய மாற்றம்

image

இந்தியா, ஆஸி இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், 5 போட்டிகள் கொண்ட தொடராக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 3 போட்டி கொண்ட தொடராக நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 4 தொடர்களில் இந்தியாவின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. இதற்கு ரசிகர்கள் இடையே வரவேற்பு அதிகரித்தது. இதை கவனத்தில் கொண்டு, 5 போட்டிகள் கொண்ட தொடராக விரிவுப்படுத்த இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் முடிவு செய்துள்ளன.

News March 25, 2024

BREAKING: ஓபிஎஸ்-க்கு மேலும் சிக்கல்

image

அதிமுகவின் சின்னம், கொடியை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுகவின் சின்னம், கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், இது ஓபிஎஸ்-க்கு மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

error: Content is protected !!