India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1961 ஆம் ஆண்டு முதல் உலக நாடக அரங்க நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. *1886 – அமெரிக்காவில் அப்பாச்சி பழங்குடிகளின் போர்கள் முடிவுக்கு வந்தது.*1892 – ஈழத்து இறையியலாளர் சுவாமி விபுலாநந்தர் பிறந்த நாள். *1968 – விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் மறைந்த நாள். *1993 – யான் சமீன் சீனாவின் அரசுத்தலைவரானார். *1998 – வயாகரா மருந்தை அமெரிக்க அரசு பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதித்தது.
பாஜக தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ள வருண் காந்திக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் சௌதரி, “சோனியா-ராகுல் குடும்பத்துடன் வருண் நெருக்கம் காட்டுகிறார். இந்த காரணத்தினால்தான் அவரை பாஜக புறக்கணித்துள்ளது. அவரை காங்கிரஸ் கட்சியில் இணைய நான் வரவேற்கிறேன். அவர் எங்கள் கட்சியில் இணைந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்” என்றார்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2ஆவது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள CSK அணி 4 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் நீடிக்கிறது. CSK அணியின் நிகர ரன்ரேட் +1.979 ஆக உள்ளது. 2ஆவது இடத்தில் RR அணியும் (+1.000), 3ஆவது இடத்தில் KKR அணியும் (+0.200) உள்ளன.
அமெரிக்காவுக்கு விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் முடிவை லண்டன் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. அவரது முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், “மரண தண்டனை, வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட மாட்டாது என்பது போன்ற உத்தரவாதங்களை ஏப்ரல் 16-க்குள் அமெரிக்கா அளிக்க வேண்டும். இல்லையென்றால் அசாஞ்சேவுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்படும்” எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தது.
*குறள் பால்: பொருட்பால் | இயல்: குடியியல்
*அதிகாரம்: இரவு | குறள் எண்: 1051
*குறள்:
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
*பொருள்:
கேட்பதை கொடுக்கக்கூடிய வசதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, தன்னிடம் இருந்தும் அதை அவர் இல்லையென்று சொன்னால், அப்படிச் சொன்னவருக்குத்தான் இழிவே தவிர கேட்டவருக்கு அல்ல.
நடப்பு மார்ச் மாதத்தில், முதல் 22 நாள்களில் மட்டும் இந்திய பங்குச் சந்தையில் ₹38,000-க்கும் அதிகமாக வெளிநாட்டினர் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சி போன்ற அன்னிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில், அந்நிய முதலீட்டாளர்கள் ₹1,539 கோடி முதலீடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (மார்ச் 27) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இந்தியாவில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 22.5 லட்சம் வீடியோக்களை நீக்கியிருப்பதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்துக்கு சொந்தமான வீடியோ பகிர்வு தளமான யூடியூப்பை இந்தியாவில் 46.2 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். 2023 அக்டோபர் முதல் டிச., வரையிலான காலத்தில் வெளியான வீடியோக்களை நீக்கியுள்ள யூடியூப் நிறுவனம், உலகளவில் இதே காலத்தில் வெளியான 90 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளது.
பிக் பாஷ் கிரிக்கெட் விளையாடும் இந்திய வீரர் நிகில் சௌத்ரி, ஆஸ்திரேலியாவில் பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியிருக்கிறார். 2011ஆம் ஆண்டு நள்ளிரவில் காரில் வைத்து நிகில் தன்னை பலாத்காரம் செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். தடயவியல் பரிசோதனைகளும் அதனை உறுதிபடுத்தியுள்ளன. ஆனால், பெண்ணின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டதாக நிகில் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
*ஸ்டெர்லைட் ஆலையை திமுக அரசு தான் நீதிமன்றத்தில் வாதாடி மூடியது – ஸ்டாலின்
*ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு.
*ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்தும் முடிவை இங்கி., நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
*GT அணிக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் CSK அணி வெற்றி பெற்றது.
*இந்திய பங்குகளில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு ₹13,893 கோடியாக அதிகரித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.