India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலையொட்டி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யும் நட்சத்திரங்களின் பட்டியலை திமுக சற்றுமுன் வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்கள், போஸ் வெங்கட் , கருணாஸ், எழுத்தாளர் மதிமாறன், நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத், வாசுவிக்ரம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, கருணாஸ் தென் தமிழகத்தில் முக்குலத்தோர் சமூக வாக்குகளை கவரும் வகையில் பரப்புரை மேற்கொள்கிறார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஷேக்மேட் கேளிக்கை விடுதியின் மேற்கூரை நேற்று சரிந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த 3 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் போலீசார், விடுதி மேலாளர் சதீஷை இன்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான விடுதியின் உரிமையாளர் அசோக்குமாரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிஏஏ சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தி பல நாள்களாகி விட்டநிலையில், அதுகுறித்து ராகுல் காந்தி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில், “சிஏஏ சட்டம் குறித்து ஒரு வார்த்தை கூட ராகுல் தனது இந்திய நீதி யாத்திரையில் பேசவில்லை. சட்டம் அமலாகி பல நாள்களாகியும் அவர் வாய்திறக்கவில்லை. கார்கேவும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை” என்றார்.
விழுப்புரத்தில் போட்டியிடும் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து சூர்யாவின் தந்தை சிவக்குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், “தனித்து நின்றாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கும் ரவிகுமார் போன்றவர்களை தமிழ் மக்கள் தேர்வு செய்து பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெய்பீம் படத்தின்போது சூர்யாவிற்கு எதிராக பாமகவும், ஆதரவாக விசிகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வலி நிவாரணிகள், தொற்று நோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் சிறிய அளவில் உயர உள்ளது. முந்தைய ஆண்டுகளில் 10 -12% வரை விலை உயர்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இம்முறை விலை உயர்வு சதவீதம் சற்று குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி, மொத்த விற்பனை விலை குறியீட்டிற்கு ஏற்ப, அத்தியாவசிய மருந்துகளின் விலையை 0.0055% உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
2024 ஐபிஎல் புள்ளி பட்டியலில் சிஎஸ்கே அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும், அணிகள் வகிக்கும் இடங்கள் மாறி வருகின்றன. சிஎஸ்கே அணி தாம் விளையாடிய 2 போட்டிகளிலும் வென்றுள்ளது. இதனால் 4 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. ராஜஸ்தான் அணியும் 2 வெற்றிகளுடன், ரன் ரேட் அடிப்படையில் 2ஆவது இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி 3ஆவது இடத்தில் உள்ளது.
மருத்துவ கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட வழக்கில், கெஜ்ரிவால் மீது ஆளுநர் வி.கே. சக்சேனா குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். அவரின் அறிக்கையில், “பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கல்லூரி முதல்வரை நீக்கும்படி அமைச்சர் சவுரப் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் கல்லூரி முதல்வரை இடமாற்றும் கோப்பு, கெஜ்ரிவாலிடம் 45 நாள்களாக கிடப்பில் உள்ளது. இதன் பின்னணி என்ன?” எனக் கூறப்பட்டுள்ளது.
ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த கார், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மலைப்பகுதியான ரம்பன் பகுதியில் நேற்று நள்ளிரவு 1.15 மணியளவில் சென்ற போது கார் நிலைதடுமாறி 300 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரையும் இணைத்து ஆட்சியை தக்கவைத்தது பாஜக தான் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் அவர், சிறுபான்மையினர் ஓட்டுக்காக கூட்டணியில் இருந்து இபிஎஸ் வெளியேறியதாக சாடினார். தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக போட்டியிலேயே இல்லை என்றும், தேர்தலில் திமுக – பாஜக இடையே தான் போட்டி நிலவுவதாகவும் அவர் கூறினார்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து, ரூ.51,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று சவரன் ஒன்று ரூ.50 ஆயிரத்தை தொட்ட நிலையில், இன்று சவரன் ரூ.51 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.140 உயர்ந்து, ரூ.6,390க்கு விற்பனையாகிறது. இதே போல, வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80க்கு விற்பனையாகிறது. இது நடுத்தர மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.