India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈரோட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியாக பதிவாகி மக்களை தவிக்கவிட்டது. கரூர் பரமத்தியில் 39.2 டிகிரி, தர்மபுரியில் 39 டிகிரி, சேலத்தில் 38.8 டிகிரி, திருத்தணியில் 38.3, மதுரையில் 38.2 என்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36.2 டிகிரியாக பதிவானது. மார்ச் மாதம் முடியும் முன்பே வெப்பநிலை 40 டிகிரியை தொட்டிருப்பது மக்களை கவலையடையச் செய்துள்ளது.
தாய்மொழியாக தமிழ் தனக்கு கிடைக்காதது மிகுந்த வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமோ செயலி மூலம் இந்தியில் மோடி தமிழக பாஜக தொண்டர்களுடன் உரையாடினார். அதில் ‘தமிழில் பேச முடியவில்லையென்ற வருத்தம் மனதில் ஆழமாக உள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் சட்டம், ஒழுங்கு பிரச்னை, ஊழல் அதிகரித்துள்ளது. மக்களுக்கு புதுப்புது பிரச்னையை உருவாக்குவதே திமுகவின் வேலையாக இருக்கிறது’ என பேசியுள்ளார்.
வருமான வரித்துறை சார்பில் பாக்கி வரி ரூ.1823 கோடி செலுத்துமாறு காங்கிரஸ் கட்சிக்கும், ரூ.11 கோடி செலுத்துமாறு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக காங்., தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் நடைபெறும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் பூஜா வஸ்த்ரகர் பாஜகவை விமர்சித்து பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் இருக்கும் அந்த புகைப்படத்தில் ‘வசூலி டைட்டன்ஸ்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. வஸ்த்ரகர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு BCCIயிடம் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர். அவரது இன்ஸ்ட்டா ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என சிலர் கூறி வருகின்றனர்.
கடந்த மாதம் வெளியான மலையாள படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. ரூ.20 கோடியில் உருவான இப்படம் ரூ.214 கோடி வசூலைக் குவித்து, மலையாளத்தில் 200 கோடி வசூலித்த முதல் படம் என்ற சாதனையையும் படைத்தது. இப்படம் தற்போது தெலுங்கு மொழியில் டப் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஏப்ரல் 6ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வரலாற்றில் இல்லாத வகையில் இந்த ஆண்டு 2 முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். நான் கிழித்த கோட்டை தாண்டினால் கைது செய்வேன் என பிரதமர் மோடி மிரட்டுவது விபத்தோ, விபரீதமோ அல்ல. பேராபத்து எனக் கூறிய அவர், சினிமாவில் கூட இதுபோல கற்பனை செய்து பார்க்க முடியாது என்றார். ஊழல் வழக்குகளில் ஜார்க்கண்ட் முதல்வர் சோரன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடிய ஒவ்வொரு முறையும், அவர்களை வீழ்த்தியே ஆக வேண்டும் என நினைத்ததாக கொல்கத்தா அணியின் ஆலோசகர் கம்பீர் தெரிவித்துள்ளார். RCB அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை என்றாலும், தனது மனதில் அவர்கள் கோப்பையை வென்றவர்கள்தான் என்ற எண்ணம் எப்போதும் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், கோலி, கெயில், ABD போன்றோரைக் கொண்ட வலிமையான அணியாக RCB இருந்ததாகக் கூறினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimenதான் ஏற்கெனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கையெழுத்து இல்லாத மனுவை ஏற்பது சட்ட விரோதம்” என்று ஓபிஎஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு மதியம் சாப்பிட்டு முடித்தவுடன், லேசாக கண்ணை கட்டும். அப்போது குட்டித்தூக்கம் போடுவது பல நன்மைகளை அளிக்குமாம். குட்டித்தூக்கம் என்பது 10 முதல் 20 நிமிடங்களுக்கு மட்டுமே. இதனால் உடலும், மனமும் புத்துணர்வு பெறும். தேவையற்ற கவலை, பதற்றத்தை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு, இதய நோய் அபாயத்தை குறைக்குமென சமீபத்திய ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
மோடியின் சாலை பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, கோவை தனியார் பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பள்ளி குழந்தைகள் சாலை பேரணியில் பங்கேற்றதற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை ஏப்.3ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.