news

News March 29, 2024

போலி அழைப்புகளை கண்டு ஏமாறாதீர்

image

வாட்ஸ்அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு துறை (DOT) அறிவுறுத்தியுள்ளது. மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் அல்லது சட்டவிரோத செயல்களில் மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக்கூறி வரும் அழைப்புகளை தவிர்க்குமாறு எச்சரித்துள்ள DOT, இத்தகைய அழைப்புகளால் சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிகளை செய்ய, தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

News March 29, 2024

வாக்களிக்காவிட்டால் ரூ. 350 அபராதம்? விளக்கம்!

image

தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு ரூ. 350 அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. வங்கிக் கணக்கில் இருந்து அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் PIB FACT CHECK அமைப்பு, ‘இது தவறான தகவல். தேர்தல் ஆணையம் அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளது.

News March 29, 2024

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு

image

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படுமென ராகுல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், “இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை 50% இல்லையா? உயர்கல்வி பயில்வோரில் பெண்கள் 50% இல்லையா? ஆம் எனில், அரசுப் பணிகளில் மட்டும் பங்கு ஏன் குறைவாக உள்ளது. இடஒதுக்கீடு அளிக்கும் வலிமையால் பெண்கள் நாட்டின் தலையெழுத்தை மாற்றுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

News March 29, 2024

மூன்று வேடத்தில் நடிக்கும் அஜித்?

image

‘விடாமுயற்சி’ படத்தையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் அஜித் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில், இப்படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2006இல் ‘வரலாறு’ படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடித்திருந்தார்.

News March 29, 2024

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை

image

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘விலைவாசி உயர்வால் விவசாயமும், நெசவாளர்களும் நலிவடைந்துள்ளனர். விவசாயமே தெரியாத முதல்வர் ஸ்டாலின், விவசாயம் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்கிறார்’ என விமர்சித்துள்ளார்.

News March 29, 2024

இந்தியாவில் வேலையில்லா பட்டதாரிகள் அதிகம்

image

இந்தியாவில் படிக்காதவர்களோடு ஒப்பிடுகையில் படித்த இளைஞர்களின் வேலையின்மை விகிதம் அதிகமாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ILO அறிக்கையில், ‘பட்டப்படிப்பு முடித்தோரின் வேலையின்மை விகிதம் 29.1% ஆக உள்ளது. அதே நேரம், படிக்காதவர்களின் வேலையின்மை விகிதம் 3.4% ஆக உள்ளது. இது தவிர, மேல்நிலை படிப்பு வரை முடித்தோரின் வேலையின்மை விகிதம் 18.4%ஆக இருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

News March 29, 2024

ஏப்ரல் 1 முதல் வரப் போகும் மாற்றங்கள்

image

* புதிதாக வருமான வரி தாக்கல் செய்வோருக்கு Default Settingsஆக New Regime இருக்கும்.
* வருமான வரியில் 50,000 Standard Deduction திட்டம் இனி New Regimeஇலும் கணக்கிடப்படும்.
* அரசாங்க ஊழியர் அல்லாதோருக்கு Leave encashment tax exemption ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* SBI டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
* அனைத்து விதமான காப்பீடுகளும் இனி டிஜிட்டல் முறையிலேயே செய்யப்படும்.

News March 29, 2024

போதைப் பொருளை ஒழிக்க பாஜக போதும்

image

போதைப்பொருள் புழக்கத்திலிருந்து நமது சமூகத்தை காக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ‘எனது பூத் வலிமையான பூத்’ என்ற பெயரில் நமோ செயலி மூலம் தமிழக பாஜக நிர்வாகிகளிடம் பேசிய அவர், கடந்த சில நாள்களாக பிடிபடும் போதைப் பொருட்களின் தலைமைக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் நுழையும் போதைப்பொருளுக்கு எதிராக போராட பாஜகவே போதும் எனவும் அவர் பேசினார்.

News March 29, 2024

IPL: ஆர்சிபி அணி பேட்டிங்

image

ஐபிஎல் போட்டியில் பெங்களூருவில் இன்று நடைபெறும் போட்டியில் பெங்களூரு – கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற KKR கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து RCB அணி இன்னும் சற்று நேரத்தில் பேட்டிங் செய்ய உள்ளது. புள்ளிகள் பட்டியலில் கேகேஆர் 4 ஆவது இடத்திலும், ஆர்சிபி அணி 6 ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்? கமெண்ட் பண்ணுங்க.

News March 29, 2024

குற்றவாளிகள் குறித்து தகவல் தந்தால் ரூ.10 லட்சம் வெகுமதி

image

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியாக வழங்கப்படுமென என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மார்ச் 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பு வழக்கை என்.ஐ.ஏ தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகளின் தெளிவான புகைப்படங்களை வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, தகவல் தருவோரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படுமென தெரிவித்துள்ளது.

error: Content is protected !!