India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங்கிற்கு ஆர்சிபி அணி வீரர் விராட் கோலி பேட் பரிசளித்துள்ளார். இந்திய அணி சார்பில் 20 ஓவர் போட்டிகளில் புதிதாக களமிறங்கியுள்ள ரிங்கு சிங், அதிரடியாக கலக்கி வருகிறார். அவர் ஐபிஎல்லில் கொல்கத்தா அணி சார்பில் விளையாடி வருகிறார். நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு கோலியை அவர் சந்தித்தார். அப்போது அவருக்கு கோலி, ஒரு பேட்டை பரிசாக வழங்கினார்.
விசிக என்றால் விழுப்புரம், சிதம்பரம் பகுதி கட்சி என அண்ணாமலை விமர்சித்துள்ளார். சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்திகாயினியை ஆதரித்து பேசிய அவர், “விசிகவுக்கு பொதுத் தொகுதி தரவில்லை என்றால் தீக்குளிப்போம் அக்கட்சி நிர்வாகிகள் கூறினார்கள். இப்போது திமுக பொதுத்தொகுதியை கொடுத்துவிட்டதா? வாயை திறந்தால் திருமாவளவன் பொய் பேசுகிறார். அவரின் பொய் இந்தமுறை சிதம்பரத்தில் எடுபடாது” எனக் கூறினார்.
விசாக்களுக்கான கட்டணத்தை வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமெரிக்கா பலமடங்கு உயர்த்தியுள்ளது. வெளிநாட்டினரை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்த வழிவகுக்கும் எச்.1பி விசா படிவ கட்டணம் ரூ.38,000ல் இருந்து ரூ.64,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கான இபி-5 விசா கட்டணம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாகவும், எல்.1 விசா கட்டணம் ரூ.38,000ல் இருந்து ரூ.1.10 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் திருப்பூரில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட சந்திரசேகர் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்ட நிலையில், இன்று திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டார். மேலும், தலைமை மீதான அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்வதாக கூறினார். கரும்பு விவசாயி சின்னத்திற்காக நாதக எவ்வளவோ முயன்றும் அச்சின்னத்தை பெற முடியாமல் மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது.
காங்கிரசுக்கு மேலும் 2 நோட்டீஸ்கள் வருமான வரித்துறையால் அனுப்பப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே அக்கட்சிக்கு ரூ.1,823 கோடி செலுத்தக் கோரி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், ஜெய்ராம் ரமேஷ் அளித்துள்ள பேட்டியில், “வருமான வரித்துறை நேற்றிரவு மேலும் 2 நோட்டீஸ்களை அனுப்பியிருக்கிறது. இது வரி தீவிரவாதம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியை பிரதமர் பரப்புவதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்ததற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழுக்கு அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார் பிரதமர் மோடி. 2 ஆண்டுகளாக காசித் தமிழ்ச் சங்கமம் விமரிசையாக நடத்தப்பட்டது. அதுமட்டுமல்ல, செம்மொழி ஆய்வு மையத்திற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் எழுத பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார் என விளக்கமளித்தார்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பாரத ரத்னா விருதை வாங்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இன்று வரவில்லை. அவருடன் சேர்த்து, 5 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் 4 பேர் சார்பில் அவர்களின் வாரிசுகள் நேரில் விருதை பெற்றுக் கொண்டனர். ஆனால், அத்வானியோ, அவரது குடும்பத்தினரோ வரவில்லை. உடல்நிலை காரணமாக அத்வானியின் வீட்டுக்கு சென்று விருது அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி நடிக்கவுள்ள புதிய படம், டைம் டிராவல் படமாக இருக்கலாம் என தகவல் பரவி வருகிறது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் ரஜினி தற்போது நடிக்கிறார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள பட போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ரஜினியின் பின்னால் டைம் மெஷின் இருப்பது போல உள்ளது. இதை வைத்து டைம் டிராவல் படமாக இருக்கலாம் என தகவல் பரவுகிறது.
நடிகை ராதிகாவின் சித்தி தொடரில் அறிமுகமாகி சின்னத்திரையிலேயே தனித்துவம் காட்டியவர் பாலாஜி. அதில், டேனியல் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்ததால் அவர் டேனியல் பாலாஜி ஆனார். இந்நிலையில், அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், டேனியல் பாலாஜியின் மறைவை நம்பமுடியவில்லை என்றும் இச்செய்தி தன்னை துயரில் ஆழ்த்துவதாகவும் ராதிகா உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏப்.19 முதல் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பொதுவாக வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், 7 கட்டங்களாக தேர்தல் நடப்பதால் ஏப்.19 காலை 7 மணி முதல் ஜூன் 1 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.