India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஐ.பி.எல்லில் இதுபோன்ற மோசமான பவுலிங்கை வைத்து கொண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கோப்பையை வெல்ல வாய்ப்பே இல்லையென இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆருடம் கூறியுள்ளார். நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த KKR அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய RCB அணி 182 ரன்களை குவித்தது, இருப்பினும் பந்துவீச்சாளர்கள் சொதப்பவே, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெறும் அவகாசம் முடிந்த நிலையில், சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. தனக்கு வாளி, திராட்சை, பலாப்பழம் ஆகிய 3 சின்னங்களை விருப்ப சின்னங்களாக ஓபிஎஸ் கேட்டிருந்தார். இந்நிலையில், ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலூர் குடியாத்தம் அருகே நீரில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, அவரது மகள் லலிதா உள்பட 4 பேர் முனீஸ்வரன் கோயிலுக்கு சென்றனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அருகிலிருந்த ஏரியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவத்தை அடுத்து 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மன்சூர் அலிகானுக்கு பாலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக சுயேச்சையாக போட்டியிடும் அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனக்கு விருப்ப சின்னமாக பலாப்பழம், மீன், விமானம் உள்ளிட்டவற்றை அவர் கேட்டிருந்த நிலையில், அவருக்கு பலாப்பழம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பலாப்பழத்தோடு பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.
டிடிவி.தினகரன் வீட்டு காவல் நாய்களாக இருந்தது உண்மை தான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக வேட்பாளர் நாராயண சாமியை ஆதரித்து பேசிய அவர், “என்னை தினகரன் காமெடியன் என்கிறார், நான் காமெடியனாக இருந்தாலும், ஹீரோ கூடவே இருப்பேன். வில்லனான தினகரன் விரைவில் ஃபெரா வழக்கில் சிறைக்கு போகப் போகிறார். தேர்தல் முடிவு தினகரனுக்கு நல்ல பாடமாக இருக்கும்” என்றார்.
ஜம்மு காஷ்மீரில் பனி உருகுவது அதிகரித்துள்ளதோடு, மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், எல்லை கட்டுப்பாட்டுக் கோடு ஒட்டிய பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பி.எஸ்.எஃப் அதிகாரி அசோக் யாதவ் தெரிவித்துள்ளார். இருப்பினும், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் செயல்பட்டு, ஊடுருவல் முயற்சியை முறியடிப்பரெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜகவை தேர்தலில் வீழ்த்த வரலாறு ஒரு அரிய வாய்ப்பு தந்திருப்பதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், அநீதி இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட ஒரு வரலாறு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், வாக்குக்கு பணம் கொடுக்கும் நிலை இன்றும் தொடர்வதாக வேதனை தெரிவித்த அவர், தாங்கள் மாற்று அரசியலை முன்வைத்து செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் தாக்கலான 1,749 மனுக்களில் 1,090 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இதில், அதிகபட்சமாக கரூரில் 56 மனுக்களும், குறைந்தபட்சமாக தஞ்சை, காஞ்சிபுரத்தில் தலா 13 மனுக்களும் ஏற்கப்பட்டிருக்கின்றன.
ஆண்ட்ரியா நடித்துள்ள ‘கா: தி பாரஸ்ட்” படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இப்படத்தை தடை செய்ய வேண்டும் என சசி பிசினஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இப்படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு பானைச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் முடிந்த நிலையில், சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கும், விழுப்புரம் தொகுதியில் ரவிகுமாருக்கும் பானைச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.