India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில், 6 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வேட்பாளர்களின் இறுதி பட்டியல் நேற்று வெளியானது. அதில், மத்திய சென்னை, வேலூர், விழுப்புரம், சேலம், பொள்ளாச்சி, தஞ்சாவூர் ஆகிய 6 தொகுதிகளில் ஒரு 1 வேட்பாளர் கூட போட்டியிடவில்லை. மேலும், 39 தொகுதிகளில் மாற்றுப் பாலினத்தவர் ஒருவர் கூட போட்டியிடவில்லை.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல், வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக சுயேச்சையாக போட்டியிடும் மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் இருவரும் ஒரே சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
▶செல்களை பராமரித்து, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
▶சருமத்திற்கு இயற்கையான பொலிவை தரும்.
▶உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடல் எடையைக் குறைக்கும்.
▶இதில் இருக்கும் ஒமேகா-3 கொழுப்பு சத்து, எலும்புகளின் வலிமை அடையச் செய்யும்.
▶மூளையில் உள்ள அணுக்களைத் தூண்டிவிட்டு மூளையைச் சுறுசுறுப்படைய செய்யும்.
▶முடியின் வேர்கள் வலுவடைந்து, மிருதுவான, நீளமான முடியை பெறலாம்.
நடிகர் டேனியல் பாலாஜி தனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருந்தார். ஏப்ரல், காதல் கொண்டேன் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த அவர், ‘காக்க காக்க’ படத்தில் சூர்யாவுக்கு நண்பனாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். பின், வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வை ராஜா வை, வட உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
குஜராத் – ஐதராபாத் இடையேயான 12ஆவது ஐபிஎல் போட்டி, இன்று மதியம் 3.30 மணிக்கு நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் ஐதராபாத்-4, குஜராத்-8ஆவது இடத்தில் உள்ளன. சொந்த மண்ணில் குஜராத் அணி வெல்லுமா? வரலாறு படைத்த ஐதராபாத் அணி மீண்டும் அதிரடி காட்டுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். எந்த அணி வெற்றி பெறும் என கமெண்டில் சொல்லுங்க.
தமிழ்நாடு அரசுப் பணியில் குரூப் 1 நிலையில் இருந்த 7 அதிகாரிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு காலியாக இருந்த 7 பணியிடங்களுக்கு செளந்தரவள்ளி, மோகனச்சந்திரன், ஆா்.சதீஷ், கந்தசாமி, சுகுமாா், துா்கா மூா்த்தி, பொற்கொடி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தோ்தல் ஆணையத்தின் அனுமதியுடன் மத்திய அரசு பிறப்பித்துள்ள நிலையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
1889 – ஐஃபிள் (Eiffel) கோபுரத்தின் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
1918 – ஐக்கிய அமெரிக்காவில் கோடை நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
1942 – இரண்டாம் உலகப் போர்: கிறிஸ்துமஸ் தீவை பிரிட்டனிடம் இருந்து ஜப்பான் கைப்பற்றியது.
1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது.
1990 – இந்திய அமைதிப் படை ஈழத்தில் இருந்து விலக்கப்பட்டது.
மத்தியில் I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்தால், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி உறுதி அளித்துள்ளார். கடலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், “பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும்போது, லேப்டாப் கொடுக்காமல் விடுவோமா. நிச்சயமாக வழங்கப்படும். மோடி ஆட்சி தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. மக்களை இனியும் ஏமாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
திருமணம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா ஓப்பனாக கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எனக்கு விரைவில் திருமணம் நடக்கும். அது நிச்சயம் காதல் திருமணம் தான். அதுவும், எனது பெற்றோர் சம்மதத்துடன் தான் நடக்கும்” எனக் கூறியுள்ளார். நடிகை ராஷ்மிகாவுடன் அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்கும் அவர், விரைவில் தங்கள் காதலை ரசிகர்களுக்கு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மியாமி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரை, இந்திய ஜோடி அபாரமாக கைப்பற்றியுள்ளது. ஆடவருக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், குரோஷியாவின் டோடிக் மற்றும் அமெரிக்காவின் க்ராஜிசெக் ஜோடி – இந்தியாவின் போபண்ணா மற்றும் ஆஸி.,யின் மேத்யூ எப்டன் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-7, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
Sorry, no posts matched your criteria.