India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடக்கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில், “ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியிலான முக்கிய பதவியாகும். ஆளுநர்களிடம் உங்களது பணியை செய்யுங்கள், மசோதாக்களை தாமதப்படுத்தாதீர்கள் என கூறுவது நீதிமன்றங்களுக்கு சங்கடமாக உள்ளது” என்றார்.
சவுதி ப்ரோ கால்பந்து போட்டியில், ரொனால்டோவின் அல்-நாசர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அல்-தை அணிக்கு எதிரான போட்டியின் முதல் பாதியில், அல்-நாசர் அணி வீரர்கள் ஒட்டாவியோ, அப்துல் ரகுமான் ரஹீம் ஆகியோர் தலா 1 கோல் அடித்து அசத்தினர். பின்னர், 2ஆவது பாதி ஆட்டத்தில், நட்சத்திர வீரர் ரொனால்டோ, அடுத்தடுத்து 3 கோல்களை அடிக்க, 5-0 என்ற கோல் கணக்கில் அல் நாசர் அணி மகத்தான வெற்றியை பதிவு செய்தது.
2021இல் திரிணாமுல் கொண்டுவந்த “லக்ஷ்மிர் பந்தர்” என்ற திட்டத்தை காப்பியடித்து பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தி வருவதாக திரிணாமுல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி விமர்சித்துள்ளார். மேலும், மத்திய பாஜக அரசு சமையல் சிலிண்டர் ஏழை மக்களுக்கு இலவசம் என்று அறிவித்தால், நாங்கள் நிறுத்தியுள்ள 42 வேட்பாளர்களையும் திருப்ப பெற தயார். நாங்கள் என்ன வாக்குறுதி அளித்தோமோ, அதை நிறைவேற்றி காட்டுவோம் என்றார்.
கோவை வெள்ளியங்கிரி மலைக்கோவிலுக்கு சென்ற சென்னையை சேர்ந்த ரகுராமன் 5ஆவது மலையில் உள்ள சீதை வனம் பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் 3 பேர் உள்பட ஒன்றரை மாதத்தில் மட்டும் மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் 6 பேர் மரணமடைந்துள்ளனர். வெள்ளியங்கிரி மலைக்கு செல்வோர் முறையாக உடல்பரிசோதனை செய்யவும். உடலில் சிறு பிரச்னைகள் இருந்தாலும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பை உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய பாஜக அரசு கடந்த 2016இல் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாதென அறிவித்தது. இந்நிலையில், ஐதராபாத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய நீதிபதி நாகரத்னா, “பணமதிப்பிழப்பால் கருப்பு பணத்தை பதுக்குபவர்களே பயனடைந்தனர். கருப்பு பணத்தை அவர்கள் வெள்ளையாக்கி விட்டனர். ஆனால், சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்” என்றார்.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் கடைசி வாரத்தில் தேர்வு செய்யப்பட இருப்பதாக கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 9ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் ஜூன் 1 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தற்போது நடைபெறும் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடும் வீரர்களை கவனத்தில் வைத்து, ஏப்ரல் மாத கடைசியில் அணி தேர்வு செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் பாஸ்ட் டேக்கில் கேஒய்சி விவரத்தை புதுப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆதலால் சம்பந்தப்பட்ட வங்கியில் நேரிலோ அல்லது இணையதளம் மூலமோ கேஒய்சி விவரத்தை இன்றைக்குள் புதுப்பிக்கும்படி தேசிய நெடுஞ்சாலைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது. கேஒய்சி விவரம் புதுப்பிக்கவில்லையெனில் பாஸ்ட் டேக் கணக்கு முடக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
பெரம்பலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்போது, தேர்தலுக்கு தேர்தல் பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் திமுகவை நம்ப வேண்டாம். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற தூய்மையான நோக்கத்தில் பாரிவேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பிபிஎஃப் கணக்கு வைத்திருப்போர், நிதியாண்டின் கடைசி நாளான இன்று குறைந்தபட்சம் ரூ.500 பங்களிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் அந்த கணக்கு முடக்கப்படும். மறுபடியும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமெனில், ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும். அதுபோல குறைந்தபட்ச பங்களிப்பு இல்லாத பிபிஎஃப் கணக்கில் இருந்து கடன் பெறும் வசதியும், பணத்தை திரும்ப பெறும் வசதியும் ரத்து செய்யப்படும்.
அசாம் மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் உட்பட 3 முக்கிய தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகிய அதேநாளில் பாஜகவில் இணைந்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலப் பொதுச்செயலாளர் மானாஷ் போரா, செயலாளர் கவுரவ் சோமானி, மாவட்ட தலைவர் அனுஜ் பார்காதாகி ஆகியோர் திடீரென கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதில், மானாஷ், அனுஜ் ஆகிய இருவரும் முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களின் மகன்கள் ஆவர்.
Sorry, no posts matched your criteria.