India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவில்லை என இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் விஜயேந்திரன் கூறியுள்ளார். தமிழக பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தக் கட்சி பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், நாகை வேட்பாளர் ரமேஷை ஆதரித்து அண்ணாமலை மேற்கொண்ட பிரசாரத்திற்கு அழைக்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், அர்ஜுன் சம்பத் படத்தையும் புறக்கணித்ததால் ரமேஷுக்கு இனி ஆதரவு இல்லை எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்.19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெறும். அந்தவகையில், கரூரில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 4 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. வடசென்னை, தென்சென்னை, கோவை, திருச்சி தொகுதிகளில் 3 இயந்திரங்களும், நாகை உள்ளிட்ட 9 தொகுதிகளில் ஒரு இயந்திரமும் பயன்படுத்தப்பட உள்ளன.
காங்கிரஸ் மீது குற்றம் சாட்ட பிரதமருக்கு தகுதியில்லை என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “இந்திய பகுதிகளை சீனாவிடம் இழந்துவிட்டு, அதை இல்லை என மறுப்பவர் தான் பிரதமர் மோடி. அவர் இன்றைக்கு, கச்சத்தீவு விவகாரம் பற்றி காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறார். மோடியின் பொய் பரப்புரைகள் தமிழகத்தில் எடுபடாது. தேர்தல் முடிவில் மக்கள் அவருக்கு பதிலடி தருவார்கள்” எனத் தெரிவித்துள்ளாா்.
பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான SBI வங்கி அவ்வப்போது FD வட்டியை மாற்றி அமைக்கிறது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதங்கள் எவ்வளவு வழங்கப்படுகிறது என்பதை இங்கே காணலாம். 7-45 நாட்கள் வரை 4%, 46-179 நாட்கள் வரை 5.25%, 180-210 நாட்கள் வரை 6.25%, 211-ஒரு வருடம் வரை 6.5%, 1-2 ஆண்டுகள் வரை 7.3%, 2-3 ஆண்டுகள் வரை 7.5%, 5-10 ஆண்டுகள் வரை 7.5% வட்டி வழங்கப்படுகிறது.
பிருத்விராஜ், அமலாபால் நடிப்பில் மார்ச் 28ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் ‘ஆடுஜீவிதம்’. இப்படத்திற்காக உடல் எடையை குறைத்தது குறித்து நடிகர் பிருத்விராஜ் நேர்காணலில், ‘இக்கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காக நான் 72 மணி நேரம் எதுவுமே சாப்பிடாமல் இருந்தேன். இது சரியான முறையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த சமயத்தில் எடையைக் குறைக்க வேண்டுமென அதைச் செய்தேன்’ என்றார்.
பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுக தான் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “தேர்தலுக்கு பிறகு அதிமுக தமிழ்நாட்டில் இருக்காது என பாஜக கூறுகிறது. 1998 தேர்தலில் பாஜகவை தமிழகத்தில் அடையாளம் காட்டியதே அதிமுக தான். எங்கள் இயக்கத்தை தொட எந்த கொம்பனாலும் முடியாது” எனத் தெரிவித்தார். அதிமுக தேர்தலுக்கு பிறகு இருக்காது என மதுரை பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசன் விமர்சித்திருந்தார்.
விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ரிஷப் பந்த் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் CSK அணி பவுலிங் செய்ய உள்ளது. புள்ளிப் பட்டியலில் 2 வெற்றிகளுடன் CSK முதலிடத்திலும், ஒரு வெற்றிகூட பெறாத DC 9ஆவது இடத்திலும் உள்ளது. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. SRH நிர்ணயித்த 163 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய GT 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து, இலக்கை எட்டி வெற்றிபெற்றது. GT அணியில் கில் 36, சாய் சுதர்சன் 45, டேவிட் மில்லர் 44 ரன்கள் எடுத்தனர். SRH சார்பில் சாபஷ், மார்கண்டே, கம்மின்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.
தேசிய திறனறி தகுதித் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. 8ம் வகுப்பில் இந்தத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 9-12ஆம் வகுப்பு வரை மொத்தம் ₹48000 வழங்கப்படும். மாதந்தோறும் 7ஆம் தேதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த நிலையில், ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் அடுத்த நாளான திங்கள் கிழமைதான் இந்த பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தி எதிர்ப்பு போராட்டம் நெருப்புக்கு சமம் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். “இந்தி எதிர்ப்பு போராட்டம் செருப்புக்கு சமமானது அல்ல, அது நெருப்புக்கு சமமானது. தமிழகத்தில் பற்றி எறிந்த வரலாற்று நெருப்பை யாராலும் மறக்க முடியாது. தமிழர் உணர்வை மதிக்காத எவரையும் தமிழகம் மன்னிக்காது” என்று X-இல் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இந்தி எதிர்ப்பு போராட்டத்தை செருப்போடு ஒப்பிட்டு அண்ணாமலை பேசியிருந்தார்.
Sorry, no posts matched your criteria.