India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக கொண்டு வந்ததால் நல்ல திட்டங்களை கூட அதிமுகவும், பாஜகவும் குறை சொல்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘வேண்டுமென்றே அவதூறு கூறுகின்றனர். வெள்ள நிவாரணத் தொகையை கூட பிச்சை என்று சொல்லி பாஜக இழிவுப்படுத்தியது. சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து இருண்ட ஆட்சியை கொடுத்தது அதிமுக தான். மக்களுக்கான அரசாக திமுக செயல்பட்டு வருகிறது’ என்றார்.
தமிழகத்தில் உள்ள 29 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் (ஏப்.1) புதிய கட்டணம் அமலுக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் சுங்கச் சாவடிகளில் அவ்வப்போது சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில முக்கிய சுங்கச் சாவடிகளில் நாளை முதல் ₹5-₹20 வரை கட்டண உயர உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கணிசமாக உயரும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது. ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய வார்னர் 52, ப்ரித்வி ஷா 43, ரிஷப் பந்த் 51 ரன்கள் குவித்தனர். சென்னை தரப்பில் சிறப்பாக பந்துவீசிய பதிரன 3, முஸ்தபிஃசூர் 1, ஜடேஜா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்னும் சற்று நேரத்தில் சென்னை அணி களமிறங்க உள்ளது.
நாய் என்றைக்கும் சிங்கமாகாது. ஓநாயாக வேண்டுமானால் மாறலாமென டிடிவி தினகரன் பதிலடி அளித்துள்ளார். தேனியில் பிரசாரத்துக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘துரோகிகள் கையில் அதிமுக இருக்கிறது. அதை மீட்டெடுக்கும் ஜனநாயக ஆயுதமாக அமமுக தொடங்கப்பட்டுள்ளது’ என்றார். முன்னதாக, தினகரன் வீட்டு காவல் நாயாக இருந்தோம். தற்போது சீறும் சிங்கமாக மாறிவிட்டோம் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியிருந்தார்.
சென்னை அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவந்த டெல்லி வீரர் ப்ரித்வி ஷாவை கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய தோனி புதிய சாதனை படைத்துள்ளார். டி20 போட்டிகளில் அதிக பேட்ஸ்மேன்களை (300) ஆட்டமிழக்க செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கம்ரான் அக்மல் 274, தினேஷ் கார்த்திக் 274, டிகாக் 270, பட்லர் 209 அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தோனியின் இந்த சாதனையை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பொதுவாகவே மொபைல் போன்கள் எப்போதும் சூடாக இருக்கும். கோடை காலத்தில் அதிக சூடாக இருக்கும். மொபைல் சூடாவதை தவிர்க்க இதை பின்பற்றுங்கள். ✦ வெயிலில் நின்று அதிகமாக போன் பயன்படுத்தாதீர்கள். ✦ பிராண்ட் சார்ஜர்களை மட்டுமே பயன்படுத்துங்கள். ✦ புளூடூத் மற்றும் லொகேஷன் போன்ற அம்சங்களை ஆப் செய்து வைக்கவும். ✦ தேவையற்ற ஆப்களை நீக்குங்கள். ✦ பவர் சேமிப்பு முறையை பயன்படுத்துங்கள்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் விண்ட்சர் அரண்மனையில் நடைபெற்ற ஈஸ்டர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிப்ரவரியில் சார்லஸ் புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்காலிகமாக ஓய்வில் இருந்து வந்த சார்லஸ், புற்றுநோய் பாதிப்புக்கு பின்னர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
செந்தில் பாலாஜி ஜாமின் மனு நாளை (ஏப்ரல் 1) விசாரணைக்கு வர உள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் கோரியும், 3 மாதத்தில் அமர்வு நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் முடிவில் அவருக்கு ஜாமின் கிடைக்குமா? என்பது தெரியவரும்.
ஏழை பெண் வியாபாரிகளுக்கு உதவும் நோக்கில் மத்திய அரசு பணியாளர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கிராமத்தில் இருக்கும் பெண் வியாபாரிகள் பொதுத்துறை வங்கிகளில் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெறலாம். இத்திட்டத்தில் கடன் பெறும் பெண்களுக்கு சிறப்புத் தொழில் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சம் வரை உள்ள 18 – 55 வயதுடைய பெண்கள் இந்த பணத்தை பெற தகுதியானவர்கள்.
சமூக நீதியை உயிருள்ள வரை கடைபிடிப்போம் என அன்புமணி தெரிவித்துள்ளார். பாஜக வேட்பாளர் தமிழிசையை ஆதரித்து பேசிய அவர், “பாமகவை இபிஎஸ் விமர்சித்து பேசுகிறார். அவருடன் கூட்டணியில் இருக்கும் போது பாமகவினர் அவருக்கு தியாகிகளாக தெரிந்தார்கள். கூட்டணியை விட்டு பிரிந்தால் துரோகியாக அவர்களுக்கு தெரிகிறோம். இது எப்படி என்று இபிஎஸ் தான் விளக்க வேண்டும். பாமக சந்தர்ப்பவாத அரசியல் செய்யாது” என்றார்.
Sorry, no posts matched your criteria.