India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கச்சத்தீவு ஒப்படைப்பு தொடர்பாக ஆர்டிஐ மூலம் அண்ணாமலை பெற்ற தகவலில், திமுக எம்பி இரா. செழியன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. அதில், நாடாளுமன்றத்தில் ஒப்பந்தம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஸ்வரண் சிங் அறிக்கை அளித்தபோது, தேச நலனுக்கு எதிரானது என 1974ஆம் ஆண்டு ஜூலை 23இல் இரா செழியன் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் கருணாநிதி ஒப்புதல் அளித்தது அவருக்கு தெரியாது என கூறப்பட்டுள்ளது.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தபடி, புதிய வரி விதிகள் இன்று முதல் அமலுக்கு வருவதாக தகவல் வெளியான நிலையில், மத்திய நிதியமைச்சகம் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. ஏப்.1 முதல் எவ்வித புதிய வரி நடைமுறையும் அமலுக்கு வரவில்லை என விளக்கமளித்த நிதியமைச்சகம், வரி செலுத்துவோர் தங்களுக்கு எது நன்மை பயக்கும் என்று நினைக்கிறார்களோ அந்த வரி முறையை (Old or New) தேர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
CSKக்கு எதிரான நேற்றைய போட்டியில் DC கேப்டன் ரிஷப் பண்டின் ஆட்டத்தை அந்த அணியின் இயக்குநர் கங்குலி பாராட்டியுள்ளார். ரிஷப் அபாரமாக விளையாடியதாக புகழ்ந்த அவர், நீங்கள் பல அற்புதமான இன்னிங்ஸ்களை விளையாடினாலும், இந்த இன்னிங்ஸை உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று கூறினார். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடி வரும் அவர், நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக மோடி விமர்சித்துள்ளார். அவரின் எக்ஸ் பக்க பதிவில், “தமிழகத்தின் நலனைக் காக்க திமுக எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு தொடர்பான புதிய விவரங்கள் திமுகவின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக தோலுரித்துவிட்டன. காங்கிரசும் திமுகவும் ஒரு குடும்பத்தின் அங்கங்கள். அவர்களின் அலட்சியப் போக்கு, மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவது, கைது செய்வது தொடர்கிறது. இதற்கு முக்கிய காரணம், கச்சத்தீவை திமுக கூட்டணியில் இருந்தபோது இந்திரா தலைமையிலான காங்., இலங்கைக்கு தாரை வார்த்ததுதான். இந்த விவகாரத்தை பாஜக தற்போது கையில் கையெடுத்து, திமுக – காங்., கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்ய தொடங்கியுள்ளது. இது தேர்தலில் எதிரொலிக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
டெல்லி கேபிடல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விசாகபட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெல்லி அணி பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டது, ஐபிஎல் சட்ட விதிகளுக்கு எதிரானது எனக் கூறி, கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை என்பதால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமலாகவில்லை.
3) கச்சத்தீவு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை 2 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க முடியுமா என கருணாநிதி கேட்டார். ஆனால் வெளியுறவு செயலர், உள்நாடு, வெளிநாட்டு ரீதியில் சில தடைகள் ஏற்படக்கூடும் என தெரிவித்ததால், கருணாநிதி தனது கருத்தை நிர்பந்திக்கவில்லை. 4) ஒப்பந்தத்தை அறிந்ததும், தமிழகத்தில் எதிர்ப்பு எழும் என கருணாநிதி கூறினார். அந்த எதிர்ப்பை கட்டுக்குள் வைப்பதாக கருணாநிதி உறுதியளித்தார்.
1) இந்திரா காந்தி அரசில் இருந்த மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பலருக்கு தெரியும் முன்பே, கச்சத்தீவு ஒப்படைப்பு ஒப்பந்தம் குறித்து கருணாநிதிக்கு தெரியும். 2) எதிர்க்கட்சிகளுக்கு தெரியுமா என வெளியுறவு செயலரிடம் கருணாநிதி கேட்டார். அதற்கு தமிழகத்தின் கருத்தை அறிந்த பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசலாம் என இந்திரா காந்தி நினைப்பதாக வெளியுறவு செயலர் பதிலளித்தார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற 5ஆம் தேதி வெளியிடப்படுமென அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. அறிக்கையை தயாரிக்க பாஜக 27 பேர் கொண்ட கமிட்டியை 2 நாள்களுக்கு முன்பே அமைத்தது. இந்நிலையில், டெல்லியில் பேட்டியளித்த ஜெய்ராம் ரமேஷ், 5ஆம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றார்.
Sorry, no posts matched your criteria.