India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தோனியின் அதிரடி மும்பை அணிக்கு உளவியல் அழுத்தத்தை கொடுத்திருக்கலாம் என சிஎஸ்கே பவுலிங் பயிற்சியாளர் எரிக் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். எதிரணிக்கு அழுத்ததை கொடுப்பது வெற்றி பெறுவதற்கு உதவி செய்யும். அந்த வகையில் தோனியின் பேட்டிங் மும்பையை பாதித்திருக்க அதிக வாய்ப்புண்டு. எங்களை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்த MI அணி முயன்றது. ஆனால், தோனியால் அவர்களின் எண்ணம் நிராசையானது என்று அவர் தெரிவித்தார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் நீலகிரி தொகுதி பரப்புரை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. நீலகிரியில் எல்.முருகனை ஆதரித்து நாளை நட்டாவின் சாலைப் பேரணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அவரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் அதிகமாக இருப்பதால் பயணம் ரத்தானதாக தகவல்கள் கூறுகின்றன.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.19ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும்; விடுமுறை அளிக்கவில்லை என்றால் தொழிலாளர் நலத்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி சாகு எச்சரித்துள்ளார். 19ஆம் தேதி விடுமுறை இல்லை என நிறுவனங்கள் கூறினால், 1950 என்ற எண்ணுக்கு ஊழியர்கள் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
பாமக இல்லை என்றால் அதிமுக ஆட்சி இருந்திருக்காது என அன்புமணி விமர்சித்துள்ளார். வன்னியர் இட ஒதுக்கீடு தருவதற்கு சம்மதம் தெரிவித்ததால் மட்டுமே அதிமுக உடன் 2019இல் கூட்டணி சேர்ந்ததாக கூறிய அவர், கொடுத்த வாக்குறுதியை முறையாக இபிஎஸ் நிறைவேற்றவில்லை என்றார். மேலும் பேசிய அவர், வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை கூட அதிமுக அரசு முறையாக இயற்றாமல் நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா – தருண் கார்த்திகேயன் ஆகியோரது திருமண விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஐஸ்வர்யாவுக்கு 2022ல் கிரிக்கெட் வீரர் ரோஹித் என்பவருடன் திருமணமான நிலையில், 6 மாதத்தில் அது விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில், இன்று மகளுக்கு இரண்டாவது திருமணத்தை அவர் நடத்தி வைத்துள்ளார்.
ரோஹித் ஷர்மா இறுதி வரை களத்தில் இருந்து மும்பை அணி முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை 19 முறை இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த ரோஹித், 18 முறை மும்பை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். முதல் முறையாக நேற்று சிஎஸ்கேவுக்கு எதிராக சதமடித்தும் அவரால் அணியை வெற்றிபெற வைக்க முடியவில்லை. முன்னதாக நேற்றைய போட்டியில் சதமடித்தும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை.
கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மகிழ்ச்சியடைந்த மக்களுக்கு ஒரு துயரமான செய்தியை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. ஆம்!, தமிழ்நாட்டில் வரும் வியாழக்கிழமை முதல் இனி வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் இந்த வாரம் 40 டிகிரி செல்சியஸ் வரையும், உள் தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ்-க்கு அதிகமாகவும் பதிவாகலாம்.
நாம் தமிழர் கட்சியை சீமான் தொடங்கி 14 ஆண்டுகள் ஆகி விட்டன. சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் தோல்விகளை சந்தித்தும் தில்லாக போட்டியிடுகிறது. கமலின் மநீம தொடங்கப்பட்டு 6 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. இந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடவில்லை. இதை கண்ட அரசியல் ஆர்வலர்கள், சீமான் தில்லாக போட்டியிடுகிறார், ஆனால் தில் இல்லாமல் கமல் பின்வாங்கி விட்டாரே என பேசுகின்றனர்.
பொய் சொல்வதில் போட்டி வைத்தால் பிரதமர் மோடி முதலிடம் பிடிப்பார் என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளரை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியா சர்வ நாசமாக போய்விடும். பாஜக ஆட்சி மக்களுக்கானது அல்ல, அதானி அம்பானிகளுக்கானது என்ற அவர், பொய் சொல்வதில் இந்திய அளவில் மோடியும், தமிழக அளவில் அண்ணாமலையும் முதலிடம் பெறுவார்கள் என்றார்.
கேரளாவின் திருச்சூரில் பிரதமர் மோடியும், வயநாட்டில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் ஒரே நேரத்தில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். திருச்சூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி ஆதரவு திரட்டுகிறார். வயநாடு தொகுதியில் ராகுல் ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்கிறார். தமிழகத்தில் இன்று காலை ராகுல் பரப்புரையை முடித்து சென்ற நிலையில், மோடி கேரளாவில் பிரசாரத்தை முடித்துவிட்டு மாலையில் தமிழகம் வருகிறார்.
Sorry, no posts matched your criteria.