India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹680 உயர்ந்து ₹51,640க்கும், கிராமுக்கு ₹85 உயர்ந்து ₹6,455க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ₹81.60க்கும், கிலோ வெள்ளி ₹600 உயர்ந்து ₹81,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ₹2,160 அதிகரித்துள்ளது.
அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். அரசின் ரகசியங்களை வெளிப்படையாக கூறியதன் மூலம் பெரும் தவறு செய்துள்ளதாகவும், தேர்தலுக்காக பதவிப் பிரமாணத்தை மீறும் வகையில் கொள்கை முடிவுகளை வெளியிடுவதாகவும் விமர்சித்துள்ளார். முன்னதாக, காங். உடன் இணைந்து கச்சத்தீவு குறித்த உண்மைகளை திமுக மறைத்ததாக ஜெய்சங்கர் கூறினார்.
வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி (10;45 AM)) பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயர்ந்து 74,114 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி168 புள்ளிகள் உயர்ந்து 22,495 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தபின் வாக்கு சேகரித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக தெரிவித்தார். கோவை தொகுதியில் பாஜக அபார வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதை யாராலும் தடுக்க முடியாது என்று சூளுரைத்த அவர், ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகள், நெசவாளர்கள் பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் உறுதியளித்தார்.
மக்கள் தன்னை நினைவில் வைத்திருக்க இசையமைப்பாளர் இளையராஜாவும் ஒரு காரணம் என்று நடிகர் ராமராஜன் பாராட்டியுள்ளார். ராமராஜன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சாமானியன் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராமராஜன், “எனது படத்தைப் போல வேறு யார் படத்துக்கும் இளையராஜா இசையமைத்தது இல்லை. அவரது பாடல்களே என்னை வாழ வைக்கிறது” என்றார்.
கருத்து கணிப்புகளை மீறி நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலில் INDIA கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. நாடு முழுவதும் மதச்சார்பற்ற கட்சிகள் பிரிந்து இருப்பதால் தான் பாஜக வெற்றி பெறுகிறது. அதனால் தான், பிரிந்து கிடந்த கட்சிகளை ஒருமைப் படுத்தினேன் என்று தெரிவித்தார்.
தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால், அவருக்கு என்ன பிரச்னை என்ற முழு விவரம் வெளியாகவில்லை. விரைவில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘SK23’ படத்தில் வில்லனாக வித்யுத் ஜம்வால் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் பெரும் வெற்றி பெற்ற விஜய்யின் துப்பாக்கி படத்தில் வித்யுத் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் விஜய், ரஜினியை பின்பற்றும் எஸ்.கே, தற்போது நடிகர்கள் தேர்விலும் அதே பாணியை கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியை வரவேற்பதிலும், எதிர்ப்பதிலும் திமுக இரட்டை வேடம் போடுவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். சிதம்பரத்தில் நேற்று பரப்புரையில் ஈடுபட்ட அவர், திமுக ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து விமர்சித்தார். அப்போது தொண்டர் ஒருவர், ‘இபிஎஸ் இருந்தால் யூபிஎஸ் தேவையில்லை’ என கோஷமிட்டார். இதைக்கேட்ட அவர், அதிமுகவில் தான் சாதாரண தொண்டர் கூட இப்படி சிந்தனையுடன் விழிப்போடு இருப்பர் என புகழ்ந்து பேசினார்.
இன்று முதல் அமலாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் ₹5 – ₹20 வரை கட்டணம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்புக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகவில்லை. தேர்தல் முடிந்த பிறகு கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.