news

News April 1, 2024

BREAKING: திகார் சிறையில் கெஜ்ரிவால்

image

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ED காவலில் இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட போதிலும் முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே முதல்வர் பணியை அவர் தொடருவாரா என்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.

News April 1, 2024

காங்கிரஸ் வழக்கில் I.T. உறுதி

image

காங்கிரசிடம் ரூ.1,700 கோடி வரி நிலுவையை பெற கடும் நடவடிக்கை எதுவும் தேர்தல் காலத்தில் எடுக்க மாட்டோம் என I.T. தெரிவித்துள்ளது. I.T. அனுப்பிய நோட்டீசை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது I.T. தரப்பில், “தேர்தலின்போது யாருக்கும் பிரச்னை ஏற்படுத்த விரும்பவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை ஜூலைக்கு ஒத்திவைத்தார்.

News April 1, 2024

கச்சத்தீவை மோடி ஏன் மீட்கவில்லை என திமுக கேள்வி

image

கச்சத்தீவை பிரதமர் மோடி ஏன் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மீட்கவில்லை என திமுக கேள்வி எழுப்பியுள்ளது. அக்கட்சி செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாத்துரை கூறுகையில், “அதை 1974இல் செய்தது காங்கிரஸ்தான். ஆனால் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்காமல் பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார். 2014லேயே காங்கிரஸை ஆட்சியிலிருந்து மக்கள் அகற்றிவிட்டனர். பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக என்ன செய்தது” என்றார்.

News April 1, 2024

ஹர்திக்கின் கேப்டன்சிக்கான பலப்பரீட்சை

image

IPL இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்த மும்பை அணி, புள்ளிப் பட்டியலில் கணக்கைத் தொடங்காத ஒரே அணியாக உள்ளது. இதனால், ஹர்திக் பாண்டியா இன்று அணியை எப்படி வழிநடத்தப் போகிறார் என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், சொந்த மைதானமான வான்கடேயில் எழும் கடும் எதிர்ப்புகளையும் அவர் சமாளிக்க வேண்டும்.

News April 1, 2024

நடிகை சரண்யா மீது கொலை மிரட்டல் புகார்

image

பக்கத்து வீட்டுப் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை சரண்யா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சரண்யாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி. இவர் வீட்டின் கேட் சரண்யாவின் காரில் இடிப்பதுபோல் நின்றதாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றவே, சரண்யாவின் குடும்பத்தினர் ஸ்ரீதேவியின் வீடு புகுந்து மிரட்டல் விடுத்ததாக சிசிடிவி ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2024

எதிர்க்கட்சி கூட்டணிக்கு நானே I.N.D.I.A. என பெயரிட்டேன்

image

எதிர்க்கட்சி கூட்டணிக்கு தாம்தான் I.N.D.I.A. என பெயரிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ” I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியது நான்தான். அக்கூட்டணிக்கு பெயரிட்டதும் நான்தான். தேர்தலுக்கு பிறகு, I.N.D.I.A. கூட்டணியை பொறுப்பாக கவனிப்பேன். 400 இடங்களில் வெல்வோம் என பாஜக கூறுகிறது. மேற்கு வங்கத்தில் அக்கட்சி படுதோல்வி அடைய போகிறது” என்றார்.

News April 1, 2024

பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடக்கம்

image

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியை அரசு அலுவலர்கள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை அடையாளம் கண்டு அவர்கள் பூத் சிலிப் விநியோகிக்க உள்ளனர். தொடர்ந்து, இப்பணிகள் ஏப்.13ஆம் தேதி நிறைவடையும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

News April 1, 2024

திசை திருப்பாமல் விடையளியுங்கள் பிரதமரே

image

கச்சத்தீவு விவகாரம் கடந்த 2 நாள்களாக தமிழகத்தில் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றி வருவதாக முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். வரி பகிர்வு, பேரிடர் நிதி, தமிழ்நாட்டுக்கான புதிய திட்டம் ஆகிய மூன்று கேள்விகளை எழுப்பிய அவர், திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே என கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 1, 2024

பழைய ஃபார்முக்கு திரும்பிய ரிஷப் பண்ட்

image

சிஎஸ்கேவுடனான போட்டியில் அதிரடியாக விளையாடி பழைய ஃபார்முக்கு ரிஷப் பண்ட் திரும்பியிருப்பதை கண்டு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து குணமடைந்த பிறகு, ஐபிஎல் போட்டியிலேயே முதலில் களமிறங்கியுள்ளார். பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுடனான போட்டிகளில் சொதப்பிய போதிலும், சிஎஸ்கேவுக்கு எதிராக 51 ரன்களை குவித்தார். இதில் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும்.

News April 1, 2024

பரிமாற்றம் வேறு அபகரிப்பது வேறு

image

கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. இந்நிலையில், 1974ல் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்போது ஏன் கிளப்புகிறார்? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 2000 சதுர கி.மீ இந்திய பூமியை சீனா அபகரித்துள்ளதாகவும், அதற்கு பிரதமர் மோடி செய்தது என்ன? எனவும் சாடிய அவர், நல்லுணர்வுடன் பரிமாற்றம் செய்வது வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு என்றும் கூறினார்.

error: Content is protected !!