news

News April 1, 2024

ரூ.16,500 கோடி சொத்துகள் வைத்திருக்கும் நடிகர்

image

உலகின் பணக்கார நடிகராக புராக் பியர்ஸ் திகழ்கிறார். மைட்டி டக்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், 17 வயதில் நடிப்பதை நிறுத்தி கொண்டார். பிறகு டிஜிட்டல் பொழுதுபோக்கு துறை, இணையதள விளையாட்டு நிறுவனம், பிட் காயின் நிறுவனம் உள்ளிட்டவற்றை தொடங்கி, ரூ.16,500 கோடி சொத்துகள் குவித்துள்ளார். விரைவில் ரூ. 8.000 கோடியை நன்கொடை அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.

News April 1, 2024

உதயநிதி பேசும்போது கவனம் தேவை: நீதிமன்றம் எச்சரிக்கை

image

சனாதன சர்ச்சை தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் விசாரிக்க கோரி உதயநிதி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி பொதுவெளியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்த உச்சநீதிமன்றம், அடிப்படை உரிமைகளை பாதிக்கும் பிரிவில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது ஏற்புடையதல்ல; மூன்று வாரத்தில் மனுவில் மாற்றங்கள் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

News April 1, 2024

ஊழல் புகார் மூலம் இந்திரா கருணாநிதியை மிரட்டினாரா?

image

கச்சத்தீவு தாரைவார்ப்பு மன்னிக்க முடியாத துரோகம்: அதை நியாயப்படுத்தும் காங்கிரசுடன் திமுக உறவு வைத்திருப்பதன் மர்மம் என்ன? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போதைய திமுக அரசு மீது ஊழல் புகார்கள் இருந்தது. இதனால், அரசை கலைத்து விட்டு ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவோம் என மத்திய அரசின் மிரட்டலுக்கு பயந்து கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் மெளனமாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

News April 1, 2024

உலகின் மிகப்பெரிய மத சுற்றுலா தலமாகும் அயோத்தி

image

உலகின் மிகப்பெரிய மத சுற்றுலா தலமாக அயோத்தி விரைவில் மாறும் என மோடி தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 90ஆம் ஆண்டு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியாவில் சுற்றுலாத் துறை மிக வேகமாக வளர்கிறது. ஒட்டுமொத்த உலகமும் இந்தியா வரவும், இந்தியாவை பார்க்கவும், இந்தியாவை புரிந்து கொள்ளவும் விரும்புகிறது. வரும் ஆண்டுகளில் அயோத்தி, உலகின் மிகப்பெரிய மதசுற்றுலா தலமாகும்” என்றார்.

News April 1, 2024

MI ரசிகர்கள் தாக்கியதில் CSK ரசிகர் மரணம்

image

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சிஎஸ்கே ரசிகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் vs மும்பை போட்டியை காண மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் சிலர் ஒன்று கூடினர். அப்போது, பந்தோபந்த் (66) சிஎஸ்கே ரசிகர், ரோஹித் சர்மா அவுட் ஆனதை கொண்டாடினார். இதனால் கோபமடைந்த MI ரசிகர்கள் அவரை கடுமையாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த பந்தோபந்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News April 1, 2024

குடியரசுத் தலைவரை அவமதித்த மோடி: கனிமொழி

image

குடியரசுத் தலைவர் முர்முவை நிற்க வைத்துவிட்டு பிரதமர் நாற்காலியில் அமர்ந்து அவமதிப்பு செய்துவிட்டதாக கனிமொழி விமர்சித்துள்ளார். நேற்று பாரத ரத்னா விருது வழங்கப்பட்டபோது பிரதமர், அத்வானி நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில் முர்மு நின்றுகொண்டே இருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட கனிமொழி, பாஜக ஆட்சியில் சாதி, பாலினப் பாகுபாடு தொடர்கிறது என விமர்சித்துள்ளார்.

News April 1, 2024

டிடிவி தினகரனுக்கு சீமான் சரமாரி கேள்வி

image

உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தேனியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், டிடிவி தினகரன், சசிகலா பிரச்னையில் இருந்த போது தமிழகத்தில் இருந்து தான் மட்டுமே குரல் கொடுத்ததாக கூறினார். மேலும், சசிகலா பதவியேற்பதை தடுக்க 22 நாட்கள் தாமதப்படுத்தியது யார்? என்றும், சசிகலாவை நான்கு ஆண்டுகள் சிறையில் வைத்தது யார்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

News April 1, 2024

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்?

image

கெஜ்ரிவாலை ஏப்.15ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க டெல்லி ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அவர் திகார் சிறைக்கு மாற்றப்பட உள்ளார். இதனால், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் பதவியை ராஜினாமா செய்தால், யார் முதல்வராக பதவியேற்பது; சிறையில் இருந்தபடியே, முதல்வர் பணிகளை தொடர சட்டத்தில் இடம் உள்ளதா என ஆம் ஆத்மி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

News April 1, 2024

செந்தில் பாலாஜி வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

image

ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மாவட்ட முதன்மை நீதிமன்றம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கினால் அதுபற்றி யோசிக்கலாம் என்றும் தற்போது ஜாமின் பற்றி மட்டுமே விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

News April 1, 2024

ED சோதனைகளுக்கு முன்னாள் தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு

image

எதிர்க்கட்சித் தலைவர்களின் இடங்களில் ED. மற்றும் IT சோதனை நடத்துவதற்கு, எஸ்.ஒய். குரேஷி உள்ளிட்ட 3 முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எஸ்.ஒய். குரேஷி கூறுகையில், “தனது சோதனைகளை ED நிறுத்தி வைக்க வேண்டும். ஏனெனில், இது தேர்தலில் சமநிலையை பாதிக்கும்” என்றார். இதேபோல் பெயர் வெளியிட விரும்பாத மேலும் 2 முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!