news

News April 1, 2024

BREAKING: தமிழகத்தில் மழை கொட்டும்

image

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2024

கெஜ்ரிவால் கைதுக்கு மூலக்காரணம் காங்கிரஸ்

image

கெஜ்ரிவால் கைதுக்கு காங்கிரசே மூலக்காரணம் என்று கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரசே முதலில் போலீசில் புகார் அளித்தது. அதை வைத்தே E.D. விசாரணையை கையில் எடுத்தது. சிசோடியா கைதானபோது கெஜ்ரிவாலை கைது செய்யவில்லையா என காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இப்போது தனது நிலையை காங்கிரஸ் மாற்றியுள்ளது” என்றார்.

News April 1, 2024

ரூ.21,000 கோடியை தாண்டியது இந்திய ஆயுத தளவாட ஏற்றுமதி

image

இந்தியா முதல்முறையாக ரூ.2 1,000 கோடிக்கு அதிகமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை நட்பு நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.21,083 கோடிக்கு தளவாடங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 32.5% அதிகம். சுதந்திர இந்தியாவில் அதிக மதிப்புக்கு ஆயுத ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

News April 1, 2024

ஜெய்சங்கர் கூறுவது பொய்

image

கச்சத்தீவு விவகாரத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் திமுக மீது கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தேர்தல் பயம் காரணமாக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக எழுப்பியுள்ளதாக கூறிய அவர், கேட்கும் நிதியை கொடுக்காத பிரதமர் மோடி, மக்களை திசை திருப்புவதாகவும் சாடினார். மேலும், இலங்கை திவாலான போது கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டிருக்கலாமே? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News April 1, 2024

இன்று NEFT பரிவர்த்தனைகள் செயல்படாது

image

HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், NEFT பரிவர்த்தனையை இன்று பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், ஆண்டு கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று மேற்கொள்ளப்படும் NEFT பரிவர்த்தனைகள் தாமதமாகலாம் (அ) கிடைக்காமல் போகலாம் என்று கூறியுள்ளது. இதனால், HDFC வங்கி கணக்கு மூலம் சம்பளம் பெறுவோருக்கு இன்று பணம் கிடைக்காது என தெரிகிறது.

News April 1, 2024

சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை

image

மக்களவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். பறக்கும் படையால் இதுவரை ரூ.109 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடனும், 4ஆம் தேதி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடனும் ஆலோசனை மேற்கொள்கிறார்.

News April 1, 2024

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஜீரோ

image

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என மாநிலங்களவை எம்பியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார். அவர் பேசுகையில், “கச்சத்தீவு விவகாரம், I.N.D.I.A. கூட்டணிக்கு சாதமாகவே இருக்கும். கேரளா, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு ஜீரோவே கிடைக்கும். தெலங்கானா, கர்நாடகாவில் பாஜகவை விட காங்கிரஸுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்” என்றார்.

News April 1, 2024

மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி

image

கச்சத்தீவு குறித்த மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் பிரமோத் திவாரி கூறுகையில், “பிரதமர் தனது ஆட்சியில் நடந்தது குறித்து பேச வேண்டும். சீனாவுடனான சண்டையில் 21 வீரர்கள் கொல்லப்பட்டது உண்மைதானே? சீனாவை எதிர்க்க துணிச்சல் இல்லையா? அருணாச்சலை தனது வரைபடத்தில் சேர்த்து, இடங்களுக்கு சீனா பெயரிட்டிருப்பது குறித்து பதிலளிக்க வேண்டும்” எனக் கூறினார்.

News April 1, 2024

நாடு முழுவதும் SBI வங்கி சேவைகள் முடக்கம்

image

ஏப்.1ம் தேதியான இன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்பட்டாலும் இறுதி ஆண்டு கணக்குகள் முடிக்கும் பணிகள் நடந்து வருவதால், மக்களுக்கு சேவை கிடையாது. அந்தவகையில், SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், ஆண்டு கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று பிற்பகல் 3.30 வரை SBI மொபைல், ஆன்லைன் பேங்கிங், யூபிஐ சேவைகள் என அனைத்து வகை சேவைகளும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

News April 1, 2024

ரஷ்ய ராணுவத்தில் 1.50 லட்சம் பேரை புதிதாக சேர்க்க உத்தரவு

image

ரஷ்ய ராணுவத்தில் புதிதாக 1.50 லட்சம் பேரை சேர்க்க புதின் உத்தரவிட்டுள்ளார். உக்ரைனுடனான போரில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்படுவதை கவனத்தில் கொண்டு கட்டாய பயிற்சியில் இருக்கும் 1.50 லட்சம் பேரை, ராணுவத்தில் சேர்க்கும்படி புதின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய ராணுவத்தில் ஏற்கெனவே 13 லட்சம் பேர் உள்ள நிலையில் புதிதாக வீரர்களை சேர்க்க புதின் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!