India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிருத்விராஜ் நடிப்பில் மார்ச் 28ஆம் தேதி வெளியான “ஆடு ஜீவிதம்’ படம் வெளியான 4 நாட்களில் 50 கோடியை கடந்துள்ளது. தேசிய விருது வென்ற பிளெஸ்ஸி இயக்கிய இப்படத்தில் அமலா பால் நாயகியாக நடித்துள்ளார். உலகம் முழுவதும் 1,724 தியேட்டரில் வெளியான இப்படம் முதல் நாளில் 16.5 கோடி வசூலித்திருந்தது. இப்படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து விரைவில் 100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2021-ல் 1.7 பில்லியன் டாலராக இருந்த தமிழகத்தின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி தற்போது 7.4 பில்லியன் டாலராக அதிகரித்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்! #தலைநிமிரும்_தமிழ்நாடு! எனக் குறிப்பிட்டுள்ளார்.
2024-25ஆம் நிதியாண்டின் முதல் வர்த்தக நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 363 புள்ளிகள் உயர்வுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 135 புள்ளிகளும் உயர்வுடனும் முடிவடைந்தன. மேலும், ஏப்ரல் மாதத்தில் இந்திய பங்குச்சந்தைகள் 10 நாட்கள் இயங்காதென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்.11 -ரமலான் பண்டிகை, ஏப்.17 – ராமநவமி மற்றும் 4 வாரங்களில் சனி, ஞாயிறு என மொத்தம் 10 நாட்கள் பங்குச்சந்தைகள் இயங்காது.
கச்சத்தீவை தாரை வார்த்ததில் கருணாநிதிக்கும், திமுகவுக்கும் முக்கியப் பங்கு உள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் கூட்டு சதியால் கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் கருணாநிதி ரகசியம் காத்ததாகவும் கூறினார். மேலும், கச்சத்தீவு பகுதியை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கவும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடு முழுவதும் பிரதமர் மோடி அலை வீசுவதால், பாஜக 400 இடங்களில் வெல்லும் என நடிகை ஸ்ருதி தெரிவித்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ருதி, 1996-ல் தமிழில் வெளியான கல்கி படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வாங்கினார். இந்த நிலையில், அரசியலில் முன்னேற வேண்டும் என பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை பிரதமர் வழங்கியதாகவும், அதனால் தனது முழுமையான ஆதரவு மோடிக்கு தான் எனவும் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அந்தர் பல்டி அடிப்பதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். அவர் பேசுகையில், ‘2015இல் தகவல் அறியும் விண்ணப்பத்தில் தான் அளித்த பதிலை ஜெய்சங்கர் படித்து பார்க்க வேண்டும். கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்று இந்தியா அங்கீகரித்ததை 2015இல் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சரி எனக் கூறியிருந்தார். இப்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன்?’ கேள்வி வினவியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா பெயர் வைத்ததால் சர்ச்சை கிளம்பியுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 5 முறை அருணாச்சலப் பிரதேசத்தை ‘சீன பகுதி’ என சீனா குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் குடியிருப்புகள், மலைகள், ஆறுகள் என 30 இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை ‘Zangnan’ என குறிப்பிட்டு சீனா உரிமைக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
உ.பி.,யின் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் இந்து அமைப்புகள் பூஜை செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மசூதிக்குள் கள ஆய்வு நடத்திய தொல்லியல் துறை, 55 இந்து தெய்வ சிற்பங்கள் இருப்பதாக வாரணாசி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதனையடுத்து மசூதியின் தெற்கு பகுதியில் வழிபாடு நடத்த இந்துக்களுக்கு கோர்ட் அனுமதித்தது.
மீனவர்கள் மீது தாக்குதலே நடக்காது என்று வாக்குறுதி கொடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தது. ஆனால், மீனவர்கள் மீதான தாக்குதலை ஏன் தடுத்து நிறுத்தவில்லை என அமைச்சர் உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் வந்ததும் இத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர், வெள்ளம் வந்தபோது ஏன் வரவில்லை. இரு பேரிடர்களால் மக்கள் பாதிக்கப்பட்டபோது ஆறுதல் சொல்லக்கூட பிரதமர் ஏன் வரவில்லை என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு நேற்றைய ஐபிஎல் போட்டியில் களம் இறங்கிய தோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என 16 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதைக் கண்டு உற்சாகமடைந்த ரசிகர்கள், ‘அவர் ஒரு ஓவர் முன்னதாகவே பேட் செய்ய வந்திருந்தால் சிஎஸ்கே ஜெயித்திருக்கும்’ என ஆதங்கப்பட்டனர். 8வது இடத்தில் அவர் களமிறங்கியதாலே சிஎஸ்கே தோல்வியடைந்ததாகவும் கூறுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.