news

News April 1, 2024

தற்கொலைக்கு சமம் என கூறிவிட்டு கூட்டணியா?

image

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இணைந்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பேட்டி அளித்த அவர், “நோட்டாவுக்கு கீழ் வாக்கு வாங்கிய பாஜக உடன் கூட்டணி சேர்வது தற்கொலைக்கு சமம் என கூறினார் டிடிவி தினகரன். தற்போது எங்கே இருக்கிறார்? ஓபிஎஸ், டிடிவி இருவருமே தங்களை தற்காத்துக் கொள்ள பாஜகவிடம் சேர்ந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

News April 1, 2024

திருமணம் செய்யாமலே உயிரிழந்த டேனியல் பாலாஜி

image

நடிகர் டேனியல் பாலாஜி சில தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் காலமானார். சினிமாவில் வில்லனாக தோன்றிய இவர், நிஜ வாழ்க்கையில் பலருக்கும் உதவிகளை செய்துள்ளார். 48 வயதான இவர் கடைசி வரை திருமணமே செய்துகொள்ளவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என முடிவெடுத்த காரணத்தினாலேயே அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என அவரது நெருங்கிய வட்டாரங்களில் இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

News April 1, 2024

இதுவரை ரூ.109 கோடி பறிமுதல்

image

தமிழகத்தில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.109.76 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இருந்து 1822 புகார்கள் வந்ததாகவும், அதில் 1803 புகார்கள் முடித்துவைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News April 1, 2024

என்னுடைய பி டீம் தான் பாஜக!

image

என்னுடைய பி டீம் தான் பாஜக என்பதை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டுமென சீமான் தெரிவித்துள்ளார். மதுரையில் நாதக வேட்பாளர் சத்யபிரியாவை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல். நான் தான் உள்ளே அனுப்பி உள்ளேன். இங்கே லட்சக்கணக்கான தம்பிகள் வேலை செய்கிறார்கள். உள்ளிருந்து ஒரே ஒரு தம்பி எனக்காக வேலை செய்கிறான். இருவரும் தமிழ்த்தாய் ரத்தம். எனவே ஒரே பாதையில் பயணிக்கிறோம்’ என்றார்.

News April 1, 2024

ஜல்லிக்கட்டுக்கு ஆலோசித்து அனுமதி வழங்க ஆணை

image

தேர்தல் நடத்தை விதிகளை காட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிப்பதை ஏற்க முடியாது என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கை கோட்டூரில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கோயில் திருவிழாக்களின் ஒரு பகுதியாகவே ஜல்லிக்கட்டு நடப்பதாக கூறியது. மேலும், சிவகங்கை ஆட்சியர் நாளைக்குள் முடிவெடுக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

News April 1, 2024

இது மனிதகுலத்தை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்புள்ளது

image

2030க்குள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்களை விட புத்திசாலித்தனமாக மாறுமென்பதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமென டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். “Great AI Debate” கருத்தரங்கில் பங்கேற்று பேசிய அவர், ‘ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதகுலத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், எதிர்மறையான சூழலை விட நேர்மறை சூழல் அதிகமாக இருக்குமென நம்புகிறேன்’ என்றார்.

News April 1, 2024

திகார் சிறையில் கெஜ்ரிவால் கேட்கும் 5 வசதிகள்!

image

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை சிறப்பு கோர்ட் ஏப்.15 வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சிறையில் கெஜ்ரிவால் தரப்பில் 5 வசதிகள் கேட்கப்பட்டுள்ளது. அவை 1.மருந்துகள், 2.பகவத் கீதை, ராமாயணம் மற்றும் How Prime Ministers Decide புத்தகங்கள். 3.மத அணிகலன்கள், 4.சிறப்பு உணவு, 5.டேபிள் மற்றும் சேர் ஆகியவை ஆகும்.

News April 1, 2024

கட்சி வாரியாக வேட்பாளர்கள் பட்டியல்

image

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்சி வாரியாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக ஏப்.19-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், சுயேச்சை மற்றும் கட்சி வாரியாக வேட்பாளர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ADMK 34, DMK 22, BJP 23, NTK 39, சுயேச்சை வேட்பாளர்கள் 609 பேர் உள்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர்.

News April 1, 2024

திகார் சிறையில் அடைக்கப்பட்டார் கெஜ்ரிவால்

image

ரோஸ் அவென்யூ நீதிமன்ற உத்தரவை அடுத்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2ஆம் எண் அறை ஒதுக்கப்பட்டது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத்துறை இன்று நீதிமன்றத்தில் வாதாடியது. இதனையடுத்து, ஏப்.15 வரை கெஜ்ரிவாலை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

News April 1, 2024

கனிமொழி வாகனத்தில் சோதனை

image

தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், தூத்துக்குடி முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது 3ஆவது மைல் பகுதியில் சென்ற அவரது வாகனத்தை வழிமறித்த அதிகாரிகள், அதில் ஏதாவது இருக்கிறதா என சோதனை மேற்கொண்டனர். சோதனைக்குப் பிறகு அவர் புறப்பட்டுச் சென்றார்.

error: Content is protected !!