India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் இன்று மும்பை-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. வான்கடே மைதானத்தில் டாஸ் வென்ற RR அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் MI அணி முதலில் களமிறங்கியது. சிறப்பாக பந்து வீசிய RR வீரர் ட்ரென்ட் போல்ட், MI அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித், நமன் திர், பிரேவிஸ் ஆகியோரை டக்கவுட்டாக்கினார். பர்கர் ஒரு விக்கெட் வீழ்த்தினார். MI அணி தற்போது வரை 3.3 ஓவர்களில் 20/4 ரன்கள் எடுத்துள்ளது.
லிங்குசாமி, கார்த்தி கூட்டணியில் 2010ஆம் ஆண்டு வெளியான ‘பையா’ திரைப்படம் வரும் 11ஆம் தேதி ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது. சமீபத்தில் ரீரிலீஸ் செய்யப்பட்ட ‘வாரணம் ஆயிரம்’, ‘3’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘பருத்திவீரன்’, ‘வடசென்னை’ ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல இந்த படத்திற்கும் திரையரங்குகளில் கூட்டம் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர், கூடுதல் ஊதியம் போன்ற காரணத்தால் வேறு நிறுவனங்களுக்கு மாறலாம். ஆனால், முந்தைய நிறுவனத்தில் பிடித்தம் செய்த PF தொகையை மாற்ற UAN போர்ட்டலில் ஆன்லைன் மூலம் டிரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும். அதற்கு அனுமதி கிடைத்து புதிய நிறுவனத்தின் PF கணக்கிற்கு வர சில மாதங்கள் ஆகலாம். ஆனால், தற்போதைய ஆட்டோ டிரான்ஸ்ஃபர் மூலம் அந்த வேலை சுலபமாகிவிடும் என மாத சம்பளம் வாங்குவோர் கருதுகின்றனர்.
மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்ததென அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை அடுத்த பாண்டியநல்லூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘வாரிசு அரசியலுக்கு இந்த தேர்தலோடு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். உருட்டல், மிரட்டலுக்கு எல்லாம் அதிமுக அஞ்சாது. மக்களுக்காக கட்சி நடத்தாமல் விளம்பரத்திற்கு ஸ்டாலின் கட்சி நடத்துகிறார். தோல்வி பயத்தில் பிதற்றி வருகிறார்’ என்றார்.
EPF தொகையை, பழைய நிறுவனத்தின் கணக்கில் இருந்து புதிய நிறுவனத்தின் கணக்குக்கு தானாகவே மாறும் வசதி அமலாகியுள்ளது. முன்னதாக அந்த தொகையை டிரான்ஸ்ஃபர் செய்வது கடும் சவாலான பணி. இந்நிலையில், புதிய பட்ஜெட் அறிவிப்பின் படி தானாகவே டிரான்ஸ்ஃபர் ஆகும் வசதி இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம், பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக அலைய வேண்டிய பிரச்னை எதிர்காலத்தில் அறவே இருக்காது எனத் தெரிகிறது.
தூசி, மாசுபட்ட புகை, பருவநிலை மாற்றம் போன்றவற்றால் கண் அலர்ஜி ஏற்படும். கண்களில் எரிச்சல், கண் சிவப்பாகுதல், நீர் வடிதல் இதன் அறிகுறிகளாகும். கண் அலர்ஜியால் பாதிக்கப்பட்டோர் வெளியில் செல்லும் போது கண்ணாடி அணிந்து செல்லலாம். கண்கள் மற்றும் கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் வேண்டும். அரிப்பு உணர்வை குறைக்க, கண் இமைகளில் ஐஸ்கட்டி பைகள் வைக்கலாம். கண் மருத்துவரிடம் தவறாமல் சென்று பரிசோதனை செய்யுங்கள்.
வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை , ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற RR அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் MI அணி பேட்டிங் செய்ய உள்ளது. இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் RR வெற்றிபெற்றுள்ளது. ஆனால், 2 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை ஒரு வெற்றிகூட பெறவில்லை. இன்று எந்த அணி வெற்றிபெறும்?
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயரை மாற்றினால், அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உங்கள் வீட்டின் பெயரை நான் மாற்றினால், அது எனக்கு சொந்தமாகி விடுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், சீனா பெயரிட்ட 30 இடங்களும் இந்தியாவுக்கே சொந்தம் என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், அருணாச்சல் எல்லையில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தமிழகம் முழுவதும் கண் அலர்ஜியால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இளம் சிவப்பு கண் நோய் என்று அழைக்கப்படும் இந்த அலர்ஜி கோடை வெப்பம் காரணமாக பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சூரியனிலிருந்து வெளிப்படும் புறஊதா கதிர்வீச்சு போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது. இதிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள இயற்கை பானங்களை அருந்துமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
கொலை மிரட்டல் வருவதாகக் கூறி பாதுகாப்பு கேட்ட தமிழக பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் வெங்கடேசனுக்கு போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிட முடியாதது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வெங்கடேசன் மீது ஆந்திராவில் செம்மரக்கடத்தல் உள்ளிட்ட 49 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு பாதுகாப்பு கொடுத்தால் தவறான முன்னுதாரணமாகிவிடும் என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.