India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெங்களூரு – லக்னோ அணிகளுக்கு இடையேயான 15ஆவது ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், எந்த அணி புள்ளிப் பட்டியலில் முன்னேறப் போகிறது? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில், பெங்களூரு அணியில் சில மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், போட்டி விறுவிறுப்பாக இருக்கும். யார் வெற்றி பெறுவார்?
விருதுநகர் தொகுதிக்காக சரத்குமார், கட்சியை பாஜகவிடம் அடமானம் வைத்துள்ளதாக நடிகை விந்தியா விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் யாருக்கும் கொள்கை, கோட்பாடு என்று எதுவும் இல்லை. பாமக டீலிங் ஒத்து வந்ததால் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்கள். சரத்குமார் ஒரு சீட்டுக்காக கட்சியை கலைச்சிட்டார். டிடிவி, ஓபிஎஸ் பாதுகாப்புக்கு பாஜகவுடன் சேர்ந்துள்ளார்கள்” எனக் கூறினார்.
திருச்சி அருகே லாரி மீது மோதி ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இதில், பேருந்து ஓட்டுநர், பெண் பயணி சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
அனைத்தும் வாக்குகளையும் விவிபேட் சீட்டுடன் ஒப்பிடக்கோரும் மனு குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தற்போது ஒரு தொகுதியில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகள் மட்டும் ஒப்பிடப்படுகிறது. இந்நிலையில், அனைத்து வாக்குகளையும் ஒப்பிடக்கோரும் மனுவை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது.
ஜப்பானின் இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வடக்கு கடற்கரைப் பகுதிகளில் மட்டும் நள்ளிரவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. சேதங்கள் குறித்த விவரமும் வெளிவரவில்லை.
கத்தியை காட்டி பணம் பறிப்பது போல் பாஜக ED-ஐ வைத்து நோட்டீஸ் அனுப்பி பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், “மோடிக்கு தேர்தல் வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மீது பாசம் வந்துவிடுகிறது. எங்களை இந்தி படிக்க சொல்லும் பிரதமர், தமிழை கற்றுக்கொள்ளலாமே? அவருக்கு நல்ல தமிழ் ஆசிரியரை அனுப்பிவைக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.
நடிகரும், ஒடிசா கேந்திரபாரா பிஜு ஜனதாதளம் எம்.பியுமான அனுபவ் மொகந்தி நேற்று பாஜகவில் இணைந்துள்ளார். பிஜு ஜனதா தள கட்சியின் பிரசார பீரங்கியாக இருந்து வந்த இவர், கடந்த 30ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், டெல்லியில் மூத்த தலைவர்கள் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். ஏற்கெனவே, கடந்த வாரம் பார்த்ருஹரி மகதாப் என்ற மற்றொரு பிஜு ஜனதாதள எம்.பியும் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
IOB வங்கிக்கு ரூ. 620 கோடி செலுத்தக்கோரி IT நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரி நிலுவை வைத்திருப்பதாக கூறி, காங்கிரஸ் கட்சிக்கு அண்மையில் IT ரூ. 3,500 கோடி செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில், 2022-23 நிதியாண்டு வரி நிலுவைக்காக IOB வங்கிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதை எதிர்த்து முறையீடு செய்ய IOB திட்டமிட்டுள்ளது.
தேர்தல் அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுகவினரிடம், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றும்படி வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார். அப்போது முன்னாள் அமைச்சர் M.R.விஜயபாஸ்கர் உள்பட 5 பேரும், அலுவலரை ஆபாசமாக திட்டி, பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்து தாக்க முற்பட்டனர்.
தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ₹14000 நிதியுதவி, இனி 3 தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கா்ப்ப காலத்தின் 4வது மாதத்தில் ₹6000, குழந்தை பிறந்த 4வது மாதத்தில் ₹6000, குழந்தை பிறந்த 9வது மாதத்தில் ₹2000 ஆக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. பேறு காலத்தில் 3, 6ஆவது மாதங்களில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும்.
Sorry, no posts matched your criteria.