news

News April 2, 2024

பெயரை சீனா மாற்றியது அர்த்தமற்ற செயல்

image

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஊர்களின் பெயரை சீனா மாற்றியது அர்த்தமற்ற செயல்; சீனாவின் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிராகரிப்பதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். பெயர் மாற்றம் செய்வது என்பது ஒரு இடத்தை உரிமை கொண்டாடுவது ஆகாது; அருணாச்சல பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

News April 2, 2024

எம்.பி தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?

image

அடுத்த 2 வருடமும் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என அன்புமணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் பேசிய அவர், “எங்களின் முதல் இலக்கு 2026 சட்டப்பேரவை தேர்தல். திமுக, அதிமுக இல்லாத கூட்டணியை அமைப்பதே நோக்கமாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் வென்று டெல்லிக்கு சென்றால் அதை செய்ய முடியாது. எனவே, என் முழு கவனமும் தமிழகத்தின் மீதுதான் உள்ளது” என்றார்.

News April 2, 2024

பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்

image

பதஞ்சலி விளம்பரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதனை ஏற்க மறுத்தது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாக ராம்தேவை கண்டித்த நீதிமன்றம், எதன் அடிப்படையில் உங்கள் நிறுவன மருந்து மற்ற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியது.

News April 2, 2024

கனடாவில் தமிழ்நாட்டின் வெற்றித் திட்டம்

image

கனடாவில் தமிழ்நாட்டில் உள்ளதை போலவே பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “குழந்தைகள் நன்கு கற்க, அவர்கள் வயிறார சாப்பிட்டு வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். இந்தத் திட்டம், குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும். மேலும் கற்றல் திறனை மேம்படுத்த உதவும்” என தெரிவித்துள்ளார்.

News April 2, 2024

ஏர்டெல், ஜியோவுக்கு புதிய உத்தரவு

image

கால் ஃபார்வர்டிங் வசதிகளுக்கு USSD கோட் முறையை பயன்படுத்தக் கூடாது என JIO, AIRTEL, VODAFONE நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. USSD (*401#) கோட்கள் கால் ஃபார்வர்டிங் செய்ய பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் USSD அடிப்படையிலான கால் ஃபார்வர்டிங் வசதியை நிறுத்தவும், மாற்று வழிகளில் அச்சேவையை வழங்கவும் அறிவுறுத்திய மத்திய அரசு, ஏப்.15 முதல் இவ்விதியை அமல்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

News April 2, 2024

உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் ஆஜர்

image

பதஞ்சலி மருந்துகளுக்கான விளம்பரங்களில் தவறான தகவல்களை வெளியிடுவது தொடர்பான வழக்கில், அதன் நிறுவனர் பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீசுகளுக்கு பதிலளிக்காதது குறித்து கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், பாபா ராம்தேவ் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. இதையடுத்து, இதுபோன்ற விளம்பரங்கள் வெளியிடப்படாது என ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார்.

News April 2, 2024

மும்பை தாதா இருக்கும் அறை அருகே கெஜ்ரிவால் அடைப்பு

image

திகார் சிறையில் மும்பை தாதா சோட்டா ராஜன் இருக்கும் அறை அருகே கெஜ்ரிவால் அடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு வழக்குகளில் கைதாகி திகார் சிறையில் 2வது அறையில் சோட்டா ராஜன் அடைக்கப்பட்டுள்ளார். அந்த அறை அருகே வார்டு எண் 3ல் கெஜ்ரிவால் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், அறைக்கு வெளியே 2 காவலர்கள் பாதுகாப்புக்கு நிற்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News April 2, 2024

திமுக, அதிமுக, பாஜகவுக்கு என் மீதுதான் கண்

image

நாம் தமிழர் கட்சி தான் தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி என சீமான் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பேசிய அவர், “திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் என்னை எதிர்க்கிறார்கள். 10 பேர் ஒருவரை எதிர்த்தால் அவர் வளர்கிறார் என்று அர்த்தம். ஒரு கூட்டமே சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் அவன் வளர்ந்து விட்டான் என்று அர்த்தம். தமிழகத்தில் நாதக வளர்ந்துவிட்டது” எனக் கூறினார்.

News April 2, 2024

தமிழக மக்களே ரெடியா இருங்க!

image

தமிழகத்தில் வெப்ப அலையை (heat wave) எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை சென்னை, வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருக்கும். வெப்ப அலையின்போது குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல, தண்ணீர் வறட்சி ஏற்படும் என்பதால், இப்போதே சேமிக்க பழகுங்கள்.

News April 2, 2024

கொடூரமான ஆளுநரை திணித்துள்ளனர்

image

பிரிட்டிஷ் அரசாங்கம் மீண்டும் வந்துவிட்டதோ என்பதுபோல பாஜகவை பற்றி மக்கள் எண்ணுவதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், எந்தப் பணியையும் செய்யாத கொடூரமான ஆளுநரை தமிழகத்தில் திணித்துள்ளதாக சாடினார். மேலும், பேரிடரின் போது உதவி கேட்டால் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

error: Content is protected !!