India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத் தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இக்கட்சி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுக உடன் கூட்டணி அமைத்து, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறை அமமுக பாஜக உடன் கூட்டணி அமைத்ததால், அக்கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது. இஸ்லாமிய மக்கள் மத்தியில் ஓவைசி-க்கு ஓரளவுக்கு ஆதரவு இருக்கிறது.
மும்பையின் ஜெரால்டு கோட்ஸி நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசி சாதனை படைத்துள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் 157. 4 கி.மீ வேகத்தில் பந்துவீசி அவர் இந்த சாதனை படைத்தார். லக்னோவின் மயங்க் யாதவ், பஞ்சாபிற்கு எதிராக நேற்று முன்தினம் 155.8 கி.மீ பந்து வீசியிருந்தார். ஐபிஎல் வரலாற்றில் ஆஸி., வீரர் ஷான் டைட் கடந்த 2011ம் ஆண்டு 157.71 கி.மீ வேகத்தில் பந்து வீசி முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவில் ஒரே மாதத்தில் 76 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பல கோடி பேர் தங்களது தகவல் தொடர்புக்கு வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தேவையற்ற, போலிச் செய்திகள், ஆபாச வீடியோக்கள் பகிர்வது தெரிந்தால், அந்த கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கி வருகிறது. அதன்படி, இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 76.28 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. கண்ணழகால் ரசிகர்களை ஈர்த்த மீனா, முன்னணி நடிகர்களான ரஜினி, விஜயகாந்த், அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். சமீபத்தில் கணவரை இழந்த இவர், தற்போது ரியாலிட்டி ஷோ நடுவராக இருந்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு ரூ.35 – ரூ.40 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சைதாப்பேட்டையில் பிரம்மாண்ட வீடும் இருக்கிறது.
முதல்வர் பாணியில் மார்க்கெட், தேநீர் கடைகளில் இபிஎஸ் வாக்கு சேகரித்தார். கடந்த ஒரு வாரமாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் இபிஸ் இருவரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் பொதுக்கூட்டம், நடைபயணம், டீக்கடை என வாக்கு சேகரித்த நிலையில், இபிஎஸ் வாகனம் மற்றும் பொதுக்கூட்டங்களில் மட்டுமே ஆதரவு திரட்டி வந்தார். இந்நிலையில், இன்று அவர் திருப்பத்தூர் பகுதியில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், துப்பாக்கியால் சுடவே பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து நடந்த சண்டையில் 8 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கணிசமான அளவு பெண்களின் வாக்கு வங்கி இருந்தது. தேர்தல் குறித்து ஆய்வு நடத்தும் அமைப்புகளும் தரவுகள் மூலம் இதை உறுதி செய்தன. ஜெயலலிதா காலத்தில் 46% பெண்கள் அதிமுகவிற்கும், 35% பெண்கள் திமுகவிற்கும் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் உரிமைத் தொகை திட்டம் மூலம் பெண்களின் வாக்கு கணிசமாக திமுகவிற்கு விழ வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஒரு வாகனம், ஒரே ஃபாஸ்டேக் நடைமுறை நாடு முழுவதும் நேற்று அமலுக்கு வந்தது. ஒரே ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி பல வாகனங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், ஒரு குறிப்பிட்ட வாகனத்துக்கு பல ஃபாஸ்டேக்குகள் கொடுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கவே புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே வாகனத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபாஸ்டேக் இருந்தால் அவை செயல்படாது.
மூளையின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் மார்ச் 14ம் தேதி முதல் ஐசியுவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று வேலூர் சென்றுள்ளார். அங்கு பரப்புரை செல்வதற்கு முன்பு மருத்துவமனையில் உள்ள துரை தயாநிதியை, மனைவி துர்கா உடன் சென்று நலம் விசாரித்துள்ளார்.
கள்வன் படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார். ஆக்ஷன், அட்வென்ச்சர், எமோஷன் என அனைத்தும் கலந்து கலவையான இந்த படத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த அவர், குடும்பமாக வந்து படத்தை தாராளமாக என்ஜாய் பண்ணலாம் எனக் கூறினார்.
ஜி.வி.பிரகாஷ், இவானா நடிப்பில் இப்படம் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ்-க்கு இப்படம் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.