India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுபான கொள்கை வழக்கில் ED கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்குக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மதுபான வழக்கில் இதுவரை கெஜ்ரிவால் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முதல் ஆளாக இவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் சிங் 6 மாதமாக சிறையில் இருந்து வந்தார். இதே வழக்கில் கைதாகி டெல்லி முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் சிறையில் உள்ளனர்.
ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு ₹ 12 கோடி சம்பளம் வாங்குகிறார். முன்னாள் உலக அழகியான இவர், தமிழில் இருவர், ஜீன்ஸ், எந்திரன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களிலும், இந்தியில் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 50 வயதாகும் நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். அவருக்கு ₹ 776 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதில் ₹ 21 கோடி மதிப்பிலான துபாய் சொகுசு பங்களாவும் அடங்கும்.
3ஆவது முறையாக ஆட்சியமைத்ததும், ஊழலுக்கு எதிராக தற்போது எடுத்துள்ளதை விட, மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் 3வது முறையாக தனது அரசு ஆட்சியமைக்க இன்னும் சில நாள்களே இருப்பதாகவும், அதுபோல் மீண்டும் ஆட்சியமைத்ததும், ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று RCB vs LSG அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது. முன்னதாக, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராகுலுக்கு பதிலாக நிகோலஸ் பூரன் கேப்டன் பொறுப்பு வகித்தார். இதனிடையே, KKRக்கு எதிரான போட்டியில் தங்கள் சொந்த மைதானத்தில் தோல்வியடைந்த RCB, இன்றைய போட்டியில் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
நேருவும், இந்திராவும் கச்சத்தீவை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலுக்காக கச்சத்தீவு குறித்து பாஜக பேசுவதாக கூற முடியாது என்றும், நாட்டின் ஒரு பகுதி இழக்கப்பட்டதை குறித்து பேச சுப முகூர்த்த தினம் தேவையில்லை எனவும் கூறினார். கச்சத்தீவு வழங்கப்பட்ட போது, கூட்டணியில் இருந்த திமுக, காங்., தற்போதும் கூட்டணியில் உள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2019இல் இங்கு போட்டியிட்ட இவர், 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில் இரண்டாவது முறையாக இங்கு களம் காண்கிறார். இவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா போட்டியிடுகிறார். இதனால், இந்த தொகுதியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வயநாட்டில் வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுடன், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் சந்தித்து பேசி வருகின்றனர். கெஜ்ரிவால் திகார் சிறையில் இருப்பதால், ஆட்சி நிர்வாகத்தை சரியாக செயல்படுத்த முடியவில்லை, தேர்தல் பணிகளிலும் ஈடுபட முடியவில்லை. இதனால், முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்வார் என்றும் அவருக்கு பதில் சுனிதா புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கு வழங்கிய நிதிக்கு மாநில அரசு கணக்கு கூற வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னைக்கு ரூ.5,000 கோடி சிறப்பு நிதி வழங்கியதாக கூறிய அவர், வெள்ள பாதிப்பு ஏற்பட்டவுடன் ரூ.900 கோடி நிதி ஒதுக்கியதாகவும் கூறினார். மத்திய அரசு வழங்கிய ரூ.5,900 கோடியை தமிழ்நாடு அரசு என்ன செய்தது? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜகவை விமர்சனம் செய்வதால் அக்கட்சி வளர்ந்து விட்டதாக அர்த்தம் இல்லை என முத்தரசன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் 2ஆம் இடத்துக்கு வர முடியாது, பல தொகுதிகளில் பாஜகவுக்கு தோல்வியோடு, டெபாசிட்டும் கிடைக்காது என்று கூறிய அவர், ஆட்சியில் இருப்பதால் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய துடிக்கும் பாஜகவுக்கு தமிழக மக்கள், மக்களவைத் தேர்தலில் தக்க பதிலடி தருவார்கள் எனக் கூறினார்.
சுந்தர்.சி தொடர்ந்து பேய் படம் எடுக்க தனது மகள்கள்தான் காரணம் என அவரது மனைவி குஷ்பு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முறையில் எப்படி ரசிகர்களை மகிழ்விப்பது என யோசித்துக் கொண்டே இருப்பார் என கூறிய அவர், தங்கள் மகள்கள் இருவருக்கும் ஹாரர் படம் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால்தான் அந்த ஜானரிலேயே தொடர்ந்து படம் எடுப்பதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.