news

News April 15, 2024

முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி காலமானார்

image

முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணியின் தலைவருமாகிய புலவர் இந்திர குமாரி சென்னையில் வயது முதிர்வால் காலமானார். உடல்நிலை பாதிப்பு காரணமாக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேலூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட இந்திர குமாரி, 1991 முதல் 96 வரை ஜெயலலிதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பின்னர் 2006ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.

News April 15, 2024

போருக்கு இடையே பாகிஸ்தான் செல்லும் ஈரான் அதிபர்

image

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி வரும் 22ஆம் தேதி பாகிஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு பாகிஸ்தான் ஆட்சியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இரு நாடுகளும் முக்கிய பொருளாதார நலன்களைப் பகிர்ந்துகொள்வதால் ஈரானிய அதிபரின் பாகிஸ்தான் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

News April 15, 2024

நான் இறந்துவிட்டதாக எண்ணியிருந்தேன்

image

நியூயார்க் தாக்குதலின் போது தான் இறந்து விட்டதாக எண்ணியதாக எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நினைவலைகளை பகிர்ந்துள்ளார். 2022ஆம் ஆண்டு நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில், அவர் மீது பாய்ந்த ஹாதி மடார் என்பவர் கத்தியால் சரமாரியாக குத்தினார். இது குறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில், தனது இடது கண் அரைகுறையாக வேகவைத்த முட்டை போன்று இருந்ததாகவும், ஒரு கண்ணை இழந்தது மிகவும் வேதனையளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

News April 15, 2024

சிசிடிவியால் வசமாக சிக்கிய பெண்

image

பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணின் ஸ்கூட்டரை பறிமுதல் செய்த போக்குவரத்து காவலர்கள், அவருக்கு ரூ.1.36 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம். ஆனால், இந்தப் பெண் ஹெல்மெட் அணியாமல் பயணித்தல், போன் பேசியபடி பயணித்தல், சிக்னலை மதிக்காமல் பயணித்தல் என 270 முறை விதிமீறலில் ஈடுபட்டது சிசிடிவி காட்சிகளில் உறுதியாகியுள்ளது. இந்நிலையில், மொத்தமாக சிக்கியுள்ளார்.

News April 15, 2024

ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த டெஸ்லா

image

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது ஊழியர்களில் 10% பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. டிசம்பர் கணக்கீட்டின்படி, இந்நிறுவனத்தில் மொத்தம் 1,40,473 பேர் பணியாற்றுகின்றனர். தற்போதைய தகவலின்படி சுமார் 15,000 பேர் வேலையை இழக்க உள்ளனர். உலக சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருந்தாலும், விற்பனையில் போட்டியும் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

News April 15, 2024

287 ரன்கள் குவித்தது SRH

image

RCB அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் SRH அணி 287/3 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற தனது பழைய சாதனையை (277) SRH முறியடித்துள்ளது. இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹெட் 102, க்ளாஸன் 67, மார்க்ரம் 32*, சமத் 37* ரன்கள் அடித்தனர். ஒட்டுமொத்தமாக SRH அணி சார்பில் 22 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. RCB சார்பில் பெர்குசன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

News April 15, 2024

வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இதை சாப்பிடுங்கள்

image

தினசரி சாப்பிடும் உணவில் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொள்வது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க உதவும் என்கிறார்கள். வெங்காயத்தில் அதிகம் தண்ணீர் உள்ளதால், உடலுக்குத் தேவையான நீர் சத்து கிடைக்கிறது. வெங்காயம் இயற்கையாகவே குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டது. எனவே இது உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி, குளிர்ச்சியைக் கொடுக்கும். இதனால்தான் பலரும் பழைய சாதத்துடன் வெங்காயம் எடுத்துக்கொள்கிறார்கள்.

News April 15, 2024

விடிய விடிய மழை வெளுக்கும்

image

தமிழகத்தில் இன்று இரவு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கோவை, திருப்பூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News April 15, 2024

ரயிலில் பயணியை கடித்த பாம்பு

image

குருவாயூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணியை பாம்பு கடித்ததால் பரபரப்பானது. மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்ற பயணி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவரது இருக்கையின் கீழ் இருந்த பாம்பு அவரை கடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏட்டுமானூர் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News April 15, 2024

அதிரடியாக அரை சதம் கடந்தார் க்ளாஸன்

image

RCB அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் SRH வீரர் க்ளாஸன் 23 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். இது நடப்பு தொடரில் இவர் அடிக்கும் மூன்றாவது அரை சதமாகும். எதிரணியின் பந்துவீச்சை சிதறடித்து வரும் இவர் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இவரது அதிரடி ஆட்டத்தால் SRH அணி 15 ஓவர்கள் முடிவில் 205/2 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம் 7* ரன்களுடன் களத்தில் உள்ளார்.

error: Content is protected !!