India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பிரதமர் மோடி கச்சத்தீவை ஏன் மீட்கவில்லை என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், ‘கச்சத்தீவை மீனவர்கள் பயன்படுத்திவந்த நிலையில் சமீப காலமாகவே அது பிரச்சனையில் உள்ளது. தற்போது கச்சத்தீவை மீட்போம் எனக்கூறிவரும் பாஜக 10 ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தது என வினவியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட மாட்டேன் என இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, நான் கடினமாக உழைத்து வருகிறேன். எனது பந்து வீச்சு திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன். இதனால் IPL மற்றும் டி20 உலக கோப்பைத் தொடர்களைத் தியாகம் செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸின் இந்த முடிவால் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளின் விலை 10% அளவுக்கு உயர்ந்துள்ளது. கொரோனா காரணமாக மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால் மருந்துகளின் விலையை உயர்த்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. அதற்கு மத்திய அரசு ஒப்புதல் தந்ததை தொடர்ந்து, பாராசிட்டமால், ஃபெர்னோபார்பிடோன், ஃபெனிடோயின் சோடியம், அசித்ரோமைசின் உள்பட 800 மருந்துகளின் விலை கணிசமாக உயர்ந்தது. நேற்று முதல் விலை உயர்வு அமலுக்கு வந்தது.
கச்சத்தீவு விவகாரத்தில் உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிடும் பாஜகவிற்கு இலங்கை தமிழர்களை பற்றி கவலையில்லை போல என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து X தளத்தில், கச்சத்தீவு பிரச்னையில் உண்மையில் என்ன நடந்தது என்று பாஜக அரசு 2015இல் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. அந்த கடிதத்தைப் பற்றிக் கேட்டால் பாஜகவினர் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக எழுந்த புகாரில், மேல் நடவடிக்கை கூடாது என தேசிய SC/ST ஆணையத்தை அறிவுறுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் புகார் குறித்து ஆணையம் விசாரிக்கலாம் என தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை, ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கில், மத்திய அரசு அளித்த பதிலை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணையை ஏப்.25-க்கு ஒத்திவைத்தது.
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரை நடிகராக வலம் வந்த ஆடம்ஸ் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். ரொமாண்டிக் த்ரில்லர் ஜானரில் அவர் இயக்கியுள்ள படத்திற்கு ‘கேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது ரிலீசாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தியா கூட்டணியினர் தேசத்தின் நலனுக்காக தேர்தலில் போட்டியிடவில்லை, தங்கள் சுயநலத்திற்காகவே போட்டியிடுகின்றனர் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், ‘நாட்டில் அரசியல் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம், தேச நலன் பேசும் பாஜக இருக்கிறது. மறுபுறம் நாட்டை கொள்ளையடிக்கும் வழியை கண்டுபிடிக்கும் காங்கிரஸ் இருக்கிறது’ என சாடியுள்ளார்.
கன்னட நடிகர் சிவராஜ் குமார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயிலர், கேப்டன் மில்லர் படங்களில் நடித்த அவர், தற்போது கன்னடப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும், மக்களவைத் தேர்தலில் காங்., சார்பில் போட்டியிடும் தனது மனைவியை ஆதரித்து பிரசாரமும் செய்து வருகிறார். இதனால், அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்ததாக பள்ளிக் கல்வித்துறை இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு புதிதாக 2.77 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நிலவரப்படி 3 லட்சத்து 167 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
கத்துக்குட்டி இயக்குநர்களுடன் பணிபுரிய விரும்பவில்லை என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் படத்தின் இயக்குநர் குறைந்தது ஒரு படமாவது இயக்கி இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்த அவர், இதுபோன்ற விஷயங்களை எல்லாம் கவனித்த பிறகே இயக்குநரை தேர்வு செய்வேன் எனக் கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த கருத்து புதுமுக இயக்குநர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.